Skip to main content

Posts

Showing posts from October, 2009

போதைப்பொருள் துஸ்பிரயோகமும் அதன் பாதிப்புகளும்-06

                             இன்று 60 வகையான கொடூர நோய்களுக்கு மதுபானமே காரணியாக காணப்படுகிறது. மொத்த நோய்களில் மதுபானத்தின் மூலமாக ஏற்படும் நோய் வீதம் 4 ஆக உள்ளது. மதுபானம் அருந்துபவர்கள் தம்மை அறியாமலே பல்வேறு விபத்துக்களை உண்டாக்குகிறார்கள். குடித்துவிட்டு வாகனத்தை வேகமாக ஓட்டுவதால் சாலை விபத்துக்களில் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. இதய நோய்கள், கல்லீரல் பாதிப்பு, பக்கவாதம், வாய் - கல்லீரல் - மற்றும் மார்பு சார்ந்த புற்றுநோய்கள் போன்றவை மதுபானம் பருகுவதாலேயே ஏற்படுகின்றது. இவ்வாறு போதைப்பொருட்களை நுகர்வோர் மீண்டும் மீண்டும் நுகர ஆசை கொண்டு திருட பிச்சை எடுக்க கொலை - கொள்ளை போன்ற செயல்களை செய்யக்கூட தயங்காமல் இருப்பார்கள். இவ்வாறு போதைப்பொருட்களுக்கு இலக்காவதன் மூலம் அற்புத கலைத்திறன், அனுபவ அறிவு, புத்திசாலித்தனம், சுயகௌரவம், பாசப்பிணைப்பு, நம்பிக்கைகள் என அனைத்தையும் இழந்துவிடுகிறார்கள்.                           இதன்போக்கை மாற்ற அதாவது போதைப்பொருள் பாவனையைத்தடுக்க அரசாங்கம் மற்றும் சமூக நலன்புரி சங்கங்கள் ஒன்றிணைந்து பல்வேறு முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அரசு இவ்வாறான

போதைப்பொருள் துஸ்பிரயோகமும் அதன் பாதிப்புகளும்-05

                   மதுபானம் இயற்கையில் உண்டாகும் ஒரு திரவம் அன்று. அது பதார்த்தங்கள் கெடுவதால் உண்டாவதாகும். கோதுமை, சோளம், ஒட்ஸ், பார்லி, அரிசி, திராட்சை போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இவை மற்றைய பதார்த்தங்கள் போலன்றி உடலில் காணப்படும் வெண்குருதிசிறுதுணிக்கைகளை அழிக்கிறது. மேலும் நுகரும் மதுபானத்தில் 20 சதவீதம் இரத்தத்தில் நேரடியாக கலந்து உடல் உறுப்பு பலவற்றையும் பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றது. ஈரல், மூளை நரம்புகள், பாலின உறுப்புகள், சிறுநீரகங்கள், நுரையீரல்கள், இரப்பை, இரத்தக்குழாய்கள் ஆகியவற்றின் உட்புறத்தை பாதிக்கவைத்து உடல் உறுப்புகளை பழுதாக்குகின்றது. பார்வை நரம்புகள், கை கால் நரம்புகள் பாதிப்பிற்குள்ளாகி குடற்புண் ஏற்பட்டு ஈற்றில் இரப்பைஅழற்சியும் ஏற்படும். நாம் சாப்பிடுகின்ற எந்த உணவும் ஜீரணமடைந்த பிறகு சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு இரத்தத்தோடு கலந்து விடும். இச்சத்துக்கள் கல்லீரலுக்கு சென்று அங்கு பல்வேறு மாற்றங்களையும் பெறும். உடலின் தேவைக்குப்போக மீதமுள்ள பல்வேறு சத்துக்களும் கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும். அதேபோல் மது அருந்தும் போதும்  அது சிறுகுடலால்

