Skip to main content

Posts

Showing posts from 2010

கூர்ப்பினில் மனிதனும் பறக்கும் தட்டு வாசியும் ( யார் ? இவர்கள் 12 )

கூர்ப்பு ஒரு இனம் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும் போது அது கூர்ப்பு மாற்றங்களுக்கு உட்படும் என்று சாள்ஸ் டார்வின் தனது கொள்கையில் வெளியிட்டு உள்ளார். இதன்படி மனிதனுடைய கூர்ப்பு மாற்றத்தை நாம் அவதானிப்பின் 1. நிமிர்ந்த தோற்றம் மேலும் ஒழுங்காக வருகிறது. 2. மூளையின் கனவளவுக்கும் உடலின் கனவளவிற்கும் இடையிலான விகிதம் அதிகரிக்கிறது. 3. பெருவிரலின் எதிரிடை ஆற்றல் அதிகரிக்கிறது. 4. நுட்பப்பிடி முறை ஆற்றல் விருத்தி அடைகிறது. மேற்கூறப்பட்ட மாற்றங்கள் இதுவரை மனிதனில் நீண்டகால அடிப்படையில் மாற்றமடைந்து வருவதாகும். ஆகவே இம்மாற்றங்கள் இனியும் தொடர்ந்து நடைபெறும் என்பது தெளிவாகிறது. மனிதன் மிகவும் நிமிர்ந்த தோற்றத்தை அடைவான். முளையின் கனவளவு அதிகரிக்க தலையின் பருமன் கூடும். அதே நேரத்தில் அவனது உடல் மெலிந்து குறுகிய தோற்றம் உடையதாக மாறும். பெரும்பாலும் மனிதனில் பெரும் பயன்பாட்டிற்கு உள்ளாக்கப்படும் அங்கங்கள் வளர்ச்சியடைய மற்றயவை மெதுமெதுவாக மறையத்தொடங்கும். ஆகவே எமது எதிர்காலத்தவர்களின் தோற்றத்தை நாம் அனுமானித்து விட்டோம். அந்நிலையில் அவர்களது தொழில்நுட்ப வளர்ச்சியும் உயர்வாகும். (

இறந்த காலத்தை அடைவோமா? ( யார் ? இவர்கள் 11 )

இறந்த காலத்தை அடைவது எப்படி? இங்கு நாம் பயன்படுத்தும் வேகம், ஒளியின் வேகத்தை அணுகும் போது எம்முடைய காலமானது மெதுவாக செல்லும். ஒளியின் வேகம் என்பதை தொடும் போது எமது காலமாற்றம் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 0 எனலாம். பெரும்பாலும் எனது கருத்துப்படி இது எக்காலத்திலும் சாத்தியமற்றது எனலாம். ஆயினும் அவ்வாறு எமது வேகம் ஒளியின் வேகத்திற்குச் சமனாயின் அவ்வாறு ஒரு வாகனத்தை இயக்குபவர் காலத்தையே வென்றவராவார். அதாவது அவர் தனது வாழ்வை வாகனத்திற்கு வெளியில் உள்ளோரின் இயல்பான காலத்தின் படி வேண்டுமானவரை அவ்வாகனத்தில் கழிக்கலாம். சரி அடுத்ததாக எமது வாகனம் ஒளியின் வேகத்தை மீறும் போதே நாம் எமது இறந்த காலத்திற்குச் செல்வோம். அதாவது நாம் கடந்து வந்த காலத்திற்கு மீண்டும் செல்லலாம். எமக்கு வேண்டுமான காலத்தில் தரையிறங்கி அங்குள்ள எமது சிறு வயதுத்தோற்றங்களை கூட சந்திக்கலாம். ஆனால் அவர்கள் ( இறந்தகாலத்திலுள்ளோர் ) தமது காலமே இயல்பான போக்குடையது என உணர்வர். எனவே அவர்களைப்பொறுத்தவரைக்கும் அங்கு செல்லும் நாம் அவர்களின் எதிர்காலத்தோர் ஆவோம். இவ்வாறு செயற்படக்கூடிய இயலுமையை எமது மனித குலம் பெறுமாயின் இதன் விளைவா

காலத்துடனான ஓர் பயணம் 03 ( யார் ? இவர்கள் 10 )

