Skip to main content

போதைப்பொருள் துஸ்பிரயோகமும் அதன் பாதிப்புகளும்-01


              ன்றைய நவநாகரிக உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களில் பல் பல்வேறு போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதை காணமுடிகின்றது. இதனால் சமூக அந்தஸ்து உயர்வதாகவும், இன்பமாக இருக்கலாம் எனவும் எண்ணுகிறார்கள். உடல்ரீதியாக, உள ரீதியாக ஒழுக்கரீதியாக மனிதனிடம் பாதிப்புகளை ஏற்படுத்தி அவனது வாழ்க்கையை அவனது குடும்பத்தினது வாழ்க்கையை சீரழித்து சின்னாபின்னமாக்கக்கூடிய தீய பழக்கத்தை உருவாக்கும் பொருளாக போதைப்பொருள் காணப்படுகிறது.மனிதனது மனோநிலை , உணர்வாற்றல், சுயநினைவு என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தவென முறைதவறி பாவிக்கப்படும் இரசாயனப்பதார்த்தங்கள் போதைப்பொருட்கள் ஆகின்றன. கெரோயின், கஞ்சா, அபின், மோபின், கொகெயின், L.S.தூக்கமாத்திரைகள் , மதுபானம் , புகையிலை போன்றன போதைப்பொருட்களில் சிலவாகும். இப்போதைப்பழக்கம் எமது சமூக கலாசாரத்தில் மேலைத்தேய ஆட்சியின் தாக்கத்தாலேயே ஏற்பட்டதை வரலாற்று சுவடுகளில் அடிவைத்துப்பார்பதன் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி போல அறிந்திடலாம்.


       
             மரியானா என்பது ஒருவகை செடி. இந்தச்செடிகளின் இலைகளையும், மலர்களையும் வெட்டி காயவைத்து சிகரெட்டில் புகையிலைக்குப்பதிலாக நிரப்பி புகைத்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அதனுடைய பட்டையில் இருந்து கசியும் பசை மரியானா என்ற பெயரில் வழங்கும் ஒரு போதைமருந்தாக காணப்படுகின்றது. இதை அக்காலகட்டத்திலிருந்து சீனாவிலும் இந்தியாவிலும் கடவுள் பிரசாதமெனக்கருதி உபயோகித்து வந்தனர். க்ளோக்கோமா என்னும் கண்நோய்க்கு மருத்துவர்கள் இதனை மருந்தாக பயன்படுத்தினர்.மரியானாவிலிருந்து கெசீன் ,காங்க் ,கஞ்சா ,சராஸ், க்றாஸ் போன்ற பல வகையான போதைப்பொருட்கள் தயாராகின்றன. கொக்கோ இலையில் இருந்து மயக்க மருந்து தயாரித்து வந்தனர். "கொகெய்ன்" என்ற பெயரில் இந்த போதை மருந்து மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி உணர்விழக்கச் செய்கிறது. அபின் என்பது இன்னொரு வகையான பசையாகும். மேலும் 1981ம் ஆண்டு இருமலுக்கான மருந்தை கண்டுபிடிப்பதில் ஈடுபட்ட வைத்தியர் ஒருவர் கெரோயின் என்ற போதைப்பொருளை கண்டுபிடித்தார். "BROWN SUGAR "என்பது கலப்படமான கெரோயினை குறிக்கிறதாம்.

                                                 தொடரும்..............................

Comments

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...