போதைப்பொருள் துஸ்பிரயோகமும் அதன் பாதிப்புகளும்-04

                  சரி இனி எவ்வாறு புகைப்பிடிப்பதை தடை செய்வதென நோக்குவோம். புகைத்தலைத் தடை செய்வது தொடர்பாக இந்திய ஆங்கிலப் பத்திரிகையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒரு பகுதியின் தமிழாக்கத்தை கீழே காணலாம்.                 ” புகைத்தலை விலத்தும் செயற்பாட்டில் ஆலோசனை வழங்கல் 01ம் மாதம், 03ம் மாதம், 06ம் மாதம் ,1 வருடத்திலும் மேற்கொள்ளப்படும். அவர்களின் முறைப்பாட்டை மதிப்பளித்து கேட்க வேண்டும். அவர்களிடம் நெருக்குவாரம், நோ, விரக்தி, மனத்திடமின்மை காணப்படும். காலம் கடந்தாலும் காரியமில்லை நிற்பாட்டினாலே போதும் என்பதை இலகுவாகவும் விளங்கக்கூடிய தன்மையிலும் புரிய வைக்கவேண்டும். புகைத்தலை விலத்தினால் 48 மணித்தியாலங்களில் பெரும்பாலான காபன் மொனோசைட்டுக்கள், நிக்கோட்டின் இல்லாது போகும். விலத்தல் அறிகுறிகள் முதற் கிழமையில் அதிகமாக இருக்கும். 3 - 4 கிழமையில் முற்றாக இல்லாது போய்விடும் "                  புகைத்தல் பழக்கத்தை ஆரம்பிப்பது மிக இலகு எனவும் அப்பழக்கத்தை பழக்கப்படுத்திய பின் அதனை கைவிடுவது மிகமிக கடினமாகும் எனவும் அனுபவப்பட்டவர்கள் வாயிலாக இன்று அறியக்கூடியதாக உள்ளது. இதனை ஒரு சான்ற

போதைப்பொருள் துஸ்பிரயோகமும் அதன் பாதிப்புகளும் 03

                       உலகில் மொத்தம் 110 கோடி பேர் புகையிலை பாவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதில் 80 கோடி பேர் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலும் 30 கோடி பேர் அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் இருக்கிறார்களாம். அதுமட்டுமல்லாது ஒரு நிமிடத்தில் சுமார் 6 பேர் வரை புகைத்தலால் உயிர் இழக்கிறார்கள் என 2004ம் ஆண்டின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகைப்பிடிப்பதன் மூலம் புகைப்பிடிப்பவர்கள் இதயநாளம் சார்ந்த நோய்களால் அவதிப்படுவதாகவும் இது கைத்தொழில் நாடுகளில் வாழும் 10 இலட்சம் பேருக்கும் அபிவிருத்தியடைந்து வரும்நாடுகளில் வாழும் 67000ம் பேருக்கும் உள்ளது எனவும் மேற்படி ஆய்வுகள் எடுத்து இயம்புகின்றன. மேலும் சுவாசப்பை அழற்சி, இதயபலவீனம், மாரடைப்பு, சுவாசப்பைப்புற்றுநோய், மார்புச்சளிநோய், சுவாசப்பாதைப்புற்றுநோய், கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படல், வாய்ப்புற்றுநோய், களப்புற்றுநோய், இரப்பைப்புண், சிறுநீர்ப்பைப்புற்றுநோய்  போன்ற பல நோய்கள் புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கும் ஏற்படுகிறது. புகையிலையில் காணப்படும் 4000 வகையிலான இரசாயனப் பதார்த்தங்களின் ம

புகைப்பிடித்தலை நிறுத்துங்கள்!!!!!

புகைப்பிடித்தலை நிறுத்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பின்னர்..... 20 நிமிடம் - குருதி அமுக்கமும் துடிப்பு வீதமும் சாதாரண நிலைக்கு திரும்புகிறது. 8 மணி நேரம் - குருதியில் நிகோடின் காபன் ஒரு ஒக்சைட் இன் அளவு        அரைவாசியாக குறைகிறது அத்துடன் ஒட்சிசனின் அளவும் பழைய நிலைக்கு திரும்புகிறது.  24 மணி நேரம் - எமது உடம்பிலிருந்து காபன் ஒரு ஒக்சைட் அகற்றப்படுவது மட்டுமல்லாது குடல்களும் புகைப்பிடித்தலால் உடம்பில் படிந்த கழிவுகளை அகற்ற ஆரம்பிக்கின்றது.  48 மணி நேரம் - எமது உடம்பில் இருந்து நிகோடின் முற்றிலுமாக அகற்றப்பட்டு விடும். சுவாசிப்பதற்கும் சுவைப்பதற்குமான தகவு மிகவும் முன்னேற்றகரமான வகையில் இருக்கும். 72 மணி நேரம் - சுவாசிப்பது இலகுவாக இருக்கும். உங்களது சக்தி மட்டம் அதிகரிக்கிறது. 1 மாதம் - உங்களது தோல்கள் முன்னேற்றகரமான நிலையை அடையும் அல்லது விருத்தி அடையும். 3-9 மாதம் - இருமல் இழுப்பு மற்றும் சுவாசம் சார்ந்த நோய்கள் விலகத் தொடங்கும். உமது நுரையீரலின் தொழிற்பாடும் 10 ஆல் அதிகரிக்கும். 1 வருடம் - புகைப்பிடிப்பவருடன் ஒப்பிடும் போது மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்

