Skip to main content

MAAYA RAJJYAM - 11

பெர்முடா முக்கோணம் தொடர்பான ஆய்வுகளில் இதுவரை எழுந்துள்ள சவால்கள்



இன்றுவரை இம்முக்கோணம் உலகின் பல ஆராய்ச்சியாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டே சென்றுள்ளது. ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்த திகில் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க முற்பட்டவர்கள் மேலும் பல முடிச்சுக்களை உருவாக்கிவிட்டது தான் விந்தையாக உள்ளது. சிக்கல்களின் சிகரமாக திகழும் இம்முக்கோணத்தை ஆராய்ந்த ஒவ்வொரு ஆராய்ச்சியாளர்களும் அடுத்து வரும் ஆய்வாளர்களுக்கு விடை தெரியாத பல வினாக்களை விட்டுச் செல்வதே வழமையாகி விட்டது. ”மர்மத்திற்கான தீர்வு” என்ற பெயரில் வெளிவந்து பல லட்சம் டொலர்களை சம்பாதிக்கின்ற நூல்களின் எண்ணிக்கை மட்டும் நீண்டு செல்கிறது.

எனவே இவ்வாய்வினை வித்தியாசமான முறையில் கொண்டு செல்லலாம் என எண்ணுகிறேன். இவ்வாய்வு தொடர்பான சவால்களை  ஆராய்ந்த பின்பு காரணங்களை அலசலாம் என முயல்கிறேன். சரி இப்பிரதேசத்தை நோக்கிய ஆய்வில் புரியாத புதிர்கள் பல தோன்றுவதற்கான காரணம் என்ன?

  • அமைவிடம் தொடர்பான மர்மங்களின் நிலையற்ற தன்மை
  • பல்வேறு சம்பவங்களின் போதும் தடயங்களைப் பெருமளவில் பெற முடியாமல் போனமை
  • நவீன அறிவியலையும் தாண்டிச் செல்வாக்குச் செலுத்தும் சில காரணிகளின் தாக்கம்



அமைவிடம் தொடர்பான மர்மங்களின் நிலையற்ற தன்மை



குறிப்பிட்ட ஒரு ஆய்வை மேற்கொள்ளும் போது அவ்வாய்வின் நிலவரங்களை சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு துல்லியமான முறையில் ஆய்வுகளை தொடர்வது இன்றியமையாதது. இதற்கு அவ்வாய்வின் சம்பவங்கள் குறிப்பிட்ட சீரான கால இடைவெளியிலோ அல்லது சம காலத்திலோ நடைபெறக்கூடியவையாக இருப்பது விரும்பத்தக்கதாகும்.

ஒரு ஆய்வின் வெற்றியைத் தீர்மானிக்கும் இத்தகைய தேவை பெர்முடா முக்கோணத்தை பொறுத்த வரையில் சாத்தியமற்றதாகி விட்டது. அது ஏன்?

நாம் அலசி ஆராய்ந்து வந்த பெர்முடா முக்கோணம் என்பது பலரும் நினைப்பது போன்று எல்லா நேரமும் ஆபத்தை விளைவிக்கும் ஒரு பகுதியல்ல. இந்த பிரதேசமானது முழு நேரமும் மக்கள் நடமாட்டமற்ற பகுதியல்ல மக்கள் நடமாட்டத்திற்கு உத்தியோகபூர்வமான முறையில் தடைவிதிக்கப்பட்ட பகுதியுமல்ல. இப்பகுதியூடு பயணித்து சிறு சேதமும் இன்றி கடந்து செல்பவர்கள் பலர் உள்ள நிலையில் நாள் தோறும் மக்களைப் பழி வாங்கும் பிரதேசமுமல்ல.

இவ்வாய்வின் ஆரம்பத்தில் அமைவிடம் தொடர்பான பகுதியில் குறிப்பிடப்பட்ட இந்தப்பெர்முடா முக்கோணத்தின் வரையறைகளானது இங்கு இடம்பெற்ற சம்பவங்களின் ஒட்டுமொத்த எல்லைகளே ஆகும். தனித்தனியான சம்பவங்களின் வீச்சு என்பது அதற்குள் இடம்மாறும் தன்மையைக் கொண்டிருக்கிறது. இது எதிர்காலத்தில் தற்போது குறிப்பிட்டிருக்கின்ற எல்லைகளைத்தாண்டியும் மர்ம விளையாட்டுக்களின் பட்டியல் நீளப்போகின்றது என்பதைக் காட்டியும் கூறுவதாகவே அமைகிறது. ஒரு வேளை இன்று பெர்முடாமுக்கோணம் என்று அழைக்கப்படுகின்ற இந்த மாயாஜால மர்மங்களின் மறைவிடம் பெர்முடா சதுரம் என்றோ பெர்முடா வட்டம் என்றோ அழைக்கப்படக்கூடிய சாத்தியங்களும் தோன்றலாம்......


மாயங்கள் இனி நீங்கும்.........
......உங்கள் உண்மையின் பக்கத்தில்...............

Comments

  1. சிறப்பான பதிவு ரவி வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நன்றிகள் புதுவை சிவா அவர்களே!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...