Skip to main content

Posts

Showing posts from June, 2010

காலத்துடனான ஓர் பயணம் 03 ( யார் ? இவர்கள் 10 )

நாம் இயங்குவதால் இறந்தகாலத்தை அடைவோமா? ஒருவர் ஏதாவது இயக்கத்தில் இருக்கும் போதே அவர் மற்றவர்களை விட காலத்தால் மெதுவாகிறார். ஆனால் இந்தக்கால வித்தியாசம் மிக மிக குறைந்ததாக இருக்கும். அதாவது எம்மால் உணர்ந்து கொள்வது கடினமானது. காரணம் அவரின் வேகம் ஒளியின் வேகத்துடன் ஒப்பிடுகையில் மிக மிகக்குறைவானதாகும். உதாரணமாக நாம் ஒரு சைக்கிளில் இயங்கினால் கூட எமக்கு நேரம் மெதுவாகவே இருக்கும். ஆனால் அந்த நேரம் மிகவும் குறைவானது. எனவே அதைப்பரீட்சித்துப்பார்க்கவேண்டும் எனில் மிக மிக மிக ............................... குறைந்த நேரங்களையும் அளவிடக்கூடிய கடிகாரம் வேண்டும்.              அல்லாது விடில் நாம் இயங்கும் வாகனங்களின் கதியை மிகவும் அதிகரித்தால் அந்த நேரவித்தியாசத்தை உணரமுடியும். அதாவது ஒருவர் அவ்வாறு உயர்வேகத்தில் இயங்கினால் அவ்வாறு இயங்குபவர் மற்றவர் கண்களுக்கு புலப்படாமல் போவார். ஏனெனில் அவர் மற்றவர்களை விட காலத்தால் மெதுவானவர். நாம் ஒளியின் வேகத்துடன் ஒப்பிடக்கூடிய வகையிலான வேகமுடைய வாகனங்களில் இயங்குவோமாயின் இந்த மாற்றத்தை உணரமுடியும். அதாவது இயங்குகின்ற எமக்கு காலத்தில் ஏற்படும் மாற்ற

காலத்துடனான ஓர் பயணம் 02 ( யார் ? இவர்கள் 09 )

காலம் எனும் பாதையில் மற்றவர்களை விட நாம் விரைவாக பயணிக்க முடியுமா? பாதையில் தவறவிட்டவற்றை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியுமா? இக்கேள்வியானது நகைப்பிற்கு இடமாக தோன்றலாம். இழந்த நேரத்தை பெற்றுக்கொள்ளவே முடியாது என்பது சிறுபிள்ளையும் அறிந்த விடயமாகும். வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை நினைத்துப்பார்க்க முடியுமே தவிர மீண்டும் நாம் அங்கு செல்ல முடியாது என அனைவரும் கூறுவது வழக்கமாகும். நாம் செல்லவே முடியாத ஒன்றிற்கு எமது நினைவு மாத்திரம் எவ்வாறு செல்கிறது? சிலவேளைகளில் எமது நினைவானது எதிர்காலத்தையும் எண்ண முடிகிறதே... இது எவ்வாறு சாத்தியம்? இக்கேள்விகளுக்குரிய ஒரே பதில் நினைவு விரைவானது. நினைத்துப்பார்க்க முடியாத உயர்வேகத்தை உடையது என்பது தான். அதாவது நாம் இருக்கும் இடத்திலிருந்து எம்மால் அறியப்பட்ட மிக உயர் தூரமுடைய இடத்தையே கணப்பொழுதில் நினைத்து விடுகிறோம். உதாரணமாக, நாம் இலங்கையில் கொழும்பில் இருப்பதாக எண்ணிக்கொள்வோம். 1. கொழும்பில் உள ரயில் நிலையத்தை நினைக்கிறோம் எனில், அதனை எமது சாதாரண வாகனங்களால் அடைந்து கொள்ள முடியும் உ-ம் சைக்கிள் தரத்திலானவை 2. கண்டி மாநகரை நினைக்கிறோ