போதைப்பொருள் துஸ்பிரயோகமும் அதன் பாதிப்புகளும்-02

.............. இவ்வாறான போதைப்பொருட்களுள் மிகுந்த ஆபத்ததான விளைவைத்தருவதில்  முதன்மையாக காணப்படுவது புகையிலையாகும். இதிலும் சிகரெட் மிக மிக ஆபத்தானதொன்றாக காணப்படுகின்றது. ”பகை புகை மிகை நகை” என்பது ஆன்றோர் வாக்கு. அதாவது மிகையான சந்தோசத்திற்கு புகை பகையாக விளங்கும் என்பதே இதன் கருத்தாகும். ”தீயிலும் தீயார் தீயினை வாய்தனில் நயப்பர்”. இதுவும் ஆன்றோர் வாக்கு. புகைப்பிடித்தலால் குறித்த நபரை புகைப்பதற்கு எங்ஙனம் ஆழமாக அடிமையாக்கும் என்பதே மேற்காட்டப்பட்ட வசனம் குறிப்பிடுகின்றது. இவ்வாறு ஒருவர் புகைப்பிடிப்பதன் மூலம் அவரின் வாய் வெப்பத்தினால் கருகுவது மட்டுமல்லாது சேவ்விதழும் கருமையாகின்றது. உலகில் ஏற்படும் மொத்த நோய்களில் 4.1% ஆன நோய்கள்  புகைத்தலால் ஏற்படுகின்றன என ஆய்வுகள்  தெரிவிக்கின்றன.  இந்த புகைப்பிடித்தல் பழக்கம்  இளைஞர்கள்  பலரிடத்தில் காணப்படுவதற்கான  காரணம்  திரைப்படங்கள், பிரபல்யம் பெற்றவர்களின்  விளம்பரங்கள் தான் என்ற கருத்தும் நிலவுகின்றது. திரைப்படங்களில் நடிகர்கள் புகைப்பிடிப்பதை  உற்றுநோக்கும் இளைஞர்கள் தாமும் அவ்வாறே செய்ய எத்தனிக்கின்றனர். பாடசாலைகள், கல்லூரிகள், வாசி

போதைப்பொருள் துஸ்பிரயோகமும் அதன் பாதிப்புகளும்-01

              இ ன்றைய நவநாகரிக உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களில் பல் பல்வேறு போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதை காணமுடிகின்றது. இதனால் சமூக அந்தஸ்து உயர்வதாகவும், இன்பமாக இருக்கலாம் எனவும் எண்ணுகிறார்கள். உடல்ரீதியாக, உள ரீதியாக ஒழுக்கரீதியாக மனிதனிடம் பாதிப்புகளை ஏற்படுத்தி அவனது வாழ்க்கையை அவனது குடும்பத்தினது வாழ்க்கையை சீரழித்து சின்னாபின்னமாக்கக்கூடிய தீய பழக்கத்தை உருவாக்கும் பொருளாக போதைப்பொருள் காணப்படுகிறது.மனிதனது மனோநிலை , உணர்வாற்றல், சுயநினைவு என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தவென முறைதவறி பாவிக்கப்படும் இரசாயனப்பதார்த்தங்கள் போதைப்பொருட்கள் ஆகின்றன. கெரோயின், கஞ்சா, அபின், மோபின், கொகெயின், L.S.தூக்கமாத்திரைகள் , மதுபானம் , புகையிலை போன்றன போதைப்பொருட்களில் சிலவாகும். இப்போதைப்பழக்கம் எமது சமூக கலாசாரத்தில் மேலைத்தேய ஆட்சியின் தாக்கத்தாலேயே ஏற்பட்டதை வரலாற்று சுவடுகளில் அடிவைத்துப்பார்பதன் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி போல அறிந்திடலாம்.                      மரியானா என்பது ஒருவகை செடி. இந்தச்செடிகளின் இலைகளையும், மலர்களையும் வெட்டி காயவைத்து சிகரெட்டில் புகையி