Skip to main content

மாய ராஜ்ஜியம்- 01


ஆழ்கடலின் சுரங்கங்கள் தொட்டு விண்ணிலே தரித்து நிற்கும் அரங்கங்கள் வரை இப்பூவுலகில் மனிதனின் வளர்ச்சி வியாபித்துள்ளது. வியக்கத்தக்க துகள்களையும், விசாலமான பால்வீதிகளை விட பெரிய பிரபஞ்சத்தையும் எளிதாக இனங்கண்டு அவற்றின் முக்கால போக்குகளையும் துல்லியமாக கூறும் வகையில் கொள்கைகள் பலவற்றை உண்டாக்கியுள்ள மனிதனின் அறிவு வளர்ச்சி என்பது அளப்பரியது தான். ஆயினும் இவ்வளர்ச்சிகள் மக்களின் மனதில் உண்டாக்கிய உவகையை மூடுமளவிற்கு பல உலகியல் திகில் சம்பவங்களும், பிரதேசங்களும்  இருப்பது என்பது மறக்கமுடியாத உண்மை.

ஆனாலும் ஆய்வாளர்களின் விளக்கவுரைகள் உலகின் பல்வேறு சம்பவங்களுக்கும், அச்சம்பவங்களின் திகிலின் தரத்தை குறைப்பதற்குமான நியாயத்தை உண்டாக்குவதுமுண்டு. சிலவற்றிற்கு அது முடியாமல் போவதுமுண்டு. இவற்றில் உலகின் அறிவியல் மற்றும் இராணுவ வல்லாதிக்கத்தில் சிகரத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும் அமெரிக்காவை அண்டிய பிரதேசத்தில் உள்ள பெர்முடா பேய் முக்கோணம் முதன்மையான இடத்தை வகிக்கிறது என்றால் அது மிகையாகாது.

இப்பிரதேசம் தொடர்பான விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ள நான் அப்பகுதியின் மர்மங்களிற்கான எனது முடிவை பலமான விஞ்ஞானப்பின்னணிகளின் உதவியுடன் இறுதியில் விளக்கி உள்ளேன். அம்முடிவு தொடர்பாக எழக்கூடிய சந்தேகங்களையும் அவற்றிற்கான எனது பதில்களையும் கேள்வி - பதில் வடிவில் வழங்கியிருக்கிறேன். பெர்முடா முக்கோணப்பகுதியை திகில் உணர்வோடும் மர்ம ஏக்கத்தோடும் நோக்குகின்ற அனைவருக்கும் இவ்வாய்வு முழுத்திருப்தியை அளிக்கும் என எதிர்பார்க்கிறேன்.....

                                                       தொடரும் .......

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன..........

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...