Skip to main content

கண்ணம்மா 06

குமரேசனுக்கு இறுதி ஆண்டுக்கு மேலதிக பணம் மூன்று இலட்சம் வேணுமாம். இதுதான் அந்தக்கடிதத்தின் சாராம்சம். கண்ணம்மா தன் அன்பு உடன்பிறப்பிடம் இருந்து கிடைத்த மடலை வாசித்து முடித்ததும் பணம் பெறக்கூடிய வழிகள் குறித்து யோசிக்கலானாள்.
உடனே கண்ணம்மா, கிராமத்தலைவன் முனியாண்டி இடம் சென்று தான் வசித்த வீட்டை விற்க இருப்பதாகவும் ஆதலால் அதனை இயலுமான அளவு உயர்ந்த விலைக்கு விற்றுத்தருமாறும் வேண்டினாள். துர்-அதிஷ்டம்!!!அக்காணி ஒரு இலட்சம் ரூபாவிற்கே விற்கப்பட்டது. மீதி இரண்டு இலட்சங்களையும் எவ்வாறு பெற்றுக்கொள்வதென்று பல வழிகளிலும் யோசிக்கலானாள்.

இறுதியில் சாதகமான தலையசைப்புடன் எழுந்தாள். எழுந்து எங்கோ செல்லலானாள். ஆம் அவ்வழி ஏற்கனவே ஒரு தடவை பழக்கப்பட்ட வழிதான். ஈற்றில் தன் அயல்வீடுகளிடம் சென்று தன் தம்பியின் தேவைபற்றி குறிப்பிட்டு அதற்கு சிறிதளவாயினும் பணம் கடனாக தரும்படி கேட்டுக் கொண்டாள். எத்தனை வீடுகளில் கேட்டும் அத்தனை வீடுகளிலும் பாதகமான எதிர்பார்ப்புகளே கிடைத்தன. மேலதிக பணத்தை வேறு எவ்வாறு பெறுவது என யோசித்தாள். தலையிடி எமன் என வரும் அளவுக்கு வந்தும் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாள்.
கண்களில் கண்ணீர் மட்டும் வற்றாத குற்றாலம் என வழிந்து கொண்டிருந்தது. தன் தம்பியின் படிப்பு நிறைவுறும் தருணத்தில் இவ்வாறு பிரச்சினை வருகிறதே என்று மனத்தால் எண்ணி கடவுளை தன் வார்த்தைகளால் கொட்டித்தீர்த்தாள்.
செய்வதறியாது கால்களில் பலம் இருக்கும் வரை சென்று உதவி கேட்கலாம் என்ற நோக்குடன் ஆங்காங்கே கேட்டுக்கொண்டே சென்றாள். உதவி இல்லை....
கடைசியில் செல்லும் இடம் அறியாமல் மீண்டும் பழக்கப்பட்ட இடத்தை நாடினாள். மீண்டும் அதே “குறி“ கொண்ட கட்டிடம். வைத்தியாசாலை தான் பெயர்.மீண்டும் இரத்தம் கொடுக்க நாடினாள்.ஆனால் அவளை பரிசோதித்த வைத்தியர் குறிப்பிட்ட காலஇடைவெளியில் அதிக தடவை இரத்தம் எடுக்கமுடியாது என கூறிவிட்டு அவளின் நோக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள். மிகுதிப்பணம் திரட்ட வேறு வழியில்லாமல் ஈற்றில் தன் கண்ணாக கருதி வந்த தன் குமரேசனைக் காக்க - அவன் நலம் பெற - அவன் கனவுகள் நனவுகளாக  தன் கண், சிறுநீரகம் போன்றவற்றை விற்றால் மட்டுமே மேற்படி தேவையான அளவு பணத்தைப்பெற முடியும் என எண்ணி வைத்தியரை அணுகி இதைப்பற்றி கதைத்து சிகிச்சைக்கு தயாரானாள்.

சிகிச்சையும் வெற்றிகரமாக நிறைவேறியது. ஒரு கிழமை வைத்தியசாலையிலேயே தங்கினாள். கிடைத்த பணத்தை தனது நம்பிக்கை மிகுந்தவரிடம் கொடுத்து அதனை தன் தம்பிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டாள்.

தொடரும்.......

Comments

Post a Comment

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...