Skip to main content

போதைப்பொருள் துஸ்பிரயோகமும் அதன் பாதிப்புகளும்-01


              ன்றைய நவநாகரிக உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களில் பல் பல்வேறு போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதை காணமுடிகின்றது. இதனால் சமூக அந்தஸ்து உயர்வதாகவும், இன்பமாக இருக்கலாம் எனவும் எண்ணுகிறார்கள். உடல்ரீதியாக, உள ரீதியாக ஒழுக்கரீதியாக மனிதனிடம் பாதிப்புகளை ஏற்படுத்தி அவனது வாழ்க்கையை அவனது குடும்பத்தினது வாழ்க்கையை சீரழித்து சின்னாபின்னமாக்கக்கூடிய தீய பழக்கத்தை உருவாக்கும் பொருளாக போதைப்பொருள் காணப்படுகிறது.மனிதனது மனோநிலை , உணர்வாற்றல், சுயநினைவு என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தவென முறைதவறி பாவிக்கப்படும் இரசாயனப்பதார்த்தங்கள் போதைப்பொருட்கள் ஆகின்றன. கெரோயின், கஞ்சா, அபின், மோபின், கொகெயின், L.S.தூக்கமாத்திரைகள் , மதுபானம் , புகையிலை போன்றன போதைப்பொருட்களில் சிலவாகும். இப்போதைப்பழக்கம் எமது சமூக கலாசாரத்தில் மேலைத்தேய ஆட்சியின் தாக்கத்தாலேயே ஏற்பட்டதை வரலாற்று சுவடுகளில் அடிவைத்துப்பார்பதன் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி போல அறிந்திடலாம்.


       
             மரியானா என்பது ஒருவகை செடி. இந்தச்செடிகளின் இலைகளையும், மலர்களையும் வெட்டி காயவைத்து சிகரெட்டில் புகையிலைக்குப்பதிலாக நிரப்பி புகைத்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அதனுடைய பட்டையில் இருந்து கசியும் பசை மரியானா என்ற பெயரில் வழங்கும் ஒரு போதைமருந்தாக காணப்படுகின்றது. இதை அக்காலகட்டத்திலிருந்து சீனாவிலும் இந்தியாவிலும் கடவுள் பிரசாதமெனக்கருதி உபயோகித்து வந்தனர். க்ளோக்கோமா என்னும் கண்நோய்க்கு மருத்துவர்கள் இதனை மருந்தாக பயன்படுத்தினர்.மரியானாவிலிருந்து கெசீன் ,காங்க் ,கஞ்சா ,சராஸ், க்றாஸ் போன்ற பல வகையான போதைப்பொருட்கள் தயாராகின்றன. கொக்கோ இலையில் இருந்து மயக்க மருந்து தயாரித்து வந்தனர். "கொகெய்ன்" என்ற பெயரில் இந்த போதை மருந்து மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி உணர்விழக்கச் செய்கிறது. அபின் என்பது இன்னொரு வகையான பசையாகும். மேலும் 1981ம் ஆண்டு இருமலுக்கான மருந்தை கண்டுபிடிப்பதில் ஈடுபட்ட வைத்தியர் ஒருவர் கெரோயின் என்ற போதைப்பொருளை கண்டுபிடித்தார். "BROWN SUGAR "என்பது கலப்படமான கெரோயினை குறிக்கிறதாம்.

                                                 தொடரும்..............................

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...