Skip to main content

பனாமா கால்வாய் 05

பனாமா கால்வாயினை நோக்கும்போது அத்திலாந்திக் கடலோரத்தில் ஆரம்பித்து பசுபிக் கடலோரத்தில் முடிவடையும் வரை மொத்தமாக 3 பிரமாண்டமான பூட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதலாவது பூட்டு கட்டூன் பகுதியிலும் இரண்டாவது பெட்ரோ மிகுவெல் பகுதியிலும் மற்றும் மூன்றாவது மிறோபிளோர் பகுதியிலும் அமைக்கப்பட்டன.

கட்டூன் பகுதியில் இரு சமாந்தரமாக அமைக்கப்பட்ட பூட்டுத்தொகுதியானது பனாமா கால்வாயினூடாக பயணத்தை மேற்கொள்ளும் கப்பல்களை அத்திலாந்திக் கடல் மட்டத்திலிருந்து உயர்த்துவது இப்பகுதி தான். கப்பல்கள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 90 அடி உயரம் அளவிற்கு உயர்த்தப்படுகிறது. இரு பூட்டுத்தொகுதிகளிலும் மொத்தம் 3 பகுதியாக கப்பல்கள் கடல் மட்டத்திலிருந்து 30 அடி வீதம் உயர்த்தப்படுகின்றன.

குலேபரா மலைப்பகுதியினை பாரிய சவால்களுக்கு மத்தியில் குறிப்பிட்ட அளவு அகழ்ந்து பின்னர் அப்பகுதியில் ( கட்டூன் ) கொங்கிறீட் இனால் கட்டப்பட்டதே இந்த பிரமாண்டமான பூட்டாகும். மேற்படி பூட்டு அமைப்பதற்கு அண்ணளவாக 1.53 மில்லியன் கனமீட்டர் கொங்கிறீட் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் கட்டூன் பகுதியில் உருவாக்கப்பட்ட பூட்டுப்பகுதியின் அகலம் 28.5 மீட்டர் அளவு என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் 1908ம் ஆண்டளவில் அமெரிக்க கடற்படையின் வேண்டுகோளுக்கு அமைய அதன் அகலம் 33 மீட்டர் ஆக அதிகரிக்கப்பட்டது. அமைக்கபட்ட பூட்டு ஒவ்வொன்றினதும் நீளம் சுமார் 300 மீட்டர் அளவானதாக காணப்பட்டது. சூழ இருக்கும் சுவரினதும் அடியினதும் தடிப்பு 15மீட்டர் அளவிற்கு உருவாக்கபட்டது. மற்றும் கட்டூனில் உள்ள பூட்டுத்தொகுதிற்கு இடைப்பட்ட சுவரானது 18 மீட்டர் அளவினதாக அமைக்கப்பட்டது. இந்தப்பகுதியில் 24 மீட்டர் அளவு உயரமான சுவரும் எழுப்ப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பூட்டிற்கான கதவுகள் உருக்கினால் ஆக்கப்பட்டன. சராசரி தடிப்பு 2 மீட்டரும் நீளம் 19 மீட்டராகவும் மற்றும் 20 மீட்டர் உயரமாகவும் காணப்பட்டது.

பெட்ரோ மிகுவெல் பகுதியில் அமைக்கப்பட்ட பூட்டு தான் இம்மூன்று பூட்டுகளிலும் மிகவும் சிறியது. இது 10 மீட்டர் அளவு உயரத்தை குறைக்கும்அதிகரிக்கும் பணியினை மேற்கொள்கிறது. மிறோபுளோர் பூட்டு சுமார் 16மீட்டர் அளவில் இருபகுதியாக உயரத்தை குறைத்து பசுபிக் கடல்மட்டத்தினை அடைய செய்கிறது. கீழே காட்டப்பட்டிருக்கும் படமானது கட்டூன் பகுதியில் பூட்டுத்தொகுதி உருவாக்கத்தின் போது எடுக்கப்பட்டதாகும்.

பனாமா கால்வாய் உருவாக்குவது தொடர்பில் ஆரம்ப காலம் முதலே ஆரம்பிப்பது பின்னர் விடுவது என்று பல ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்சினைக்கு அமெரிக்க அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்தமை வரவேற்கத்தக்கவிடயமே. இருப்பினும் ஆரம்பம் முதலே பல்வேறு சமூக ஆர்வலர்கள் இயற்கையை பாழ்படுத்தும் வேலை என கண்டனம் தெரிவித்தனர். அவர்களது கூற்றும் நிதர்சனமாகும் வகையில் பல்வேறு காலகட்டத்திலும் மழைபெய்யும் வேளைகளில் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டன. அவையே மக்களின் வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தலாகவும் அமைந்தன. இந்த சவால்கள் பிரான்ஸ் அரசாங்கம் குலேபரா மலைப்பகுதியினை உடைத்துக்கொண்டிருந்த காலங்களிலேயே அதிகமாக ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


கட்டூன் பூட்டுத்தொகுதியின் தற்கால அமைப்பினை கீழுள்ள படத்தின் மூலம் காணலாம்.


தொடரும்............

Comments

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...