Skip to main content

MAAYA RAJJYAM 07

குறுகிய நாட்கள் இடைவெளியின் பின்னர் மீண்டும் வாசகர்களாகிய உங்களுடன் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி................

மாய ராஜ்ஜியம் - ஓர் ஆய்வு -07


STAR ARIEL



ஆண்டு :- 1949
மாதம் :- 01
திகதி :- 17

பயணத்தை ஆரம்பித்த இடம் :- இங்கிலாந்து

விமானத்திலிருந்தவர்கள் :- 15 பயணிகள், 7 சிப்பந்திகள்

பெற்றோல் நிரப்பிய இடம் :- பெர்முடா தீவு

புறப்பட்ட நேரம் :- காலை 7.45

விமானி கடைசியாக தொடர்பு கொண்ட நேரம் :- காலை 8.30

தெரிவித்த தகவல் :- காலநிலை மிகவும் நன்றாக உள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே பயணத்தை பூர்த்தி செய்து விடுவோம்.

மறைந்து போன நேரம் :- காலை 8.32 இற்குப்பின்

தேடுதல் முயற்சி :-  72 விமானங்கள் , 2 விமானந்தாங்கி கப்பல்கள் மொத்தமாக 150 000 சதுர பரப்பளவிற்கு

தடயங்கள் :- இல்லை

இதன்பின்பு 1949 இல் மட்டும் 9 விமானங்கள் மறைந்து போயின...


DOUGLUS DC3


ஆண்டு :- 1948
மாதம் :- 12
திகதி :- 28

பயணப்பாதை :- சான்ச்சுரவானில் இருந்து மியாமி வரையானது

பயணிகளின் எண்ணிக்கை :- 36

விமானி பேசிய நேரம் அதிகாலை :- 4.15

தெரிவித்த தகவல் :- ”நாங்கள் தெற்கில் 50 மைல் தொலைவில் வந்துகொண்டிருக்கிறோம். மியாமியினுடைய விளக்குகள் எனக்கு மங்கலாகத் தெரிகின்றன. இறங்குவதற்கான விபரங்களுக்காக காத்திருக்கிறேன்.”

சம்பவம் :- இதன்பின் தொடர்புகள் இல்லை. விமானம் காணாமல் போனது.

தேடுதல் முயற்சிகள் :- பல விமானங்கள் மற்றும் கப்பல்கள்.

தடயம் :- எதுவும் இல்லை.


இரு KC 135 ரக JET விமானங்கள்


ஆண்டு :- 1963
மாதம் :- 09
திகதி :- 28

விமானி தெரிவித்ததகவல் :- ”காலநிலை தெளிவாக உள்ளது”

சம்பவம் :- பின்னர் 2 விமானங்களும் மறைந்து போயின. இச்சம்பவத்தின் போது பல நூற்றுக்கணக்கான பயணிகளும் காணாமல் போயினர்.

தடயங்கள் :- எதுவும் இல்லை


C-132 கார்கோமாஸ்டர் விமானம்

ஆண்டு :- 1963
மாதம் :- 09
திகதி :- 22


விமானியின் இறுதித்தகவல் :- ”விமானத்தின் பயணம் சுமூகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது”

சம்பவம் :- விமானம் சிறிது நேரத்தில் மறைந்து போனது.


தடயம் :- எதுவும் இல்லை



FLYING BOX CAR


ஆண்டு :- 1965
மாதம் :- 06
திகதி :-05


சம்பவம் :-10 பேருடன் மறைந்து போனது.

மறைந்த இடம் :- பஹாமஸ் இற்கு அருகாமையில்

தடயங்கள் :- எதுவும் இல்லை


YC 122

ஆண்டு :- 1967
மாதம் :- 01
திகதி :-11


சம்பவம் :- 4 பேருடன் மறைந்து போனது.

மறைந்த இடம் :- இற்கு அருகாமையில்

தடயங்கள் :- எதுவும் இல்லை

இவை தவிர 1940 முதல் 2000 வரையான காலப்பகுதியில் மட்டும் சுமார் 100 இற்கும் மேற்பட்ட விமானங்கள் இப்பகுதியில் மறைந்து போயிருக்கின்றன. ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்தின் போதும் எதுவித தடயமும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.


அடுத்த பதிவில் மாயராஜ்ஜியம் விழுங்கிய கப்பல் தொகுப்பைக் காணலாம்.....


மாயங்கள் தொடரும் 
உங்கள் உண்மையின் பக்கத்தில்!!!!!

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...