நாம் இயங்குவதால் இறந்தகாலத்தை அடைவோமா? ஒருவர் ஏதாவது இயக்கத்தில் இருக்கும் போதே அவர் மற்றவர்களை விட காலத்தால் மெதுவாகிறார். ஆனால் இந்தக்கால வித்தியாசம் மிக மிக குறைந்ததாக இருக்கும். அதாவது எம்மால் உணர்ந்து கொள்வது கடினமானது. காரணம் அவரின் வேகம் ஒளியின் வேகத்துடன் ஒப்பிடுகையில் மிக மிகக்குறைவானதாகும். உதாரணமாக நாம் ஒரு சைக்கிளில் இயங்கினால் கூட எமக்கு நேரம் மெதுவாகவே இருக்கும். ஆனால் அந்த நேரம் மிகவும் குறைவானது. எனவே அதைப்பரீட்சித்துப்பார்க்கவேண்டும் எனில் மிக மிக மிக ............................... குறைந்த நேரங்களையும் அளவிடக்கூடிய கடிகாரம் வேண்டும்.              அல்லாது விடில் நாம் இயங்கும் வாகனங்களின் கதியை மிகவும் அதிகரித்தால் அந்த நேரவித்தியாசத்தை உணரமுடியும். அதாவது ஒருவர் அவ்வாறு உயர்வேகத்தில் இயங்கினால் அவ்வாறு இயங்குபவர் மற்றவர் கண்களுக்கு புலப்படாமல் போவார். ஏனெனில் அவர் மற்றவர்களை விட காலத்தால் மெதுவானவர். நாம் ஒளியின் வேகத்துடன் ஒப்பிடக்கூடிய வகையிலான வேகமுடைய வாகனங்களில் இயங்குவோமாயின் இந்த மாற்றத்தை உணரமுடியும். அதாவது இயங்குகின்ற எமக்கு காலத்தில் ஏற்படும் மாற்ற

காலத்துடனான ஓர் பயணம் 02 ( யார் ? இவர்கள் 09 )

காலம் எனும் பாதையில் மற்றவர்களை விட நாம் விரைவாக பயணிக்க முடியுமா? பாதையில் தவறவிட்டவற்றை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியுமா? இக்கேள்வியானது நகைப்பிற்கு இடமாக தோன்றலாம். இழந்த நேரத்தை பெற்றுக்கொள்ளவே முடியாது என்பது சிறுபிள்ளையும் அறிந்த விடயமாகும். வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை நினைத்துப்பார்க்க முடியுமே தவிர மீண்டும் நாம் அங்கு செல்ல முடியாது என அனைவரும் கூறுவது வழக்கமாகும். நாம் செல்லவே முடியாத ஒன்றிற்கு எமது நினைவு மாத்திரம் எவ்வாறு செல்கிறது? சிலவேளைகளில் எமது நினைவானது எதிர்காலத்தையும் எண்ண முடிகிறதே... இது எவ்வாறு சாத்தியம்? இக்கேள்விகளுக்குரிய ஒரே பதில் நினைவு விரைவானது. நினைத்துப்பார்க்க முடியாத உயர்வேகத்தை உடையது என்பது தான். அதாவது நாம் இருக்கும் இடத்திலிருந்து எம்மால் அறியப்பட்ட மிக உயர் தூரமுடைய இடத்தையே கணப்பொழுதில் நினைத்து விடுகிறோம். உதாரணமாக, நாம் இலங்கையில் கொழும்பில் இருப்பதாக எண்ணிக்கொள்வோம். 1. கொழும்பில் உள ரயில் நிலையத்தை நினைக்கிறோம் எனில், அதனை எமது சாதாரண வாகனங்களால் அடைந்து கொள்ள முடியும் உ-ம் சைக்கிள் தரத்திலானவை 2. கண்டி மாநகரை நினைக்கிறோ

காலத்துடனான ஓர் பயணம்.. ( யார் ? இவர்கள் 08 )

