Skip to main content

MAAYA RAJJYAM 12


ஆக பெர்முடா முக்கோணம் என்பது குறிப்பிட்ட சில காலத்தில் மாத்திரம் பாரிய அழிவுகளை ஏற்படுத்தி ஆர்ப்பரித்து விட்டு மற்றைய சந்தர்ப்பங்களில் சாதாரண கடற்பகுதியாக அடங்கிவிடுகிறது. இது பற்றி மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வுகளும் குறிப்பிட்ட சம்பவங்களை மாத்திரம் சுற்றி நிற்க வேண்டிய அவசியமும் காணப்படுகின்றது. எப்போதும் எதுவும் நடக்கும் என்றில்லாமல் எப்போதாவது எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எல்லோரையும் எச்சரிக்கையுடன் பார்க்கவைக்கும் பிரதேசமாக அமைதியாக உள்ளது. திகில்கள் பலவற்றை திரளாக கொண்டிருக்கின்ற இந்தப்பேய் முக்கோணம் பற்றிய கேள்விகளுக்கு பதில்கள் சிலவற்றையாவது தருவதற்கு இடையூறாக அமைவது இந்த மர்ம தேசத்தின் மயான அமைதி என்றால் அது மிகையாகாது.

தடயங்களை பெருமளவில் பெற முடியாமல் போனமை


சிறு குற்றவியல் வழக்குகள் முதல் மாபெரும் அறிவியல் ஆய்வுகள் வரை சாட்சிகளும் தடயங்களும் அவற்றின் வெற்றிகரமான முன்னேற்றத்திற்கு அவசியமாகின்றன. ஒவ்வொரு ஆய்வினதும் தீர்வின் துல்லியத்தன்மையையும் தீர்விற்கான கால அளவையும் தீர்மானிக்கும் இவ்வித்தியாசமான அம்சங்கள் பெர்முடா முக்கோணத்தின் ஆய்வுகளின் போக்கில் தேக்க நிலையை உண்டாக்கும் அளவிற்கு பற்றாக்குறையாகவே காணப்படுகின்றன.

பெர்முடா முக்கோணத்தை பேய் முக்கோணமாக மாற்றிய அனைத்து சம்பவங்களின் போதும் அழிவுகளின் சிதைவுகளும் எச்சங்களும் பெறமுடியாமல் போனது மாபெரும் சவாலாக எழுந்துள்ளது. சம்பவங்களில் நேரடியாக சம்பந்தப்பட்ட அனைவரும் உயிரிழந்தமையும் மிகப்பெரிய கேள்விக்குறியையே தோற்றுவித்துள்ளது. சில சில 2ம் 3ம் நிலை சாட்சிகள் கிடைத்துள்ள போதும் முதல் நிலை சாட்சிகள் கிடைக்காமையானது மர்மங்களை மேலும் கிளறிவிடுவதாகவே அமைகின்றது.


பெர்முடா முக்கோணத்தைப் பொறுத்த வரை அதன் ஆய்வுகளின் போக்கிலான சவால்களுக்கு மட்டுமன்றி உலகளாவிய ரீதியிலான அதன் தனித்துவமாகவும் இந்த பெரிய தடயப்பற்றாக்குறை விளங்குகின்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வுகளின் முடிவுகளின் படி மிகக்குறைவான தடயங்களைக் கொண்டுள்ள ஆய்வுகளில் பெர்முடா முக்கோணம் பற்றிய ஆய்வுகள் முதலிடத்தில் உள்ளது.

தொடரும்...........

Comments

  1. தொடருங்கள்.....
    சுவாரசியமாக உள்ளது....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Visual Basic - Hello World (பார்வை - 2)

அனைவருக்கும் வணக்கம்…. சென்ற பதிப்பில் Visual Basic இல் நிரலாக்க குறியீடுகள் (Programming Codings) எழுதும் பகுதியில் இருந்து இயங்குநிலைக்கு எப்படி கொண்டு செல்வது என்று பார்த்தோம். இன்றைய பதிப்பில் அவசரமாக எப்படி நிரலாக்க குறியீடுகள் எழுதுவது என்று பார்க்க முன்னர் சில பகுதிகளை குறிப்புகளாக நோக்கிவிட்டு Programme எழுத போகலாம். பொதுவாக எல்லா மொழிகளுக்கும் பலதரப்பட்ட வரையறைகள் இருக்கின்றன. உதாரணமாக…. நாம் நாளை பாடசாலை சென்றேன். இந்த வசனத்தில் ஏகப்பட்ட பிழைகள். இப்படி ஒருவர் கூறும் பட்சத்தில் அவர் என்ன கூறவருகிறார் என்று எங்களால் இனங்காணமுடியாத சூழ்நிலைகள் காணப்படுகின்றன. இதே பிரச்சினை தான் இந்த நிரலாக்க மொழி சூழலிலும் காணப்படுகின்றது. கணினி என்று நோக்கும் போது அங்கும் அதனால் விளங்க கூடிய வகையில் நாம் கூறுபவை தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மொழி பயிலும் போதும் ஆரம்பத்தில் பல இடர்பாடுகள் இருப்பது போன்று காணப்படும் மாயை காலம் செல்ல செல்ல இடர்பாடுகள் குறைந்து செல்வது போன்ற தோற்றப்பாட்டை கொண்டு காணப்படும். இங்கும் நாம் கணினியால் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அதனுடன் வரையறைகளுக்கு உட்பட்ட...

