Skip to main content

கண்ணம்மா 05


குமரேசனோ தன் அக்கா படும் சிரமத்தை தடுக்க முடியவில்லையே என உள்ளத்தால் நொந்து அவ்விடத்தை விட்டு அகன்றான். ஒருவாறு அந்நாள் கழிந்தது.

திங்கட்கிழமை - காலைப்பொழுதினில் தன் தம்பிக்கு தேநீர் தயாரித்து கொடுத்த பின்னர் செல்லம்மா வீட்டிற்கு சென்று வருவதாக வெளியேறினாள், வீட்டை விட்டு. அவள் கால்கள் செல்லம்மா வீட்டையும் கடந்து சென்றன. செல்லம்மா வீட்டை தாண்டி எங்கேயோ சென்றன..
அக்கால்கள் ஈற்றில் சிவப்பு ''சக'' குறியீட்டை நாடியது.. 'வைத்தியசாலையை' அடைந்து அங்கு இரத்ததானம் கொடுக்கும் இடத்திற்கு சென்று குறிப்பிட்ட அளவு கொடுத்த பின்னர் அதற்குரிய பணத்தை பெற்றுக்கொண்டு நேரடியாக அடகுவைக்கும் இடத்திற்கு சென்று காதுகளில் மினுங்கிக் கொண்டிருந்த இரு தோடுகளினையும் அடகு வைத்து போலித்தோடுகளை அணிந்து கொண்டு அயலவர்களிடமும் குறிப்பிட்ட ஒரு தொகைப்பணத்தைப் பெற்று அமைதியாக வீட்டினுள் வந்து சேர்ந்தாள். குமரேசன் புறப்பட தயாராக இருக்கும் வேளையில் காசைக்கொண்டு வந்து குமரேசனிடம் கொடுத்து,

"தம்பி கவனமாப்படீடா நீ எனிவரும் போது ஒரு டொக்டராத்தான் வரணும் அப்பத்தான்டா எல்லாரும் நம்மள மதிப்பாங்க""

என்று தளதளத்த குரலில் கெஞ்சிய முகத்துடன் தன் தம்பியை கேட்டுக்கொண்டாள்.

"அக்கா நிச்சயம் ஒரு டொக்டரா வந்து உன்ன ஒரு மகாராணி மாதிரி வச்சிருப்பன்.. அதோட நம்ம ஊரு மக்களுக்கு அலவச மாக மருத்துவமும் பாப்பன் . நீ இருந்து இதையெல்லாம் பாக்கத்தான போறாய்"

என்று கூறி கண்ணம்மா நெஞ்சில் பாலை வார்த்தான்.


பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுப்பிரிய போகிறோம் என்று எண்ணி ஒருவரை ஒருவர் நோக்கியபடி மனத்தினால் குமுறினார்கள்;கதறினார்கள் ; கண்ணீர் மல்கினர்;
என்ன செய்வது இவர்களைத்திருப்திப்படுத்த யார் உள்ளார்கள் இந்தப்பூவுலகில்?  யாரும் இலலையே? ஈற்றில் கண்ணம்மா ஒருவாறு குமரேசனை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டாள். இவ்வாறு அவள் தனது உடலை வருத்தி வேலை செய்யச் செய்ய அவளது உடலும் பலவீனப்பட்டுக்கொண்டே சென்று கொண்டிருந்தது.

இவ்வாறு மாதாந்தம் உழைத்து அரைவாசியினை தனது தம்பிக்கும் மீதியை அடகு வைத்தவற்றை மீட்பதற்கும் பயன்படுத்தினாள். மனஞ்சோர்வுறும் கணங்களில்

"கண்ணம்மா இவ்வளவு காலம் பொறும காத்த மாதிரி இன்னுங் கொஞ்ச காலந்தான பொறுத்திரு. தம்பி நல்ல டொக்டரா வரட்டும். அப்புறம் நீ மகாராணிதானடி. என்று மனத்தால் கூறி தன்னைத் தேற்றிக் கொள்வாள் "    இவ்வாறு மாதங்கள் பல உருண்டோடின.

குமரேசன் பட்டப்படிப்பு முடிக்க ஒரு வருடம் தான் உள்ளது. இவ்வாறு இருக்கையில் தபால்காரனின் சைக்கிள் மணி
 “கிணிங் கிணிங் ” ஒலியெழுப்ப
“கண்ணம்மா! உன்ர தம்பி குமரேசனிட்ட இருந்து ஒரு தபால்“
என்று தபால்காரன் ஒலியெழுப்பியதும் கண்ணம்மா ஓடி வந்து எல்லை அற்றதோர் சந்தோசத்தால் கண்களில் ஆனந்தக் கண்ணீர் ஊற்றெடுக்க அதை வாங்கி ஆவலுடன் படித்தாள்......

தொடரும்.....

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...