எனது ஆய்வின் இரண்டாம் பகுதி இவ் ஆய்வின் ஆரம்பக்கட்டத்தில் நான் “ Unidentified Flying Object ” ( பறக்கும் தட்டுக்கள்) வேறு கிரகத்தில் இருந்து வருகின்றது எனும் அடிப்படையில் ஆராய்ந்தேன். அத்துடன் நம்மால் ( பூமியிலுள்ளோரால் ) அவதானிக்கப்பட்ட சில விசித்திர தோற்றம் கொண்ட அடிப்படையில் மனித உருவத்தை ஒத்திருந்த சிலர் வேறு கிரகத்தில் இருந்து வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் அலசி ஆராய்ந்தேன். அக்கருத்துகளை உறுதிப்படுத்தும் வகையில் பெற்றுக்கொண்ட சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்கள் அவை பற்றிய மக்களின் கருத்துகள் என்பவற்றை உலகளாவிய ரீதியில் அலசி ஆராய்ந்த போது குறிப்பிட்ட விசித்திரமானவர்கள் சம காலத்தில் வேற்றுக்கிரகங்களில் இருந்து வருகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. ஆனாலும் மேற்குறிப்பிட்ட ஆய்வை இன்னோர் அடிப்படையில் தொடரலாம் என எண்ணுகின்றேன். எனினும் இவ் ஆய்வை தொடர்வதற்கு முன் சில விளக்கங்களை அளிக்க வேண்டிய தேவை ஒன்று காணப்படுகின்றது. அவையாவன, 1. காலத்துடனான இயக்கம் 2. கூர்ப்பு பற்றிய கொள்ளைகள் ஆகும். காலம் என்பது என்ன? இதுவரை எம்மால் அறியப்பட்ட வரைக்கும் காலம் என்பது வாழ்வில் நாம்

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் ( யார் ? இவர்கள் 07)

பொதுவாக எந்த ஒரு போரிலும் சில முக்கியமான அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். அதில் முக்கியமானது தான் “உளவு” ஆகும். போருக்கு முன்னதாக எதிரியின் இயலுமை, ஆயுதவளங்கள், சாதகமான பௌதிகநிலைகள், செயல்வேகம் ஆகியவற்றை அறிந்து கொள்வதன் மூலம் போரின் முடிவை தமது தரப்பிற்கு சாதகமாக்கிக்கொள்வது என்பது “உளவு” இனுடைய அவசியம் ஆகும். ஆகவே பூமி மீதான முற்றுகைக்கான உளவு நடவடிக்கைகள் தான் இப்பொழுது அவதானிக்கப்படும் மேற்படி வேற்றுக்கிரகவாசிகளின் பிரசன்னத்திற்கான அர்த்தமாகுமா? எனும் கேள்வியும் எழத்தானே செய்கிறது. யுத்தம் உளவு முடிந்தவுடனா? அல்லது ஆரம்பித்துவிட்டதா? எமது கிரகத்திற்கு ஆக்கிரமிப்பு நோக்கமாக வருகை தரும் வேற்றுக்கிரகவாசிகள் அரங்கேற்றிக்கொண்டிருக்கின்ற உளவு நடவடிக்கைகள் தான் எம்மால் அவதானிக்கப்படும் சம்பவங்களுக்கான காரணம் என்று ஆய்வின் முன்னைய பகுதியில் தெளிவாக ஆராய்ந்து உறுதிப்படுத்தி இருந்தோம். அப்படியாயின் அவர்கள் தமது ஆக்கிரமிப்பின் ஓரங்கமாக மனிதர்கள் மீது உயிரிழப்புகளை ஏற்படுத்த்தொடங்கவில்லையா? என்று நோக்குமிடத்து இல்லை என்னும் பதிலை கூறுவதில் பல சிக்கல்கள் தோன்றுகின்றன. இதன் ஓரம்சமாக

வேற்றுக்கிரக வாசிகளின் வருகை ஆக்கிரமிப்பிற்கா? ஆராய்ச்சியிற்கா? யார் ? இவர்கள் - 06

