Skip to main content

போதைப்பொருள் துஸ்பிரயோகமும் அதன் பாதிப்புகளும்-01


              ன்றைய நவநாகரிக உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களில் பல் பல்வேறு போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதை காணமுடிகின்றது. இதனால் சமூக அந்தஸ்து உயர்வதாகவும், இன்பமாக இருக்கலாம் எனவும் எண்ணுகிறார்கள். உடல்ரீதியாக, உள ரீதியாக ஒழுக்கரீதியாக மனிதனிடம் பாதிப்புகளை ஏற்படுத்தி அவனது வாழ்க்கையை அவனது குடும்பத்தினது வாழ்க்கையை சீரழித்து சின்னாபின்னமாக்கக்கூடிய தீய பழக்கத்தை உருவாக்கும் பொருளாக போதைப்பொருள் காணப்படுகிறது.மனிதனது மனோநிலை , உணர்வாற்றல், சுயநினைவு என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தவென முறைதவறி பாவிக்கப்படும் இரசாயனப்பதார்த்தங்கள் போதைப்பொருட்கள் ஆகின்றன. கெரோயின், கஞ்சா, அபின், மோபின், கொகெயின், L.S.தூக்கமாத்திரைகள் , மதுபானம் , புகையிலை போன்றன போதைப்பொருட்களில் சிலவாகும். இப்போதைப்பழக்கம் எமது சமூக கலாசாரத்தில் மேலைத்தேய ஆட்சியின் தாக்கத்தாலேயே ஏற்பட்டதை வரலாற்று சுவடுகளில் அடிவைத்துப்பார்பதன் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி போல அறிந்திடலாம்.


       
             மரியானா என்பது ஒருவகை செடி. இந்தச்செடிகளின் இலைகளையும், மலர்களையும் வெட்டி காயவைத்து சிகரெட்டில் புகையிலைக்குப்பதிலாக நிரப்பி புகைத்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அதனுடைய பட்டையில் இருந்து கசியும் பசை மரியானா என்ற பெயரில் வழங்கும் ஒரு போதைமருந்தாக காணப்படுகின்றது. இதை அக்காலகட்டத்திலிருந்து சீனாவிலும் இந்தியாவிலும் கடவுள் பிரசாதமெனக்கருதி உபயோகித்து வந்தனர். க்ளோக்கோமா என்னும் கண்நோய்க்கு மருத்துவர்கள் இதனை மருந்தாக பயன்படுத்தினர்.மரியானாவிலிருந்து கெசீன் ,காங்க் ,கஞ்சா ,சராஸ், க்றாஸ் போன்ற பல வகையான போதைப்பொருட்கள் தயாராகின்றன. கொக்கோ இலையில் இருந்து மயக்க மருந்து தயாரித்து வந்தனர். "கொகெய்ன்" என்ற பெயரில் இந்த போதை மருந்து மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி உணர்விழக்கச் செய்கிறது. அபின் என்பது இன்னொரு வகையான பசையாகும். மேலும் 1981ம் ஆண்டு இருமலுக்கான மருந்தை கண்டுபிடிப்பதில் ஈடுபட்ட வைத்தியர் ஒருவர் கெரோயின் என்ற போதைப்பொருளை கண்டுபிடித்தார். "BROWN SUGAR "என்பது கலப்படமான கெரோயினை குறிக்கிறதாம்.

                                                 தொடரும்..............................

Comments

Popular posts from this blog

Visual Basic - Hello World (பார்வை - 2)

அனைவருக்கும் வணக்கம்…. சென்ற பதிப்பில் Visual Basic இல் நிரலாக்க குறியீடுகள் (Programming Codings) எழுதும் பகுதியில் இருந்து இயங்குநிலைக்கு எப்படி கொண்டு செல்வது என்று பார்த்தோம். இன்றைய பதிப்பில் அவசரமாக எப்படி நிரலாக்க குறியீடுகள் எழுதுவது என்று பார்க்க முன்னர் சில பகுதிகளை குறிப்புகளாக நோக்கிவிட்டு Programme எழுத போகலாம். பொதுவாக எல்லா மொழிகளுக்கும் பலதரப்பட்ட வரையறைகள் இருக்கின்றன. உதாரணமாக…. நாம் நாளை பாடசாலை சென்றேன். இந்த வசனத்தில் ஏகப்பட்ட பிழைகள். இப்படி ஒருவர் கூறும் பட்சத்தில் அவர் என்ன கூறவருகிறார் என்று எங்களால் இனங்காணமுடியாத சூழ்நிலைகள் காணப்படுகின்றன. இதே பிரச்சினை தான் இந்த நிரலாக்க மொழி சூழலிலும் காணப்படுகின்றது. கணினி என்று நோக்கும் போது அங்கும் அதனால் விளங்க கூடிய வகையில் நாம் கூறுபவை தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மொழி பயிலும் போதும் ஆரம்பத்தில் பல இடர்பாடுகள் இருப்பது போன்று காணப்படும் மாயை காலம் செல்ல செல்ல இடர்பாடுகள் குறைந்து செல்வது போன்ற தோற்றப்பாட்டை கொண்டு காணப்படும். இங்கும் நாம் கணினியால் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அதனுடன் வரையறைகளுக்கு உட்பட்ட...

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

யார் ? இவர்கள் 05

பறக்கும் தட்டை மக்கள் பார்த்து சில மணிநேரம் கழித்து இன்னோர் தகவலும் வெளியானது. நியூ மெக்சிகோ அருகே உள்ள ரோஸ்வேல் என்ற இடத்தில் வட்டவடிவமான (பறக்கும் தட்டு) பெரிய பொருள் ஒன்று நொறுங்கிக்கிடப்பதாக கூறப்பட்டது. நிறைகுறைந்த அதேநேரத்தில் உறுதியான உலோகத்தில் அந்த பறக்கும் தட்டு தயாரிக்கப்பட்டு இருந்தது. எனினும் அரசு தரப்பில் ஆரம்பத்தில் இச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டது. அதேநேரம் அமெரிக்க விமானப்படை இது தொடர்பாக இரகசிய விசாரணை ஒன்றையும் உடனடியாக நடாத்தியது. அப்போது பறக்கும் தட்டுகள் வானில் பறந்தது உண்மைதான் என்று தகவல் வெளியானது. இங்கு பெறப்பட்ட அவ்வுலோகமானது மிகவும் நிறைகுறைந்ததாகவும் ஆனால் மிகவும் உறுதி கூடியதாகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வுலோக இயல்பு பூமியில் உள்ள உலோகங்களின் இயல்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டது. ஆனாலும் உடனடியாக ஏற்பட்ட பரபரப்பையும் பதற்றத்தையும் தணிப்பதாக அரசு கூறிய கருத்து “ விமானப்படையினர் தட்பவெப்பநிலை மாற்றங்களை அறிய அனுப்பிய வானிலை ஆய்வு பலூன் தான் தரையில் வீழ்ந்து நொருங்கியது ’’ மேற்கூறப்பட்ட அனைத்து சாத்தியப்பாடுகளு...