காலத்துடனான ஓர் பயணம்.. ( யார் ? இவர்கள் 08 )

எனது ஆய்வின் இரண்டாம் பகுதி இவ் ஆய்வின் ஆரம்பக்கட்டத்தில் நான் “ Unidentified Flying Object ” ( பறக்கும் தட்டுக்கள்) வேறு கிரகத்தில் இருந்து வருகின்றது எனும் அடிப்படையில் ஆராய்ந்தேன். அத்துடன் நம்மால் ( பூமியிலுள்ளோரால் ) அவதானிக்கப்பட்ட சில விசித்திர தோற்றம் கொண்ட அடிப்படையில் மனித உருவத்தை ஒத்திருந்த சிலர் வேறு கிரகத்தில் இருந்து வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் அலசி ஆராய்ந்தேன். அக்கருத்துகளை உறுதிப்படுத்தும் வகையில் பெற்றுக்கொண்ட சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்கள் அவை பற்றிய மக்களின் கருத்துகள் என்பவற்றை உலகளாவிய ரீதியில் அலசி ஆராய்ந்த போது குறிப்பிட்ட விசித்திரமானவர்கள் சம காலத்தில் வேற்றுக்கிரகங்களில் இருந்து வருகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. ஆனாலும் மேற்குறிப்பிட்ட ஆய்வை இன்னோர் அடிப்படையில் தொடரலாம் என எண்ணுகின்றேன். எனினும் இவ் ஆய்வை தொடர்வதற்கு முன் சில விளக்கங்களை அளிக்க வேண்டிய தேவை ஒன்று காணப்படுகின்றது. அவையாவன, 1. காலத்துடனான இயக்கம் 2. கூர்ப்பு பற்றிய கொள்ளைகள் ஆகும். காலம் என்பது என்ன? இதுவரை எம்மால் அறியப்பட்ட வரைக்கும் காலம் என்பது வாழ்வில் நாம்

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் ( யார் ? இவர்கள் 07)

பொதுவாக எந்த ஒரு போரிலும் சில முக்கியமான அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். அதில் முக்கியமானது தான் “உளவு” ஆகும். போருக்கு முன்னதாக எதிரியின் இயலுமை, ஆயுதவளங்கள், சாதகமான பௌதிகநிலைகள், செயல்வேகம் ஆகியவற்றை அறிந்து கொள்வதன் மூலம் போரின் முடிவை தமது தரப்பிற்கு சாதகமாக்கிக்கொள்வது என்பது “உளவு” இனுடைய அவசியம் ஆகும். ஆகவே பூமி மீதான முற்றுகைக்கான உளவு நடவடிக்கைகள் தான் இப்பொழுது அவதானிக்கப்படும் மேற்படி வேற்றுக்கிரகவாசிகளின் பிரசன்னத்திற்கான அர்த்தமாகுமா? எனும் கேள்வியும் எழத்தானே செய்கிறது. யுத்தம் உளவு முடிந்தவுடனா? அல்லது ஆரம்பித்துவிட்டதா? எமது கிரகத்திற்கு ஆக்கிரமிப்பு நோக்கமாக வருகை தரும் வேற்றுக்கிரகவாசிகள் அரங்கேற்றிக்கொண்டிருக்கின்ற உளவு நடவடிக்கைகள் தான் எம்மால் அவதானிக்கப்படும் சம்பவங்களுக்கான காரணம் என்று ஆய்வின் முன்னைய பகுதியில் தெளிவாக ஆராய்ந்து உறுதிப்படுத்தி இருந்தோம். அப்படியாயின் அவர்கள் தமது ஆக்கிரமிப்பின் ஓரங்கமாக மனிதர்கள் மீது உயிரிழப்புகளை ஏற்படுத்த்தொடங்கவில்லையா? என்று நோக்குமிடத்து இல்லை என்னும் பதிலை கூறுவதில் பல சிக்கல்கள் தோன்றுகின்றன. இதன் ஓரம்சமாக