வேற்றுக்கிரகவாசிகளின் எமது கிரகத்திற்கான வருகைக்குரிய காரணம் 1.ஆராய்ச்சி நாம் ஏனைய கிரகங்களைப்பற்றி அறிய முயற்சிப்பது போல் வேற்றுக்கிரகங்களில் நிலவும் பௌதிக அம்சம், உயிர்வாழ்வதற்கான சாதக நிலைகள் ஆகியவற்றை ஆராய்வதற்கான நோக்கத்தை எம்மிடம் தாராளமாக கொண்டுள்ளது போன்று ஏனைய கிரகங்களில் வாழும் வேற்றுக்கிரகவாசிகள் எதிர்பார்ப்பதுவும் இயல்பானதே. ஆகவே ஆராய்ச்சி என்பதை அடிப்படையாகக்கொண்டு அவர்கள் எமது கிரகத்திற்கு வருகைதருகின்றனர் என்பது மிகவும் முதன்மையான காரணமாக அமைகின்றது. ஆனால் ஆக்கிரமிப்பு தவிர்ந்த ஆராய்ச்சி நோக்கமாக இருப்பின் அவர்கள் ஆரம்பத்திலேயே எம்முடன் ( பூமியிலுள்ளோருடன் ) தமது உறவுகளை ஆரம்பித்திருக்க வேண்டும். பல சந்தர்ப்பங்களிலும் அவர்கள் எம்முடைய உறவுகளை விரும்பவில்லை என்பதை இவ்வாய்வின் முன்னைய பகுதிகளில் குறிப்பிடப்பட்ட உதாரணங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஆகவே இதுவரை பூமியில் அவர்களால் உயிரிழப்புகள் பெருமளவில் இடம்பெறாமைக்கு அவர்கள் நோக்கத்தில் காணப்படும் எம்மீதான சாதகத்தன்மையே காரணம் என்று எண்ணுவது முட்டாள்தனமானது. எனவே அவர்கள் நட்புறவுடன் கூடிய ஆராய்ச்சி நோக்கைக் கொண்டிருக்கவில

பேய் என்று யார் சொன்னது? (மாய இராஜ்ஜியம் - 21)

இந்தப்பதிப்பும் வாசகர்களின் சந்தேகங்களுக்கான எனது கருத்துகளாக வெளிவருகிறது..... நிச்சயமாக கருந்துளையானது தனது நிகழ்வெல்லைக்குட்பட்ட ஒளியின் வேகத்திலும் பார்க்க விடுதலை வேகம் குறைந்த துணிக்கைகளை உள்ளெடுக்கும். மேலும் பெர்முடா முக்கோணத்தில் கருந்துளைகளின் உருவாக்கம் ஒன்றோ பலவோ நிகழ்கின்றபோது அது அல்லது அவை தமது நிகழ்வெல்லைக்குட்பட்ட பகுதியில் காணப்படுகின்ற நீர் உள்ளிட்ட பதார்த்தங்களை நிச்சயமாக உள்ளெடுக்கும். இவ் உள்ளெடுக்கும் நிகழ்வானது கருந்துளையினுடைய ஆயுள் நீடிப்பு வரை நிகழும். பூமியில் நீரின் இராட்சத அளவு நீங்கள் அறிந்ததே. பெர்முடா முக்கோணத்தில் கருந்துளை உருவாக்கம் அல்லது உருவாக்கங்கள் மிகச்சிறிய பரப்பளவுள்ள பகுதியில் தோன்றுகின்ற போது, அங்கே உள்ளிழுக்கப்படுகின்ற நீரின் அளவானது ஒட்டுமொத்த உலகின் நீருடன் ஒப்பிடுகையில் மிகக்குறைவானதே. நீரானது பாய்ம இயல்பை தாராளமாகவே கொண்டிருக்கின்ற ஒரு திரவம். அங்கே குறைவாக்கம் ஏற்படுகின்ற நீரின் அளவானது மிக விரைவாக மீள்நிரப்பாக்கம் செய்யப்பட்டுவிடும். இன்னும் சொல்லப்போனால் ஒரு ஏரியில் நாம் ஒரு குவளை நீரை அள்ளுவதால் அவ்வேரிக்கு ஏற்படுகின்ற நீரிழப்பின

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் பால்வீதிகள், அவை கொண்டுள்ள நட்சத்திரக்கூட்டங்களின

