Skip to main content

MAAYA RAJJYAM 07

குறுகிய நாட்கள் இடைவெளியின் பின்னர் மீண்டும் வாசகர்களாகிய உங்களுடன் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி................

மாய ராஜ்ஜியம் - ஓர் ஆய்வு -07


STAR ARIEL



ஆண்டு :- 1949
மாதம் :- 01
திகதி :- 17

பயணத்தை ஆரம்பித்த இடம் :- இங்கிலாந்து

விமானத்திலிருந்தவர்கள் :- 15 பயணிகள், 7 சிப்பந்திகள்

பெற்றோல் நிரப்பிய இடம் :- பெர்முடா தீவு

புறப்பட்ட நேரம் :- காலை 7.45

விமானி கடைசியாக தொடர்பு கொண்ட நேரம் :- காலை 8.30

தெரிவித்த தகவல் :- காலநிலை மிகவும் நன்றாக உள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே பயணத்தை பூர்த்தி செய்து விடுவோம்.

மறைந்து போன நேரம் :- காலை 8.32 இற்குப்பின்

தேடுதல் முயற்சி :-  72 விமானங்கள் , 2 விமானந்தாங்கி கப்பல்கள் மொத்தமாக 150 000 சதுர பரப்பளவிற்கு

தடயங்கள் :- இல்லை

இதன்பின்பு 1949 இல் மட்டும் 9 விமானங்கள் மறைந்து போயின...


DOUGLUS DC3


ஆண்டு :- 1948
மாதம் :- 12
திகதி :- 28

பயணப்பாதை :- சான்ச்சுரவானில் இருந்து மியாமி வரையானது

பயணிகளின் எண்ணிக்கை :- 36

விமானி பேசிய நேரம் அதிகாலை :- 4.15

தெரிவித்த தகவல் :- ”நாங்கள் தெற்கில் 50 மைல் தொலைவில் வந்துகொண்டிருக்கிறோம். மியாமியினுடைய விளக்குகள் எனக்கு மங்கலாகத் தெரிகின்றன. இறங்குவதற்கான விபரங்களுக்காக காத்திருக்கிறேன்.”

சம்பவம் :- இதன்பின் தொடர்புகள் இல்லை. விமானம் காணாமல் போனது.

தேடுதல் முயற்சிகள் :- பல விமானங்கள் மற்றும் கப்பல்கள்.

தடயம் :- எதுவும் இல்லை.


இரு KC 135 ரக JET விமானங்கள்


ஆண்டு :- 1963
மாதம் :- 09
திகதி :- 28

விமானி தெரிவித்ததகவல் :- ”காலநிலை தெளிவாக உள்ளது”

சம்பவம் :- பின்னர் 2 விமானங்களும் மறைந்து போயின. இச்சம்பவத்தின் போது பல நூற்றுக்கணக்கான பயணிகளும் காணாமல் போயினர்.

தடயங்கள் :- எதுவும் இல்லை


C-132 கார்கோமாஸ்டர் விமானம்

ஆண்டு :- 1963
மாதம் :- 09
திகதி :- 22


விமானியின் இறுதித்தகவல் :- ”விமானத்தின் பயணம் சுமூகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது”

சம்பவம் :- விமானம் சிறிது நேரத்தில் மறைந்து போனது.


தடயம் :- எதுவும் இல்லை



FLYING BOX CAR


ஆண்டு :- 1965
மாதம் :- 06
திகதி :-05


சம்பவம் :-10 பேருடன் மறைந்து போனது.

மறைந்த இடம் :- பஹாமஸ் இற்கு அருகாமையில்

தடயங்கள் :- எதுவும் இல்லை


YC 122

ஆண்டு :- 1967
மாதம் :- 01
திகதி :-11


சம்பவம் :- 4 பேருடன் மறைந்து போனது.

மறைந்த இடம் :- இற்கு அருகாமையில்

தடயங்கள் :- எதுவும் இல்லை

இவை தவிர 1940 முதல் 2000 வரையான காலப்பகுதியில் மட்டும் சுமார் 100 இற்கும் மேற்பட்ட விமானங்கள் இப்பகுதியில் மறைந்து போயிருக்கின்றன. ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்தின் போதும் எதுவித தடயமும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.


அடுத்த பதிவில் மாயராஜ்ஜியம் விழுங்கிய கப்பல் தொகுப்பைக் காணலாம்.....


மாயங்கள் தொடரும் 
உங்கள் உண்மையின் பக்கத்தில்!!!!!

Comments

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...