Skip to main content

பனாமா கால்வாய் 05

பனாமா கால்வாயினை நோக்கும்போது அத்திலாந்திக் கடலோரத்தில் ஆரம்பித்து பசுபிக் கடலோரத்தில் முடிவடையும் வரை மொத்தமாக 3 பிரமாண்டமான பூட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதலாவது பூட்டு கட்டூன் பகுதியிலும் இரண்டாவது பெட்ரோ மிகுவெல் பகுதியிலும் மற்றும் மூன்றாவது மிறோபிளோர் பகுதியிலும் அமைக்கப்பட்டன.

கட்டூன் பகுதியில் இரு சமாந்தரமாக அமைக்கப்பட்ட பூட்டுத்தொகுதியானது பனாமா கால்வாயினூடாக பயணத்தை மேற்கொள்ளும் கப்பல்களை அத்திலாந்திக் கடல் மட்டத்திலிருந்து உயர்த்துவது இப்பகுதி தான். கப்பல்கள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 90 அடி உயரம் அளவிற்கு உயர்த்தப்படுகிறது. இரு பூட்டுத்தொகுதிகளிலும் மொத்தம் 3 பகுதியாக கப்பல்கள் கடல் மட்டத்திலிருந்து 30 அடி வீதம் உயர்த்தப்படுகின்றன.

குலேபரா மலைப்பகுதியினை பாரிய சவால்களுக்கு மத்தியில் குறிப்பிட்ட அளவு அகழ்ந்து பின்னர் அப்பகுதியில் ( கட்டூன் ) கொங்கிறீட் இனால் கட்டப்பட்டதே இந்த பிரமாண்டமான பூட்டாகும். மேற்படி பூட்டு அமைப்பதற்கு அண்ணளவாக 1.53 மில்லியன் கனமீட்டர் கொங்கிறீட் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் கட்டூன் பகுதியில் உருவாக்கப்பட்ட பூட்டுப்பகுதியின் அகலம் 28.5 மீட்டர் அளவு என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் 1908ம் ஆண்டளவில் அமெரிக்க கடற்படையின் வேண்டுகோளுக்கு அமைய அதன் அகலம் 33 மீட்டர் ஆக அதிகரிக்கப்பட்டது. அமைக்கபட்ட பூட்டு ஒவ்வொன்றினதும் நீளம் சுமார் 300 மீட்டர் அளவானதாக காணப்பட்டது. சூழ இருக்கும் சுவரினதும் அடியினதும் தடிப்பு 15மீட்டர் அளவிற்கு உருவாக்கபட்டது. மற்றும் கட்டூனில் உள்ள பூட்டுத்தொகுதிற்கு இடைப்பட்ட சுவரானது 18 மீட்டர் அளவினதாக அமைக்கப்பட்டது. இந்தப்பகுதியில் 24 மீட்டர் அளவு உயரமான சுவரும் எழுப்ப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பூட்டிற்கான கதவுகள் உருக்கினால் ஆக்கப்பட்டன. சராசரி தடிப்பு 2 மீட்டரும் நீளம் 19 மீட்டராகவும் மற்றும் 20 மீட்டர் உயரமாகவும் காணப்பட்டது.

பெட்ரோ மிகுவெல் பகுதியில் அமைக்கப்பட்ட பூட்டு தான் இம்மூன்று பூட்டுகளிலும் மிகவும் சிறியது. இது 10 மீட்டர் அளவு உயரத்தை குறைக்கும்அதிகரிக்கும் பணியினை மேற்கொள்கிறது. மிறோபுளோர் பூட்டு சுமார் 16மீட்டர் அளவில் இருபகுதியாக உயரத்தை குறைத்து பசுபிக் கடல்மட்டத்தினை அடைய செய்கிறது. கீழே காட்டப்பட்டிருக்கும் படமானது கட்டூன் பகுதியில் பூட்டுத்தொகுதி உருவாக்கத்தின் போது எடுக்கப்பட்டதாகும்.

பனாமா கால்வாய் உருவாக்குவது தொடர்பில் ஆரம்ப காலம் முதலே ஆரம்பிப்பது பின்னர் விடுவது என்று பல ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்சினைக்கு அமெரிக்க அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்தமை வரவேற்கத்தக்கவிடயமே. இருப்பினும் ஆரம்பம் முதலே பல்வேறு சமூக ஆர்வலர்கள் இயற்கையை பாழ்படுத்தும் வேலை என கண்டனம் தெரிவித்தனர். அவர்களது கூற்றும் நிதர்சனமாகும் வகையில் பல்வேறு காலகட்டத்திலும் மழைபெய்யும் வேளைகளில் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டன. அவையே மக்களின் வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தலாகவும் அமைந்தன. இந்த சவால்கள் பிரான்ஸ் அரசாங்கம் குலேபரா மலைப்பகுதியினை உடைத்துக்கொண்டிருந்த காலங்களிலேயே அதிகமாக ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


கட்டூன் பூட்டுத்தொகுதியின் தற்கால அமைப்பினை கீழுள்ள படத்தின் மூலம் காணலாம்.


தொடரும்............

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...