யார் ? இவர்கள் 05

பறக்கும் தட்டை மக்கள் பார்த்து சில மணிநேரம் கழித்து இன்னோர் தகவலும் வெளியானது. நியூ மெக்சிகோ அருகே உள்ள ரோஸ்வேல் என்ற இடத்தில் வட்டவடிவமான (பறக்கும் தட்டு) பெரிய பொருள் ஒன்று நொறுங்கிக்கிடப்பதாக கூறப்பட்டது. நிறைகுறைந்த அதேநேரத்தில் உறுதியான உலோகத்தில் அந்த பறக்கும் தட்டு தயாரிக்கப்பட்டு இருந்தது. எனினும் அரசு தரப்பில் ஆரம்பத்தில் இச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டது. அதேநேரம் அமெரிக்க விமானப்படை இது தொடர்பாக இரகசிய விசாரணை ஒன்றையும் உடனடியாக நடாத்தியது. அப்போது பறக்கும் தட்டுகள் வானில் பறந்தது உண்மைதான் என்று தகவல் வெளியானது. இங்கு பெறப்பட்ட அவ்வுலோகமானது மிகவும் நிறைகுறைந்ததாகவும் ஆனால் மிகவும் உறுதி கூடியதாகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வுலோக இயல்பு பூமியில் உள்ள உலோகங்களின் இயல்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டது. ஆனாலும் உடனடியாக ஏற்பட்ட பரபரப்பையும் பதற்றத்தையும் தணிப்பதாக அரசு கூறிய கருத்து “ விமானப்படையினர் தட்பவெப்பநிலை மாற்றங்களை அறிய அனுப்பிய வானிலை ஆய்வு பலூன் தான் தரையில் வீழ்ந்து நொருங்கியது ’’ மேற்கூறப்பட்ட அனைத்து சாத்தியப்பாடுகளு

யார் ? இவர்கள் 04

3.குறிப்பிட்ட வேற்றுக்கிரகவாசிகளின் கிரகங்கள் வேறுபட்ட பௌதிக இயல்புகளை கொண்டிருத்தல். எமது பூமியிலுள்ள கருவிகள், உலோகங்கள் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வகையிலான கருவிகளை அவர்களுடைய விஞ்ஞானிகள் பயன்படுத்துவதன் மூலம் அவை எமது அவதானிப்பு சாதனங்களை தோற்கடிக்கக்கூடிய சாத்தியம் உண்டு என்று அமெரிக்காவின் பிரபல ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளார்கள். இதுவரை எமது விஞ்ஞானிகளால் மேற்படி வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான பாரிய தடயங்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாமை இச்சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. அவ் ஆய்வாளர்களின் கருத்திலிருந்து ஆராய்ந்து பார்க்கையில் சில விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாமென எண்ணுகிறேன். 1. அவர்களின் கிரகத்தில் உள்ள உலோகங்கள் உள்ளடங்கலான மூலகங்கள் உறுதி, அடர்த்தி, உருகுநிலை, கொதிநிலை ஆகியவற்றை இயல்பாக மாற்றி அமைக்கக்கூடியதாக இருக்குமிடத்து அவர்களின் ஏனைய கிரகங்கள் மீதான பிரவேசம் சவால்கள், பிரச்சினைகளை குறைவாகவே உள்ளடக்கியிருக்கும். 2. சூழலுக்கேற்ப ( பௌதிக நிலை மாற்றங்களுக்கு ஏற்ப ) உடலமைப்பை மாற்றக்கூடிய பரிமாண வளர்ச்சியை வேற்றுக்கிரகவாசிகள் தங்களுடைய கிரகத்தின் பௌதி

யார் ? இவர்கள் 03

வேற்றுக்கிரகவாசிகளை கைது செய்ய முடியாமல் போனது ஏன்? பறக்கும் தட்டுக்களை கைப்பற்றமுடியாமல் போனது ஏன்?      1. உயர் தொழில்நுட்பவிருத்தி           உயர்வேகம் ஏற்கனவே ஆய்வின் முற்பகுதியில் குறிப்பிட்டபடி பல அவதானிப்புகளிலும் பறக்கும் தட்டுகள் உயர்வேகம் கொண்டவை என்று குறிப்பிடப்பட்டது. வேகம் தொடர்பான அறிக்கைகள் அவதானிப்புகளை மேற்கொண்ட அனைத்து தரப்பானோர்களிடம் இருந்தும் பெறப்பட்டுள்ளமையானது பூமியில் உள்ள சாதனங்களின் வேகத்தை விட மேம்பட்டவை என்பது தெரிகிறது. பறக்கும் தட்டுக்கள் மட்டுமல்லாது வேற்றுக்கிரக வாசிகளும் மிகவும் வேகம் கூடியவர்கள் என்பது மக்களின் கருத்துக்களிலிருந்து புலப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 1963ம் ஆண்டும் 1965ம் ஆண்டும் “வர்கர்“ மற்றும் “ஜெமினி“ ஆகிய விண்கலங்கள் ஊடாக விண்வெளிக்குச் சென்று வந்த “கோர்டன் குபர்“ தான் ஜேர்மனிய இராணுவத்தில் பணியாற்றியபோது ஏற்பட்ட அனுபவத்தை விபரிக்கிறார். “ நான் அது ஒரு மிக் ரக வாகனம் என்று கருதி அதைப்பின்தொடர்ந்து சென்றபோதும் அது 45000 அடி உயரத்தில் பறந்து கண்ணில் படாமல் மறைந்து விட்டது. பூமியில் தயாரிக்கப்படுகின்ற எத்தகைய நவீன கருவிகளாலும

