“அக்கா நான் நிச்சயமா ஒரு டொக்டரா வந்து உன்ன ஒரு மகாராணி மாதிரி வச்சிருப்பன்! “ ”நீ என்ர புள்ளடா என்ர ஒவ்வொரு அசைவும் என்ன சொல்லுதுண்டு எனக்குத் தெரியும்.“ கடந்தகால வார்த்தைகள் குமரேசனின் உள்ளத்தில் கூரிய அம்புகளென பாய்ந்து தொடர் வலிகளை உண்க்கிய வண்ணம் இருந்தன. மெழுகுதிரி பிறருக்கு இருள் அகற்றி ஒளி கொடுத்து தன்னை அணுஅணுவாய் உருக்குலைப்பது போல தன் அக்காளும் சிறு வயதில் இருந்து தான் அனுபவிக்கவேண்டிய அனைத்து ஆசாபாசங்களையும் புறந்தள்ளி எனக்காக எனது ஆசாபாசங்களுக்காக எனது ஒளிமயமான கௌரவ வாழ்க்கைக்காக தன்னை உருக்குலைத்த்தை எண்ணி எண்ணி விழிகளில் கண்ணீர் குளம் எனத்தேங்காமல் வற்றாத அருவியாக பாய பாய கதறினான் மௌன மொழியில்……பின் தன்னைத்தானே தேற்றியபடி “ நோ ! இவ்வளவு காலம் நான் எனக்காகவே வாழ்ந்துட்டன்.இனியாவது எனது அக்காவுக்காக வாழணும்.அவங்க கண்ணில இருந்து கண்ணீர பாக்கணும்னா அது புன்னகை மிகுதியால தான் வரணும்” என்று எண்ணியபடி கதிரையில் அமர்ந்திருந்தான். மெல்லத்திறந்த்து கதவு. “டொக்….. டொக்……டொக்….” கதவு திறப்பதையும் வைத்தியரின் சப்பாத்து ஒலியையும் அவதானித்து உடன் எழுந்து “சார் இப்ப அக்கா...