Skip to main content

MAAYA RAJJYAM - 11

பெர்முடா முக்கோணம் தொடர்பான ஆய்வுகளில் இதுவரை எழுந்துள்ள சவால்கள்



இன்றுவரை இம்முக்கோணம் உலகின் பல ஆராய்ச்சியாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டே சென்றுள்ளது. ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்த திகில் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க முற்பட்டவர்கள் மேலும் பல முடிச்சுக்களை உருவாக்கிவிட்டது தான் விந்தையாக உள்ளது. சிக்கல்களின் சிகரமாக திகழும் இம்முக்கோணத்தை ஆராய்ந்த ஒவ்வொரு ஆராய்ச்சியாளர்களும் அடுத்து வரும் ஆய்வாளர்களுக்கு விடை தெரியாத பல வினாக்களை விட்டுச் செல்வதே வழமையாகி விட்டது. ”மர்மத்திற்கான தீர்வு” என்ற பெயரில் வெளிவந்து பல லட்சம் டொலர்களை சம்பாதிக்கின்ற நூல்களின் எண்ணிக்கை மட்டும் நீண்டு செல்கிறது.

எனவே இவ்வாய்வினை வித்தியாசமான முறையில் கொண்டு செல்லலாம் என எண்ணுகிறேன். இவ்வாய்வு தொடர்பான சவால்களை  ஆராய்ந்த பின்பு காரணங்களை அலசலாம் என முயல்கிறேன். சரி இப்பிரதேசத்தை நோக்கிய ஆய்வில் புரியாத புதிர்கள் பல தோன்றுவதற்கான காரணம் என்ன?

  • அமைவிடம் தொடர்பான மர்மங்களின் நிலையற்ற தன்மை
  • பல்வேறு சம்பவங்களின் போதும் தடயங்களைப் பெருமளவில் பெற முடியாமல் போனமை
  • நவீன அறிவியலையும் தாண்டிச் செல்வாக்குச் செலுத்தும் சில காரணிகளின் தாக்கம்



அமைவிடம் தொடர்பான மர்மங்களின் நிலையற்ற தன்மை



குறிப்பிட்ட ஒரு ஆய்வை மேற்கொள்ளும் போது அவ்வாய்வின் நிலவரங்களை சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு துல்லியமான முறையில் ஆய்வுகளை தொடர்வது இன்றியமையாதது. இதற்கு அவ்வாய்வின் சம்பவங்கள் குறிப்பிட்ட சீரான கால இடைவெளியிலோ அல்லது சம காலத்திலோ நடைபெறக்கூடியவையாக இருப்பது விரும்பத்தக்கதாகும்.

ஒரு ஆய்வின் வெற்றியைத் தீர்மானிக்கும் இத்தகைய தேவை பெர்முடா முக்கோணத்தை பொறுத்த வரையில் சாத்தியமற்றதாகி விட்டது. அது ஏன்?

நாம் அலசி ஆராய்ந்து வந்த பெர்முடா முக்கோணம் என்பது பலரும் நினைப்பது போன்று எல்லா நேரமும் ஆபத்தை விளைவிக்கும் ஒரு பகுதியல்ல. இந்த பிரதேசமானது முழு நேரமும் மக்கள் நடமாட்டமற்ற பகுதியல்ல மக்கள் நடமாட்டத்திற்கு உத்தியோகபூர்வமான முறையில் தடைவிதிக்கப்பட்ட பகுதியுமல்ல. இப்பகுதியூடு பயணித்து சிறு சேதமும் இன்றி கடந்து செல்பவர்கள் பலர் உள்ள நிலையில் நாள் தோறும் மக்களைப் பழி வாங்கும் பிரதேசமுமல்ல.

இவ்வாய்வின் ஆரம்பத்தில் அமைவிடம் தொடர்பான பகுதியில் குறிப்பிடப்பட்ட இந்தப்பெர்முடா முக்கோணத்தின் வரையறைகளானது இங்கு இடம்பெற்ற சம்பவங்களின் ஒட்டுமொத்த எல்லைகளே ஆகும். தனித்தனியான சம்பவங்களின் வீச்சு என்பது அதற்குள் இடம்மாறும் தன்மையைக் கொண்டிருக்கிறது. இது எதிர்காலத்தில் தற்போது குறிப்பிட்டிருக்கின்ற எல்லைகளைத்தாண்டியும் மர்ம விளையாட்டுக்களின் பட்டியல் நீளப்போகின்றது என்பதைக் காட்டியும் கூறுவதாகவே அமைகிறது. ஒரு வேளை இன்று பெர்முடாமுக்கோணம் என்று அழைக்கப்படுகின்ற இந்த மாயாஜால மர்மங்களின் மறைவிடம் பெர்முடா சதுரம் என்றோ பெர்முடா வட்டம் என்றோ அழைக்கப்படக்கூடிய சாத்தியங்களும் தோன்றலாம்......


மாயங்கள் இனி நீங்கும்.........
......உங்கள் உண்மையின் பக்கத்தில்...............

Comments

  1. சிறப்பான பதிவு ரவி வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நன்றிகள் புதுவை சிவா அவர்களே!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...