யார் ? இவர்கள் 02

சமீபத்தில் நிகழ்ந்த ஒரு பறக்கும் தட்டு சம்பவம் மேற்கத்தைய நாடுகளை கதிகலங்கச் செய்துள்ளது. கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை விமானிகளால் படம் பிடிக்கப்பட்டு தொலைக்காட்சி வாயிலாக செய்திகளாக உலகெங்கும் காண்பிக்கப்பட்டது. இச்சம்பவமானது 2004/03/05 இல் இடம்பெற்றது. வழக்கமாக விமானப்படை விமானங்கள் மூலம் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு வினோதமான பதினொரு ஒளிரும் பொருட்கள் வானில் தென்படுவதை பார்த்தவுடன் கண்காணிப்பு சாதனத்தில் பதிவு செய்யப்பட்டது. இதை அந்நாட்டு பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பு அதிகாரி ஒருவர் உறுதிசெய்தார். மே 10ம் திகதி செய்தி நிறுவனங்களுக்காக இந்த பறக்கும் தட்டு பற்றிய வீடியோக்கள் வெளியிடப்பட்டது. வினோதமான ஒளிரும் பொருட்களாக தென்பட்டவற்றில் சில கூரிய ஒளிரும் விளக்குகள் போலவும் இருந்தன. பொழுது சாயும் வேளையில் ஆகாயத்தில் தென்பட்ட இந்த பறக்கும் தட்டின் வேகம் திகைப்பூட்டும் விதமாக அதிவிரைவாக சென்று மறைந்தன. குறிப்பிட்ட நாளில் விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தல் காரர்களை பிடிப்பதற்காக கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது விமானப்படை விமானிகளால்

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக

பனாமா கால்வாய் 06

பனாமா கால்வாயின் தோற்றத்தினை நோக்கும் போது அதில் செயற்கையாக அமைக்கப்பட்ட கட்டூன் வாவியும் குறிப்பிட்டதொரு இடத்தை வகிக்கிறது. சாகிறஸ் ஆற்றிலிருந்து வரும் நீரினை மையப்படுத்தி கட்டூன் வாவி அமைக்கப்பட்டது. காலம் செல்லச்செல்ல சாகிறஸ் ஆற்றிலிருந்து வரும் நீர் கட்டூன் அணைக்கட்டு மூலமாக சேகரிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது நாளடைவில் அணைக்கட்டினை அண்டி ஆறு மூலமாக மண்ணும் அடித்து வரப்பட்டு அணைக்கட்டினை அண்டிய பிரதேசத்தில் விடப்படுவதால் ஆணைக்கட்டின் பலமும் அதிகரிக்கப்பட்டது. 1.5 மைல் தூரம் நீளமும் அடிப்பரப்பில் அண்ணளவாக 0.5 மைல் தூரம் அகலமுமாக அமைக்கப்பட்டது. நீளத்தின் வழியே இருவேறுபட்ட சுவர்களுக்கு இடையிலானதாக மேற்படி வாவி அமையும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தத்து. மேலும் மேற்படி சுவர்களின் மேற்பரப்பு ஒருவகையான கிளேயினால் உருவாக்கப்பட்டிருந்தது. காலம் செல்லச்செல்ல கிளேயும் காய்ந்து கடினமானதாக மாறி கட்டூனின் அணைக்கட்டு மென்மேலும் உறுதியாகியது. இந்த அணைக்கட்டானது அண்ணளவாக 16.9 மில்லியன் கனமீட்டர் அளவு மண்ணாலும் ( மலையின் பகுதி ) கிளேயினாலும் உருவாக்கப்பட்டதாகும். மற்றும் பனாமா கால்வாயின் மொத்த அளவுடன் ஒப