Skip to main content

யார் ? இவர்கள் 01

முன்னுரை


ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள்



காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியவில்லை. ஆகவே இதுவரை நடைபெற்ற சம்பவங்களை குறிப்பிட்டு அச்சந்தர்ப்பங்களில் மக்கள் எதிர்கொண்ட சவால்களையும் தெரிவித்து இனிவரும் காலங்களில் பறக்கும் தட்டுகள் தொடர்பாக ஏற்படக்கூடிய அனைத்து சம்பவங்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளத்தேவையான அறிவைப்பெற்றுக்கொடுப்பதே எனது ஆய்வின் முக்கிய நோக்கமாக காணப்படுகிறது.                            





ரவிகரன் ரணேந்திரன்
தரம்- 13 விஞ்ஞானப்பகுதி ( 2008 )
விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி
நீர்கொழும்பு.












பறக்கும் தட்டுகள் வேற்றுக்கிரக வாசிகள் ஆகிய பதங்களின் உண்மைத்தன்மை

உலகெங்கும் கிடைக்கப்பெற்ற ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள்



உலகின் அனைத்து பாகங்களிலும் கிடைத்த முறைப்பாடுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வது அர்த்தமற்றது என்றாலும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்களின் கருத்துகளில் காணப்பட்ட ஒற்றுமையானது உண்மை இருக்கலாமென காட்டுகிறது.



சில உதாரணங்கள்

பறக்கும் தட்டுகள்

1. 1998 / மார்ச்சு / 14, 15, 16

இடம் :- குயின்ஸ்ராந்து கிங்காராய்

அவதானித்தவர் :- பிரதேச மக்கள் பலர்

கருத்து :- மாலை 6.40 அளவில் தொடுவானத்தில் வெள்ளை நிறமான பிரகாசமான விளக்குகள் கொண்ட அடிப்பகுதி அகன்ற வட்டமும் மேற்பகுதி கூம்பியும் இருந்த தட்டுகள் பறந்து சென்றன. ( மிகவும் விரைவாக )



2. 1998 / மார்ச்சு / 17

இடம் :- குயின்ஸ்ராந்து கிங்காராய்

அவதானித்தவர் :- பிரதேச மக்கள் பலர்

கருத்து :- மாலை 6.30 அளவில் கறுப்பு நிறமான வெள்ளை விளக்குகள் கொண்ட வட்ட வடிவமான தட்டுக்கள் பறந்து சென்றன.



3. 1998 / மார்ச்சு / 23

இடம் :- பிந்தூன் மேற்கு ஆசியா

அவதானித்தவர் :- பிரதேச மக்கள் பலர்

கருத்து :- இரவு 9.45 மணிக்கு வெளிர் மஞ்சள் நிறமுடைய தட்டு ஒன்று சிவப்பு பச்சை விளக்குகளை கொண்டு பறந்தது.



4. 1998 / ஏப்ரல் / 23

இடம் :- மெல்போர்ன் அவுஸ்திரேலியா

அவதானித்தவர் :- பாப்வாட்டர் மேன்

கருத்து :- இரவு 7.30 மணிக்கு மொட்டை மாடியில் நின்று அளவளாவிக்கொண்டிருந்த போது பல வர்ண விளக்குகளைக்கொண்ட வட்டத்தட்டு ஒன்று மிக வேகமாக உரத்த சத்த்த்துடன் சென்றது.

குறிப்பு இதன் சத்த்த்தை பிரதேசவாசிகளும் கேட்டுள்ளனர்.



5. 1998 / ஏப்ரல் / 22

இடம் :- அவுஸ்திரேலியா

அவதானித்தவர் :- ஓய்வுபெற்ற விமானக்கப்டன்

கருத்து :- மாலை 6.40 இற்கு நடைப்பயிற்சியிலிருந்த போது மிகப்பெரிய வட்டவடிவமான ஒளிரும் பொருள் மிக வேகமாக எம்மைக்கடந்து சென்றது. இதன் ஒலி மிகவும் உரப்பு கூடியதாக இருந்தது.



6. 1998 / சித்திரை / 30

இடம் :- பண்டாரவளை தியத்தலாவை இலங்கை

அவதானித்தவர் :- பாடசாலை மாணவர்கள்

கருத்து :- அதிகாலை வேளையில் வட்ட வடிவமான தட்டு ஒன்று விளையாட்டு மைதானத்தில் தரையிறங்கியது. இது ஒளிரும் விளக்குகளை கொண்டிருந்தது.



7. 2000 / தை / 1

இடம் :- கண்டி குண்ணப்பன

அவதானித்தவர்கள் :- பல இளைஞர்கள்

கருத்து :- இரவு நேரத்தில் 300 அடி உயரத்தில் சிவப்பு நிற வட்டவடிவமான தட்டு வேகமாக பறந்தது.

பறக்கும் தட்டுக்களின் சில படங்கள்

தொடரும்......



Comments

  1. தங்களது ஈழத்தமிழும் ,அதை விஞ்ஞான விளக்கங்களில் கையாள்வதும் மிக அருமை.
    உங்களது ஆய்வு நோக்கு எனக்குள் ஒரு விதையை விதைத்துள்ளது.எனது ப்ளாக் ஸ்பாட்
    http://machamuni.blogspot.com/
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  2. தங்களது வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றிகள் ஐயா.

    உங்களின் மீள்வருகையையும் பதிவுகள் மீதான விமர்சனங்கள் இடுதலையும் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...