யார் ? இவர்கள் 05

பறக்கும் தட்டை மக்கள் பார்த்து சில மணிநேரம் கழித்து இன்னோர் தகவலும் வெளியானது. நியூ மெக்சிகோ அருகே உள்ள ரோஸ்வேல் என்ற இடத்தில் வட்டவடிவமான (பறக்கும் தட்டு) பெரிய பொருள் ஒன்று நொறுங்கிக்கிடப்பதாக கூறப்பட்டது. நிறைகுறைந்த அதேநேரத்தில் உறுதியான உலோகத்தில் அந்த பறக்கும் தட்டு தயாரிக்கப்பட்டு இருந்தது. எனினும் அரசு தரப்பில் ஆரம்பத்தில் இச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டது. அதேநேரம் அமெரிக்க விமானப்படை இது தொடர்பாக இரகசிய விசாரணை ஒன்றையும் உடனடியாக நடாத்தியது. அப்போது பறக்கும் தட்டுகள் வானில் பறந்தது உண்மைதான் என்று தகவல் வெளியானது. இங்கு பெறப்பட்ட அவ்வுலோகமானது மிகவும் நிறைகுறைந்ததாகவும் ஆனால் மிகவும் உறுதி கூடியதாகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வுலோக இயல்பு பூமியில் உள்ள உலோகங்களின் இயல்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டது. ஆனாலும் உடனடியாக ஏற்பட்ட பரபரப்பையும் பதற்றத்தையும் தணிப்பதாக அரசு கூறிய கருத்து “ விமானப்படையினர் தட்பவெப்பநிலை மாற்றங்களை அறிய அனுப்பிய வானிலை ஆய்வு பலூன் தான் தரையில் வீழ்ந்து நொருங்கியது ’’ மேற்கூறப்பட்ட அனைத்து சாத்தியப்பாடுகளு...

இறந்த காலத்தை அடைவோமா? ( யார் ? இவர்கள் 11 )

இறந்த காலத்தை அடைவது எப்படி? இங்கு நாம் பயன்படுத்தும் வேகம், ஒளியின் வேகத்தை அணுகும் போது எம்முடைய காலமானது மெதுவாக செல்லும். ஒளியின் வேகம் என்பதை தொடும் போது எமது காலமாற்றம் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 0 எனலாம். பெரும்பாலும் எனது கருத்துப்படி இது எக்காலத்திலும் சாத்தியமற்றது எனலாம். ஆயினும் அவ்வாறு எமது வேகம் ஒளியின் வேகத்திற்குச் சமனாயின் அவ்வாறு ஒரு வாகனத்தை இயக்குபவர் காலத்தையே வென்றவராவார். அதாவது அவர் தனது வாழ்வை வாகனத்திற்கு வெளியில் உள்ளோரின் இயல்பான காலத்தின் படி வேண்டுமானவரை அவ்வாகனத்தில் கழிக்கலாம். சரி அடுத்ததாக எமது வாகனம் ஒளியின் வேகத்தை மீறும் போதே நாம் எமது இறந்த காலத்திற்குச் செல்வோம். அதாவது நாம் கடந்து வந்த காலத்திற்கு மீண்டும் செல்லலாம். எமக்கு வேண்டுமான காலத்தில் தரையிறங்கி அங்குள்ள எமது சிறு வயதுத்தோற்றங்களை கூட சந்திக்கலாம். ஆனால் அவர்கள் ( இறந்தகாலத்திலுள்ளோர் ) தமது காலமே இயல்பான போக்குடையது என உணர்வர். எனவே அவர்களைப்பொறுத்தவரைக்கும் அங்கு செல்லும் நாம் அவர்களின் எதிர்காலத்தோர் ஆவோம். இவ்வாறு செயற்படக்கூடிய இயலுமையை எமது மனித குலம் பெறுமாயின் இதன் விளைவா...