Skip to main content

பனாமா கால்வாய் 05

பனாமா கால்வாயினை நோக்கும்போது அத்திலாந்திக் கடலோரத்தில் ஆரம்பித்து பசுபிக் கடலோரத்தில் முடிவடையும் வரை மொத்தமாக 3 பிரமாண்டமான பூட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதலாவது பூட்டு கட்டூன் பகுதியிலும் இரண்டாவது பெட்ரோ மிகுவெல் பகுதியிலும் மற்றும் மூன்றாவது மிறோபிளோர் பகுதியிலும் அமைக்கப்பட்டன.

கட்டூன் பகுதியில் இரு சமாந்தரமாக அமைக்கப்பட்ட பூட்டுத்தொகுதியானது பனாமா கால்வாயினூடாக பயணத்தை மேற்கொள்ளும் கப்பல்களை அத்திலாந்திக் கடல் மட்டத்திலிருந்து உயர்த்துவது இப்பகுதி தான். கப்பல்கள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 90 அடி உயரம் அளவிற்கு உயர்த்தப்படுகிறது. இரு பூட்டுத்தொகுதிகளிலும் மொத்தம் 3 பகுதியாக கப்பல்கள் கடல் மட்டத்திலிருந்து 30 அடி வீதம் உயர்த்தப்படுகின்றன.

குலேபரா மலைப்பகுதியினை பாரிய சவால்களுக்கு மத்தியில் குறிப்பிட்ட அளவு அகழ்ந்து பின்னர் அப்பகுதியில் ( கட்டூன் ) கொங்கிறீட் இனால் கட்டப்பட்டதே இந்த பிரமாண்டமான பூட்டாகும். மேற்படி பூட்டு அமைப்பதற்கு அண்ணளவாக 1.53 மில்லியன் கனமீட்டர் கொங்கிறீட் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் கட்டூன் பகுதியில் உருவாக்கப்பட்ட பூட்டுப்பகுதியின் அகலம் 28.5 மீட்டர் அளவு என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் 1908ம் ஆண்டளவில் அமெரிக்க கடற்படையின் வேண்டுகோளுக்கு அமைய அதன் அகலம் 33 மீட்டர் ஆக அதிகரிக்கப்பட்டது. அமைக்கபட்ட பூட்டு ஒவ்வொன்றினதும் நீளம் சுமார் 300 மீட்டர் அளவானதாக காணப்பட்டது. சூழ இருக்கும் சுவரினதும் அடியினதும் தடிப்பு 15மீட்டர் அளவிற்கு உருவாக்கபட்டது. மற்றும் கட்டூனில் உள்ள பூட்டுத்தொகுதிற்கு இடைப்பட்ட சுவரானது 18 மீட்டர் அளவினதாக அமைக்கப்பட்டது. இந்தப்பகுதியில் 24 மீட்டர் அளவு உயரமான சுவரும் எழுப்ப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பூட்டிற்கான கதவுகள் உருக்கினால் ஆக்கப்பட்டன. சராசரி தடிப்பு 2 மீட்டரும் நீளம் 19 மீட்டராகவும் மற்றும் 20 மீட்டர் உயரமாகவும் காணப்பட்டது.

பெட்ரோ மிகுவெல் பகுதியில் அமைக்கப்பட்ட பூட்டு தான் இம்மூன்று பூட்டுகளிலும் மிகவும் சிறியது. இது 10 மீட்டர் அளவு உயரத்தை குறைக்கும்அதிகரிக்கும் பணியினை மேற்கொள்கிறது. மிறோபுளோர் பூட்டு சுமார் 16மீட்டர் அளவில் இருபகுதியாக உயரத்தை குறைத்து பசுபிக் கடல்மட்டத்தினை அடைய செய்கிறது. கீழே காட்டப்பட்டிருக்கும் படமானது கட்டூன் பகுதியில் பூட்டுத்தொகுதி உருவாக்கத்தின் போது எடுக்கப்பட்டதாகும்.

