Skip to main content

போதைப்பொருள் துஸ்பிரயோகமும் அதன் பாதிப்புகளும் 03

                       உலகில் மொத்தம் 110 கோடி பேர் புகையிலை பாவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதில் 80 கோடி பேர் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலும் 30 கோடி பேர் அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் இருக்கிறார்களாம். அதுமட்டுமல்லாது ஒரு நிமிடத்தில் சுமார் 6 பேர் வரை புகைத்தலால் உயிர் இழக்கிறார்கள் என 2004ம் ஆண்டின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகைப்பிடிப்பதன் மூலம் புகைப்பிடிப்பவர்கள் இதயநாளம் சார்ந்த நோய்களால் அவதிப்படுவதாகவும் இது கைத்தொழில் நாடுகளில் வாழும் 10 இலட்சம் பேருக்கும் அபிவிருத்தியடைந்து வரும்நாடுகளில் வாழும் 67000ம் பேருக்கும் உள்ளது எனவும் மேற்படி ஆய்வுகள் எடுத்து இயம்புகின்றன. மேலும் சுவாசப்பை அழற்சி, இதயபலவீனம், மாரடைப்பு, சுவாசப்பைப்புற்றுநோய், மார்புச்சளிநோய், சுவாசப்பாதைப்புற்றுநோய், கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படல், வாய்ப்புற்றுநோய், களப்புற்றுநோய், இரப்பைப்புண், சிறுநீர்ப்பைப்புற்றுநோய்  போன்ற பல நோய்கள் புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கும் ஏற்படுகிறது. புகையிலையில் காணப்படும் 4000 வகையிலான இரசாயனப் பதார்த்தங்களின் முலம் 60 வகையான
புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. முக்கியமாக புகையிலையில் காணப்படும் நிகோட்டின், காபன்மொனோசைட்டு, மார்ச்சுவாயு, கொலிடின் அமோனியா, பைறோடின், காபோலிக்அசிட், பேர்பராட்பெண்சோபைடின் போன்ற நச்சுப்பதார்த்தங்களுள் பெண்சோபைடின் புற்றுநோயை ஏற்படுத்துகின்றது. 2000ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி சர்வதேச ரீதியாக 50 இலட்சம் பேர் புகைத்தலால் அவர்களுடைய உயிரை நீத்துள்ளார்கள். 



                                                      தொடரும்.......................

Comments

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...