Skip to main content

MAAYA RAJJYAM - 14

சமூகத்தில் நிலவும் சில உண்மைக்குப்புறம்பான தகவல்கள்


திகில்களும் , மர்மங்களும் தாராளமாக கொட்டிக்கிடக்கும் இந்த பெர்முடா முக்கோணம் நோக்கிய ஆய்வில் குறிப்பிடத்தக்க உறுதியான தீர்வு முன்வைக்கப்படாத காரணத்தினால் மக்கள் மத்தியில் இயல்பாக ஏற்படுகின்ற பதற்றமான சூழ்நிலை காரணமாக பல வதந்திகள் உருவெடுக்கத்தொடங்கியுள்ளன.
இவ்வாறான வதந்திகள் அவை தொடர்பான எண்ணங்களை மிகவும் வித்தியாசமான முறையில் ஏற்படுத்திவிடுவதால் அவர்கள் தங்களுக்குள்ளேயே பல புதிய கேள்விகளை ஏற்படுத்திக்கொண்டு மர்மங்களின் அளவையும் அதிகரித்து விடுவது தான் வேடிக்கையாக உள்ளது.

பெர்முடா முக்கோணத்தின் இரகசியம் தான் என்ன?


கேள்விப்படும் அனைத்து சம்பவங்களையும் திகில் மர்மம் மற்றும் அமானுஷ்ய விடயங்களின் கலவையாக எமது மனங்களில் எண்ணத்தை தோற்றுவிக்கும் இந்த புரியாத புதிரின் விடை தான் என்ன?

பொதுவாக மக்களால் அறியப்பட்ட மனித அறிவியல் அம்சங்களின் அனைத்து சாத்தியப்பாடுகளையும் பொய்யாக்கும் வகையில் மக்களின் மனதில் மாபெரும் அதிர்வலைகளின் தோற்றத்திற்கு காரணமாக திகழும் இப் பெர்முடா முக்கோணம் தொடப்போகும் கரை தான் என்ன?

தொழில்நுட்ப வசதிகள் பலவற்றைக்கொண்ட பல கப்பல்களையும் பல விமானங்களையும் திடீரென மறையச் செய்த இம்முக்கோணம் தொடர்பான எனது முடிவை உங்களுக்குத்தெரிவிப்பதன் மூலம் கருந்துளை மற்றும் பிரபஞ்சத்தில் நிலையற்ற காலத்தன்மை பற்றிய விளக்கத்தினை உங்களுக்கு வழங்கலாமென எண்ணுகிறேன்.

தொடரும்.....

Comments

  1. NICE.....

    T.KIRUBA

    ReplyDelete
  2. நன்றாகவுள்ளது.
    உங்களது ஆராச்சி முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...