பனாமா கால்வாய் உருவாக்குவது தொடர்பில் ஆரம்ப காலம் முதலே ஆரம்பிப்பது பின்னர் விடுவது என்று பல ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்சினைக்கு அமெரிக்க அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்தமை வரவேற்கத்தக்கவிடயமே. இருப்பினும் ஆரம்பம் முதலே பல்வேறு சமூக ஆர்வலர்கள் இயற்கையை பாழ்படுத்தும் வேலை என கண்டனம் தெரிவித்தனர். அவர்களது கூற்றும் நிதர்சனமாகும் வகையில் பல்வேறு காலகட்டத்திலும் மழைபெய்யும் வேளைகளில் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டன. அவையே மக்களின் வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தலாகவும் அமைந்தன. இந்த சவால்கள் பிரான்ஸ் அரசாங்கம் குலேபரா மலைப்பகுதியினை உடைத்துக்கொண்டிருந்த காலங்களிலேயே அதிகமாக ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


கட்டூன் பூட்டுத்தொகுதியின் தற்கால அமைப்பினை கீழுள்ள படத்தின் மூலம் காணலாம்.


தொடரும்............

Comments

Popular posts from this blog

Visual Basic - Hello World (பார்வை - 2)

அனைவருக்கும் வணக்கம்…. சென்ற பதிப்பில் Visual Basic இல் நிரலாக்க குறியீடுகள் (Programming Codings) எழுதும் பகுதியில் இருந்து இயங்குநிலைக்கு எப்படி கொண்டு செல்வது என்று பார்த்தோம். இன்றைய பதிப்பில் அவசரமாக எப்படி நிரலாக்க குறியீடுகள் எழுதுவது என்று பார்க்க முன்னர் சில பகுதிகளை குறிப்புகளாக நோக்கிவிட்டு Programme எழுத போகலாம். பொதுவாக எல்லா மொழிகளுக்கும் பலதரப்பட்ட வரையறைகள் இருக்கின்றன. உதாரணமாக…. நாம் நாளை பாடசாலை சென்றேன். இந்த வசனத்தில் ஏகப்பட்ட பிழைகள். இப்படி ஒருவர் கூறும் பட்சத்தில் அவர் என்ன கூறவருகிறார் என்று எங்களால் இனங்காணமுடியாத சூழ்நிலைகள் காணப்படுகின்றன. இதே பிரச்சினை தான் இந்த நிரலாக்க மொழி சூழலிலும் காணப்படுகின்றது. கணினி என்று நோக்கும் போது அங்கும் அதனால் விளங்க கூடிய வகையில் நாம் கூறுபவை தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மொழி பயிலும் போதும் ஆரம்பத்தில் பல இடர்பாடுகள் இருப்பது போன்று காணப்படும் மாயை காலம் செல்ல செல்ல இடர்பாடுகள் குறைந்து செல்வது போன்ற தோற்றப்பாட்டை கொண்டு காணப்படும். இங்கும் நாம் கணினியால் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அதனுடன் வரையறைகளுக்கு உட்பட்ட...

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

யார் ? இவர்கள் 05

பறக்கும் தட்டை மக்கள் பார்த்து சில மணிநேரம் கழித்து இன்னோர் தகவலும் வெளியானது. நியூ மெக்சிகோ அருகே உள்ள ரோஸ்வேல் என்ற இடத்தில் வட்டவடிவமான (பறக்கும் தட்டு) பெரிய பொருள் ஒன்று நொறுங்கிக்கிடப்பதாக கூறப்பட்டது. நிறைகுறைந்த அதேநேரத்தில் உறுதியான உலோகத்தில் அந்த பறக்கும் தட்டு தயாரிக்கப்பட்டு இருந்தது. எனினும் அரசு தரப்பில் ஆரம்பத்தில் இச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டது. அதேநேரம் அமெரிக்க விமானப்படை இது தொடர்பாக இரகசிய விசாரணை ஒன்றையும் உடனடியாக நடாத்தியது. அப்போது பறக்கும் தட்டுகள் வானில் பறந்தது உண்மைதான் என்று தகவல் வெளியானது. இங்கு பெறப்பட்ட அவ்வுலோகமானது மிகவும் நிறைகுறைந்ததாகவும் ஆனால் மிகவும் உறுதி கூடியதாகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வுலோக இயல்பு பூமியில் உள்ள உலோகங்களின் இயல்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டது. ஆனாலும் உடனடியாக ஏற்பட்ட பரபரப்பையும் பதற்றத்தையும் தணிப்பதாக அரசு கூறிய கருத்து “ விமானப்படையினர் தட்பவெப்பநிலை மாற்றங்களை அறிய அனுப்பிய வானிலை ஆய்வு பலூன் தான் தரையில் வீழ்ந்து நொருங்கியது ’’ மேற்கூறப்பட்ட அனைத்து சாத்தியப்பாடுகளு...