Skip to main content

போதைப்பொருள் துஸ்பிரயோகமும் அதன் பாதிப்புகளும் 03

                       உலகில் மொத்தம் 110 கோடி பேர் புகையிலை பாவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதில் 80 கோடி பேர் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலும் 30 கோடி பேர் அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் இருக்கிறார்களாம். அதுமட்டுமல்லாது ஒரு நிமிடத்தில் சுமார் 6 பேர் வரை புகைத்தலால் உயிர் இழக்கிறார்கள் என 2004ம் ஆண்டின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகைப்பிடிப்பதன் மூலம் புகைப்பிடிப்பவர்கள் இதயநாளம் சார்ந்த நோய்களால் அவதிப்படுவதாகவும் இது கைத்தொழில் நாடுகளில் வாழும் 10 இலட்சம் பேருக்கும் அபிவிருத்தியடைந்து வரும்நாடுகளில் வாழும் 67000ம் பேருக்கும் உள்ளது எனவும் மேற்படி ஆய்வுகள் எடுத்து இயம்புகின்றன. மேலும் சுவாசப்பை அழற்சி, இதயபலவீனம், மாரடைப்பு, சுவாசப்பைப்புற்றுநோய், மார்புச்சளிநோய், சுவாசப்பாதைப்புற்றுநோய், கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படல், வாய்ப்புற்றுநோய், களப்புற்றுநோய், இரப்பைப்புண், சிறுநீர்ப்பைப்புற்றுநோய்  போன்ற பல நோய்கள் புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கும் ஏற்படுகிறது. புகையிலையில் காணப்படும் 4000 வகையிலான இரசாயனப் பதார்த்தங்களின் முலம் 60 வகையான
புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. முக்கியமாக புகையிலையில் காணப்படும் நிகோட்டின், காபன்மொனோசைட்டு, மார்ச்சுவாயு, கொலிடின் அமோனியா, பைறோடின், காபோலிக்அசிட், பேர்பராட்பெண்சோபைடின் போன்ற நச்சுப்பதார்த்தங்களுள் பெண்சோபைடின் புற்றுநோயை ஏற்படுத்துகின்றது. 2000ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி சர்வதேச ரீதியாக 50 இலட்சம் பேர் புகைத்தலால் அவர்களுடைய உயிரை நீத்துள்ளார்கள். 



                                                      தொடரும்.......................

Comments

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

Visual Basic - Hello World (பார்வை - 2)

அனைவருக்கும் வணக்கம்…. சென்ற பதிப்பில் Visual Basic இல் நிரலாக்க குறியீடுகள் (Programming Codings) எழுதும் பகுதியில் இருந்து இயங்குநிலைக்கு எப்படி கொண்டு செல்வது என்று பார்த்தோம். இன்றைய பதிப்பில் அவசரமாக எப்படி நிரலாக்க குறியீடுகள் எழுதுவது என்று பார்க்க முன்னர் சில பகுதிகளை குறிப்புகளாக நோக்கிவிட்டு Programme எழுத போகலாம். பொதுவாக எல்லா மொழிகளுக்கும் பலதரப்பட்ட வரையறைகள் இருக்கின்றன. உதாரணமாக…. நாம் நாளை பாடசாலை சென்றேன். இந்த வசனத்தில் ஏகப்பட்ட பிழைகள். இப்படி ஒருவர் கூறும் பட்சத்தில் அவர் என்ன கூறவருகிறார் என்று எங்களால் இனங்காணமுடியாத சூழ்நிலைகள் காணப்படுகின்றன. இதே பிரச்சினை தான் இந்த நிரலாக்க மொழி சூழலிலும் காணப்படுகின்றது. கணினி என்று நோக்கும் போது அங்கும் அதனால் விளங்க கூடிய வகையில் நாம் கூறுபவை தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மொழி பயிலும் போதும் ஆரம்பத்தில் பல இடர்பாடுகள் இருப்பது போன்று காணப்படும் மாயை காலம் செல்ல செல்ல இடர்பாடுகள் குறைந்து செல்வது போன்ற தோற்றப்பாட்டை கொண்டு காணப்படும். இங்கும் நாம் கணினியால் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அதனுடன் வரையறைகளுக்கு உட்பட்ட...