Skip to main content

Posts

Showing posts from April, 2011

தாய்த்தமிழே!!!

தாய்த்தமிழே!!! உலகில் முதல் மாந்தன் எப்போது தோற்றம் பெற்றானோ அப்போதே மொழியின் தோற்றமும் ஆரம்பித்திருக்கவேண்டும். உலகில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் மாந்தனின் பிரவேசம் ஆரம்பிக்க மொழிகளின் பிரவேசமும் உதயமானது. ஆனால் இவ்வாறு தோன்றிய மொழிகள் அனைத்தும் ஒரே மாதிரியான ஒலியமைப்புக்களை பயன்படுத்தவில்லை. ஒரு மொழியானது எவ்வாறு  தோற்றம் பெறுகிறது பெரும்பாலும் ஒரே விதமான அமைப்புகளை மாந்தர்கள் தம்மிடத்தில் கொண்டிருக்கையில் மொழிகள் மாத்திரம் ஏன் பலவகையாக வேறுபட்டு காணப்படுகிறது, மொழிகளுக்கிடையான வேறுபாடுகளின் அடிப்படை என்ன என்பது பற்றி நாங்கள் அறிந்திருக்க கடமைப்பட்டவர்கள் ஆகிறோம். பொதுவான ஒலிகள் மொழிகளுக்கிடையில் இருந்தாலும் ஒவ்வொரு மொழிக்குடும்பத்திற்கென்றும் தனித்துவமான ஒலிகளும் ஏராளமாக காணப்படுகிறது. ஒரு மொழியானது எந்த வகையில் தோற்றம் பெறுகிறது என்பது அந்த மொழியினைப்பயன்படுத்துபவர்கள் வாழும் சூழல் அத்துடன் அந்தச்சூழலில் வாழ்ந்த விலங்குகள், பறவைகள் என்று அனைத்துவிதமான உயிரினங்களும் ஏற்படுத்தும் ஒலிகளே மொழியில் காணப்படும் ஒலிகளுக்கு அடிப்படையாயின. இவ்வாறு ஒவ்வொரு பிரதேசமும் தாம் இனங்கண்ட ஒலிகளின் அட

விம்பம்

விம்பம் கல் கொண்ட மனிதன் இன்று பிரபஞ்சத்தையும் தாண்டி தனது எண்ண அலைகளை பரவவிட்டுக்கொண்டிருக்கிறான். மனிதனது சிந்தனாசக்தி வியாபித்திருக்கும் தன்மையானது காலத்துடன் அதிகரித்த வண்ணமே செல்கிறது. இவ்வாறு மனிதன் தனது ஆற்றலைப்பயன்படுத்தி எவ்வளவு தான் உயர்ந்தாலும் அவை அனைத்தும் நன்மைக்குத்தானா என்ற வினாவின் மூலம் மனிதனது கண்டுபிடிப்புகளும் ஆக்கங்களும் சற்றே அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் தவறவில்லை. ஒரு மனிதனின் பிறப்பு முதல் அவனது வாழ்வு காலம் நிறைவுறும் வரையான காலப்பகுதியை உற்றுநோக்கும் போது அவனது பண்புகளில் ஏற்பட்ட வளர்ச்சிக்கும் அவனது கல்வியில் ஏற்பட்ட வளர்ச்சிக்கும் இடையிலான வேறுபாட்டைப்பொறுத்தே அவன் காலம் கடந்து வாழ்பவனா அல்லது கால ஒட்டத்தில் அடித்து செல்லப்படும் துரும்பாகிறானா என்பது தீர்மானிக்கப்படுகிறது. உலகம் காணும் அனைத்து விதமான பிரச்சினைகளையும் நோக்கும் போதும் அவற்றின் தோற்றத்திற்கான அடிப்படைக்காரணம் பண்புகுறைபாடு தான் என்றால் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டிதான் வருகிறது. பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு பல்வேறு சமூகங்களாலும் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் முள் படர்ந்த மரமொன்றின் கிளைகள