Skip to main content

கண்ணம்மா 05


குமரேசனோ தன் அக்கா படும் சிரமத்தை தடுக்க முடியவில்லையே என உள்ளத்தால் நொந்து அவ்விடத்தை விட்டு அகன்றான். ஒருவாறு அந்நாள் கழிந்தது.

திங்கட்கிழமை - காலைப்பொழுதினில் தன் தம்பிக்கு தேநீர் தயாரித்து கொடுத்த பின்னர் செல்லம்மா வீட்டிற்கு சென்று வருவதாக வெளியேறினாள், வீட்டை விட்டு. அவள் கால்கள் செல்லம்மா வீட்டையும் கடந்து சென்றன. செல்லம்மா வீட்டை தாண்டி எங்கேயோ சென்றன..
அக்கால்கள் ஈற்றில் சிவப்பு ''சக'' குறியீட்டை நாடியது.. 'வைத்தியசாலையை' அடைந்து அங்கு இரத்ததானம் கொடுக்கும் இடத்திற்கு சென்று குறிப்பிட்ட அளவு கொடுத்த பின்னர் அதற்குரிய பணத்தை பெற்றுக்கொண்டு நேரடியாக அடகுவைக்கும் இடத்திற்கு சென்று காதுகளில் மினுங்கிக் கொண்டிருந்த இரு தோடுகளினையும் அடகு வைத்து போலித்தோடுகளை அணிந்து கொண்டு அயலவர்களிடமும் குறிப்பிட்ட ஒரு தொகைப்பணத்தைப் பெற்று அமைதியாக வீட்டினுள் வந்து சேர்ந்தாள். குமரேசன் புறப்பட தயாராக இருக்கும் வேளையில் காசைக்கொண்டு வந்து குமரேசனிடம் கொடுத்து,

"தம்பி கவனமாப்படீடா நீ எனிவரும் போது ஒரு டொக்டராத்தான் வரணும் அப்பத்தான்டா எல்லாரும் நம்மள மதிப்பாங்க""

என்று தளதளத்த குரலில் கெஞ்சிய முகத்துடன் தன் தம்பியை கேட்டுக்கொண்டாள்.

"அக்கா நிச்சயம் ஒரு டொக்டரா வந்து உன்ன ஒரு மகாராணி மாதிரி வச்சிருப்பன்.. அதோட நம்ம ஊரு மக்களுக்கு அலவச மாக மருத்துவமும் பாப்பன் . நீ இருந்து இதையெல்லாம் பாக்கத்தான போறாய்"

என்று கூறி கண்ணம்மா நெஞ்சில் பாலை வார்த்தான்.


பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுப்பிரிய போகிறோம் என்று எண்ணி ஒருவரை ஒருவர் நோக்கியபடி மனத்தினால் குமுறினார்கள்;கதறினார்கள் ; கண்ணீர் மல்கினர்;
என்ன செய்வது இவர்களைத்திருப்திப்படுத்த யார் உள்ளார்கள் இந்தப்பூவுலகில்?  யாரும் இலலையே? ஈற்றில் கண்ணம்மா ஒருவாறு குமரேசனை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டாள். இவ்வாறு அவள் தனது உடலை வருத்தி வேலை செய்யச் செய்ய அவளது உடலும் பலவீனப்பட்டுக்கொண்டே சென்று கொண்டிருந்தது.

இவ்வாறு மாதாந்தம் உழைத்து அரைவாசியினை தனது தம்பிக்கும் மீதியை அடகு வைத்தவற்றை மீட்பதற்கும் பயன்படுத்தினாள். மனஞ்சோர்வுறும் கணங்களில்

"கண்ணம்மா இவ்வளவு காலம் பொறும காத்த மாதிரி இன்னுங் கொஞ்ச காலந்தான பொறுத்திரு. தம்பி நல்ல டொக்டரா வரட்டும். அப்புறம் நீ மகாராணிதானடி. என்று மனத்தால் கூறி தன்னைத் தேற்றிக் கொள்வாள் "    இவ்வாறு மாதங்கள் பல உருண்டோடின.

குமரேசன் பட்டப்படிப்பு முடிக்க ஒரு வருடம் தான் உள்ளது. இவ்வாறு இருக்கையில் தபால்காரனின் சைக்கிள் மணி
 “கிணிங் கிணிங் ” ஒலியெழுப்ப
“கண்ணம்மா! உன்ர தம்பி குமரேசனிட்ட இருந்து ஒரு தபால்“
என்று தபால்காரன் ஒலியெழுப்பியதும் கண்ணம்மா ஓடி வந்து எல்லை அற்றதோர் சந்தோசத்தால் கண்களில் ஆனந்தக் கண்ணீர் ஊற்றெடுக்க அதை வாங்கி ஆவலுடன் படித்தாள்......

தொடரும்.....

Comments

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...