Skip to main content

வேற்றுக்கிரக வாசிகளின் வருகை ஆக்கிரமிப்பிற்கா? ஆராய்ச்சியிற்கா? யார் ? இவர்கள் - 06

வேற்றுக்கிரகவாசிகளின் எமது கிரகத்திற்கான வருகைக்குரிய காரணம்

1.ஆராய்ச்சி

நாம் ஏனைய கிரகங்களைப்பற்றி அறிய முயற்சிப்பது போல் வேற்றுக்கிரகங்களில் நிலவும் பௌதிக அம்சம், உயிர்வாழ்வதற்கான சாதக நிலைகள் ஆகியவற்றை ஆராய்வதற்கான நோக்கத்தை எம்மிடம் தாராளமாக கொண்டுள்ளது போன்று ஏனைய கிரகங்களில் வாழும் வேற்றுக்கிரகவாசிகள் எதிர்பார்ப்பதுவும் இயல்பானதே. ஆகவே ஆராய்ச்சி என்பதை அடிப்படையாகக்கொண்டு அவர்கள் எமது கிரகத்திற்கு வருகைதருகின்றனர் என்பது மிகவும் முதன்மையான காரணமாக அமைகின்றது.

ஆனால் ஆக்கிரமிப்பு தவிர்ந்த ஆராய்ச்சி நோக்கமாக இருப்பின் அவர்கள் ஆரம்பத்திலேயே எம்முடன் ( பூமியிலுள்ளோருடன் ) தமது உறவுகளை ஆரம்பித்திருக்க வேண்டும். பல சந்தர்ப்பங்களிலும் அவர்கள் எம்முடைய உறவுகளை விரும்பவில்லை என்பதை இவ்வாய்வின் முன்னைய பகுதிகளில் குறிப்பிடப்பட்ட உதாரணங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

ஆகவே இதுவரை பூமியில் அவர்களால் உயிரிழப்புகள் பெருமளவில் இடம்பெறாமைக்கு அவர்கள் நோக்கத்தில் காணப்படும் எம்மீதான சாதகத்தன்மையே காரணம் என்று எண்ணுவது முட்டாள்தனமானது. எனவே அவர்கள் நட்புறவுடன் கூடிய ஆராய்ச்சி நோக்கைக் கொண்டிருக்கவில்லை.



2. ஆக்கிரமிப்பு

2ம் உலகப்போரின்போது விமானப்படை விமானிகள் பறக்கும் போது ஒரு வினோத ஒளியால் ஆன எரிபந்துகளை (Glowing Balls) கண்டார்கள். அப்பந்துகள் விமானங்களைப்பின்தொடர்ந்ததைக் கண்டார்கள். விமானிகள் இவற்றை “Foo Fighters“ என்று குறிப்பிட்டனர்.

”Foo” என்றால் தீ என்று அர்த்தம் ஆகும். முதலில் கூட்டணிப்படைத்தளபதி இந்த ”Foo Fighters” ஜேர்மன் நாட்டின் இரகசிய ஆயுதங்கள் அல்லது கண்காணிப்புக்கருவிகளாக இருக்கலாம் என நம்பினார். ஆனால் போருக்குப்பிறகு தெரிந்தது என்னவெனில் ஜேர்மன் வீரர்களும் இத்தகைய எரிபந்துகளைக்கண்டனர். இவர்களும் இது அமெரிக்க அல்லது பிரிட்டன் கண்காணிப்பு கருவிகள் என நினைத்த்து தான் வேடிக்கை.

இச்சம்பவமானது அக்காலகட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு விசாரணைகளும் முடுக்கிவிடப்பட்டன. எனினும் இதில் ஒரு வெற்றிகரமான முன்னேற்றத்தையும் அடையவில்லை.

இதன்காரணமாக மக்கள் மத்தியில் அயற்கிரகவாசிகள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டது. இதுபோன்ற ஆயுதங்கள் ஒரு போரில் இருதரப்பாலும் அவதானிக்கப்பட்டமையானது இருதரப்பிற்குமிடையேயான முரண்பாடுகளை அதிகரிக்கச்செய்யும் உத்தியாகும். ஆகவே பூமியில் போர்நடந்து அதன்மூலம் அழிவுகள் தொடர்வதை விரும்பும் சக்தி ஒன்று வேற்றுக்கிரகத்தில் இயங்குகிறதா?

ஏற்கனவே இவ் ஆய்வில் குறிப்பிடப்பட்ட ஒரு சம்பவத்தை மீள ஆராய்வோம்.

அமெரிக்காவில் ஒரு பெண்மணி திடீரென கர்ப்பமுற்றது பின்னர் கர்ப்பம் திடீரென காணாமல் போனது போன்ற சம்பவங்களை ஆய்வின் தொடக்கத்தில் ஆராய்ந்தோம். அக்கர்ப்பம் மூலம் உண்டான அக்குழந்தை குறிப்பிட்ட வேற்றுக்கிரகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதா? அல்லது இப்பூமியில் வேறு ஒரு இடத்தில் வளர்கிறதா? எம்மால் அறியப்பட்டது இந்த ஓர் சம்பவமே. இவ்வாறு எத்தனை சம்பவங்கள் நடந்துள்ளனவோ?

மனித குலத்தில் திடீர் திடீரென நிகழும் சில விசித்திர பிறப்புகளுக்கும் இச்சம்பவங்களுக்குமிடையே ஏதாவது தொடர்பு இருக்குமா? பூமியில் உள்ளோரிடம் நல்லுறவுகளை கட்டியெழுப்பும் நோக்கம் அவர்களிம் இருந்தால் மேற்கூறப்பட்டவற்றை ஏன் மர்மமான முறையில் மேற்கொள்ளவேண்டும்?

                                                               தொடரும்......

Comments

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...