Skip to main content

கண்ணம்மா 06

குமரேசனுக்கு இறுதி ஆண்டுக்கு மேலதிக பணம் மூன்று இலட்சம் வேணுமாம். இதுதான் அந்தக்கடிதத்தின் சாராம்சம். கண்ணம்மா தன் அன்பு உடன்பிறப்பிடம் இருந்து கிடைத்த மடலை வாசித்து முடித்ததும் பணம் பெறக்கூடிய வழிகள் குறித்து யோசிக்கலானாள்.
உடனே கண்ணம்மா, கிராமத்தலைவன் முனியாண்டி இடம் சென்று தான் வசித்த வீட்டை விற்க இருப்பதாகவும் ஆதலால் அதனை இயலுமான அளவு உயர்ந்த விலைக்கு விற்றுத்தருமாறும் வேண்டினாள். துர்-அதிஷ்டம்!!!அக்காணி ஒரு இலட்சம் ரூபாவிற்கே விற்கப்பட்டது. மீதி இரண்டு இலட்சங்களையும் எவ்வாறு பெற்றுக்கொள்வதென்று பல வழிகளிலும் யோசிக்கலானாள்.

இறுதியில் சாதகமான தலையசைப்புடன் எழுந்தாள். எழுந்து எங்கோ செல்லலானாள். ஆம் அவ்வழி ஏற்கனவே ஒரு தடவை பழக்கப்பட்ட வழிதான். ஈற்றில் தன் அயல்வீடுகளிடம் சென்று தன் தம்பியின் தேவைபற்றி குறிப்பிட்டு அதற்கு சிறிதளவாயினும் பணம் கடனாக தரும்படி கேட்டுக் கொண்டாள். எத்தனை வீடுகளில் கேட்டும் அத்தனை வீடுகளிலும் பாதகமான எதிர்பார்ப்புகளே கிடைத்தன. மேலதிக பணத்தை வேறு எவ்வாறு பெறுவது என யோசித்தாள். தலையிடி எமன் என வரும் அளவுக்கு வந்தும் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாள்.
கண்களில் கண்ணீர் மட்டும் வற்றாத குற்றாலம் என வழிந்து கொண்டிருந்தது. தன் தம்பியின் படிப்பு நிறைவுறும் தருணத்தில் இவ்வாறு பிரச்சினை வருகிறதே என்று மனத்தால் எண்ணி கடவுளை தன் வார்த்தைகளால் கொட்டித்தீர்த்தாள்.
செய்வதறியாது கால்களில் பலம் இருக்கும் வரை சென்று உதவி கேட்கலாம் என்ற நோக்குடன் ஆங்காங்கே கேட்டுக்கொண்டே சென்றாள். உதவி இல்லை....
கடைசியில் செல்லும் இடம் அறியாமல் மீண்டும் பழக்கப்பட்ட இடத்தை நாடினாள். மீண்டும் அதே “குறி“ கொண்ட கட்டிடம். வைத்தியாசாலை தான் பெயர்.மீண்டும் இரத்தம் கொடுக்க நாடினாள்.ஆனால் அவளை பரிசோதித்த வைத்தியர் குறிப்பிட்ட காலஇடைவெளியில் அதிக தடவை இரத்தம் எடுக்கமுடியாது என கூறிவிட்டு அவளின் நோக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள். மிகுதிப்பணம் திரட்ட வேறு வழியில்லாமல் ஈற்றில் தன் கண்ணாக கருதி வந்த தன் குமரேசனைக் காக்க - அவன் நலம் பெற - அவன் கனவுகள் நனவுகளாக  தன் கண், சிறுநீரகம் போன்றவற்றை விற்றால் மட்டுமே மேற்படி தேவையான அளவு பணத்தைப்பெற முடியும் என எண்ணி வைத்தியரை அணுகி இதைப்பற்றி கதைத்து சிகிச்சைக்கு தயாரானாள்.

