Skip to main content

மாய ராஜ்ஜியம்- 03

அமைவிடம்




  • பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடித்த பெர்முடா முக்கோணம் என்பது தான் என்ன?
  • அது ஒரு வரையறுக்கப்பட்ட பிரதேசமா?
  • கற்பனையாக அமைக்கப்பட்ட அமைவிடமா?
  • முழு நேரமும் மனிதர்களின் நடமாட்டமற்ற பகுதியா?
என பல கேள்விகள் எழுகின்றன.

           மத்திய அத்திலாந்திக் தீவான பெர்முடாவையும், அமெரிக்காவின் அத்திலாந்திக் கரையோர எழில்மிகு நகரான புளோறிடாவையும், சன்யுவான் பியூட்ரோறிகா எனும் சிறிய தீவுப்பகுதியையும் முக்கிய 3 முனைகளாக கொண்டதாக கற்பனையில் இனங்காணப்பட்டது தான் இந்தப் பெர்முடா (பேய்) முக்கோணம்.

            மின்காந்தவியல் தத்துவத்தைப் பொய்யாக்கிய பெருமையும் இப்பிரதேசத்திற்கு உண்டு. பொதுவாக ஒரு மின்காந்த திசையறிகருவி காந்த வடக்கையே காட்டுவதுண்டு. ஆனால் உலகின் இரு பிரதேசங்களில் மின் காந்த திசையறிகருவி ஏமாற்றும் வகையில் உண்மை வடக்கையே காட்டும். அவற்றுள் ஒன்று இந்த பெர்முடா முக்கோணம்!!!!

  • சரி இந்த அமைவிடம் இவ்வளவு தூரம் முக்கியம் பெறுவதற்கான காரணங்கள் என்ன?
  • 1950களின் ஆரம்பத்தில் மக்களால் உச்சரிக்கப்பட ஆரம்பித்த பெர்முடா முக்கோணம் இன்றும் பலரையும் திகிலோடு நோக்க வைப்பதன் மர்மம் தான் என்ன?
  • திகில் என்றால் முதலில் ஞாபகம் வருகின்ற பேய் இந்த முக்கோணத்தின் புனைபெயராக அமைந்தமையின் அடிப்படை என்ன?
  • உலகின் பல்வேறு ஆய்வாளர்களையும் செய்வதறியாமல் திகைக்க வைத்தது.
           இக்கேள்விகள் அனைத்திற்கும் பதில்களாக வரக்கூடிய சில சம்பவங்களை எடுத்து நோக்குவதனூடாக அதன் காரணங்களை அலசலாம் என முயல்கிறேன்.

                                  மாயங்கள் தொடரும்...... ஆனால் 
                                                உங்கள் உண்மையின் பக்கத்தில்!!!!!

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.......

Comments

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...