சிகிச்சையும் வெற்றிகரமாக நிறைவேறியது. ஒரு கிழமை வைத்தியசாலையிலேயே தங்கினாள். கிடைத்த பணத்தை தனது நம்பிக்கை மிகுந்தவரிடம் கொடுத்து அதனை தன் தம்பிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டாள்.

தொடரும்.......

Comments

Post a Comment

Popular posts from this blog

Visual Basic - Hello World (பார்வை - 2)

அனைவருக்கும் வணக்கம்…. சென்ற பதிப்பில் Visual Basic இல் நிரலாக்க குறியீடுகள் (Programming Codings) எழுதும் பகுதியில் இருந்து இயங்குநிலைக்கு எப்படி கொண்டு செல்வது என்று பார்த்தோம். இன்றைய பதிப்பில் அவசரமாக எப்படி நிரலாக்க குறியீடுகள் எழுதுவது என்று பார்க்க முன்னர் சில பகுதிகளை குறிப்புகளாக நோக்கிவிட்டு Programme எழுத போகலாம். பொதுவாக எல்லா மொழிகளுக்கும் பலதரப்பட்ட வரையறைகள் இருக்கின்றன. உதாரணமாக…. நாம் நாளை பாடசாலை சென்றேன். இந்த வசனத்தில் ஏகப்பட்ட பிழைகள். இப்படி ஒருவர் கூறும் பட்சத்தில் அவர் என்ன கூறவருகிறார் என்று எங்களால் இனங்காணமுடியாத சூழ்நிலைகள் காணப்படுகின்றன. இதே பிரச்சினை தான் இந்த நிரலாக்க மொழி சூழலிலும் காணப்படுகின்றது. கணினி என்று நோக்கும் போது அங்கும் அதனால் விளங்க கூடிய வகையில் நாம் கூறுபவை தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மொழி பயிலும் போதும் ஆரம்பத்தில் பல இடர்பாடுகள் இருப்பது போன்று காணப்படும் மாயை காலம் செல்ல செல்ல இடர்பாடுகள் குறைந்து செல்வது போன்ற தோற்றப்பாட்டை கொண்டு காணப்படும். இங்கும் நாம் கணினியால் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அதனுடன் வரையறைகளுக்கு உட்பட்ட...

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

யார் ? இவர்கள் 05

பறக்கும் தட்டை மக்கள் பார்த்து சில மணிநேரம் கழித்து இன்னோர் தகவலும் வெளியானது. நியூ மெக்சிகோ அருகே உள்ள ரோஸ்வேல் என்ற இடத்தில் வட்டவடிவமான (பறக்கும் தட்டு) பெரிய பொருள் ஒன்று நொறுங்கிக்கிடப்பதாக கூறப்பட்டது. நிறைகுறைந்த அதேநேரத்தில் உறுதியான உலோகத்தில் அந்த பறக்கும் தட்டு தயாரிக்கப்பட்டு இருந்தது. எனினும் அரசு தரப்பில் ஆரம்பத்தில் இச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டது. அதேநேரம் அமெரிக்க விமானப்படை இது தொடர்பாக இரகசிய விசாரணை ஒன்றையும் உடனடியாக நடாத்தியது. அப்போது பறக்கும் தட்டுகள் வானில் பறந்தது உண்மைதான் என்று தகவல் வெளியானது. இங்கு பெறப்பட்ட அவ்வுலோகமானது மிகவும் நிறைகுறைந்ததாகவும் ஆனால் மிகவும் உறுதி கூடியதாகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வுலோக இயல்பு பூமியில் உள்ள உலோகங்களின் இயல்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டது. ஆனாலும் உடனடியாக ஏற்பட்ட பரபரப்பையும் பதற்றத்தையும் தணிப்பதாக அரசு கூறிய கருத்து “ விமானப்படையினர் தட்பவெப்பநிலை மாற்றங்களை அறிய அனுப்பிய வானிலை ஆய்வு பலூன் தான் தரையில் வீழ்ந்து நொருங்கியது ’’ மேற்கூறப்பட்ட அனைத்து சாத்தியப்பாடுகளு...