Skip to main content

போதைப்பொருள் துஸ்பிரயோகமும் அதன் பாதிப்புகளும்-06

                             இன்று 60 வகையான கொடூர நோய்களுக்கு மதுபானமே காரணியாக காணப்படுகிறது. மொத்த நோய்களில் மதுபானத்தின் மூலமாக ஏற்படும் நோய் வீதம் 4 ஆக உள்ளது. மதுபானம் அருந்துபவர்கள் தம்மை அறியாமலே பல்வேறு விபத்துக்களை உண்டாக்குகிறார்கள். குடித்துவிட்டு வாகனத்தை வேகமாக ஓட்டுவதால் சாலை விபத்துக்களில் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. இதய நோய்கள், கல்லீரல் பாதிப்பு, பக்கவாதம், வாய் - கல்லீரல் - மற்றும் மார்பு சார்ந்த புற்றுநோய்கள் போன்றவை மதுபானம் பருகுவதாலேயே ஏற்படுகின்றது. இவ்வாறு போதைப்பொருட்களை நுகர்வோர் மீண்டும் மீண்டும் நுகர ஆசை கொண்டு திருட பிச்சை எடுக்க கொலை - கொள்ளை போன்ற செயல்களை செய்யக்கூட தயங்காமல் இருப்பார்கள். இவ்வாறு போதைப்பொருட்களுக்கு இலக்காவதன் மூலம் அற்புத கலைத்திறன், அனுபவ அறிவு, புத்திசாலித்தனம், சுயகௌரவம், பாசப்பிணைப்பு, நம்பிக்கைகள் என அனைத்தையும் இழந்துவிடுகிறார்கள்.

                          இதன்போக்கை மாற்ற அதாவது போதைப்பொருள் பாவனையைத்தடுக்க அரசாங்கம் மற்றும் சமூக நலன்புரி சங்கங்கள் ஒன்றிணைந்து பல்வேறு முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அரசு இவ்வாறான சிலவகையான போதைப்பொருட்களை வழங்குவதன் நோக்கமே அவ்வாறு வழங்குவதன் மூலம் முடியுமான அளவுக்கு வரி அறவிடலாம் என்பதாகும். ஆனால் இதை விட போதைப்பொருட்களை பாவிப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கவென மேற்கொள்ளப்படும்  செலவுகள் அதிகமாக உள்ளன.

                         சகல பௌதிக வளங்களையும் பயன்பாட்டு வளங்களாக மாற்றக்கூடிய தன்மை மனித வளத்திடமே காணப்படுகிறது. அதுமட்டுமல்லாது போதைப்பொருட்களின் பிடியில் சிக்கி பல இளைஞர்கள் மாண்டு போவதால் குறித்த நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை சீர்கெடுகிறது. ஆதலால் அரசாங்கம் இவ்வாறான ஆட்கொல்லி போதைப்பொருட்களை சமூகத்தில் மக்களின் கைகளில் சேர அனுமதிக்கக்கூடாது. இதன் பாதிப்புகளையும் மக்களுக்கு அறிவு புகட்டி மக்களை பாதுகாக் வேண்டிய கடமையை அரசு செவ்வனே நிறைவேற்றவேண்டும்.

                        மனக்கட்டுப்பாடு இருந்தால் சூழ்நிலை எங்ஙனம் மோசமாக இருப்பினும் மனக்கட்டுப்பாடு கொண்டவர்களை குடிகாரர்களாக மாற்றமுடியாது.
எனவே மனக்கட்டுப்பாட்டுடன் போதைப்பொருள் பாவனையை வெறுப்போம்.\

                                                       முற்றும்!!!

Comments

Popular posts from this blog

Visual Basic - Hello World (பார்வை - 2)

அனைவருக்கும் வணக்கம்…. சென்ற பதிப்பில் Visual Basic இல் நிரலாக்க குறியீடுகள் (Programming Codings) எழுதும் பகுதியில் இருந்து இயங்குநிலைக்கு எப்படி கொண்டு செல்வது என்று பார்த்தோம். இன்றைய பதிப்பில் அவசரமாக எப்படி நிரலாக்க குறியீடுகள் எழுதுவது என்று பார்க்க முன்னர் சில பகுதிகளை குறிப்புகளாக நோக்கிவிட்டு Programme எழுத போகலாம். பொதுவாக எல்லா மொழிகளுக்கும் பலதரப்பட்ட வரையறைகள் இருக்கின்றன. உதாரணமாக…. நாம் நாளை பாடசாலை சென்றேன். இந்த வசனத்தில் ஏகப்பட்ட பிழைகள். இப்படி ஒருவர் கூறும் பட்சத்தில் அவர் என்ன கூறவருகிறார் என்று எங்களால் இனங்காணமுடியாத சூழ்நிலைகள் காணப்படுகின்றன. இதே பிரச்சினை தான் இந்த நிரலாக்க மொழி சூழலிலும் காணப்படுகின்றது. கணினி என்று நோக்கும் போது அங்கும் அதனால் விளங்க கூடிய வகையில் நாம் கூறுபவை தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மொழி பயிலும் போதும் ஆரம்பத்தில் பல இடர்பாடுகள் இருப்பது போன்று காணப்படும் மாயை காலம் செல்ல செல்ல இடர்பாடுகள் குறைந்து செல்வது போன்ற தோற்றப்பாட்டை கொண்டு காணப்படும். இங்கும் நாம் கணினியால் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அதனுடன் வரையறைகளுக்கு உட்பட்ட...

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

யார் ? இவர்கள் 05

பறக்கும் தட்டை மக்கள் பார்த்து சில மணிநேரம் கழித்து இன்னோர் தகவலும் வெளியானது. நியூ மெக்சிகோ அருகே உள்ள ரோஸ்வேல் என்ற இடத்தில் வட்டவடிவமான (பறக்கும் தட்டு) பெரிய பொருள் ஒன்று நொறுங்கிக்கிடப்பதாக கூறப்பட்டது. நிறைகுறைந்த அதேநேரத்தில் உறுதியான உலோகத்தில் அந்த பறக்கும் தட்டு தயாரிக்கப்பட்டு இருந்தது. எனினும் அரசு தரப்பில் ஆரம்பத்தில் இச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டது. அதேநேரம் அமெரிக்க விமானப்படை இது தொடர்பாக இரகசிய விசாரணை ஒன்றையும் உடனடியாக நடாத்தியது. அப்போது பறக்கும் தட்டுகள் வானில் பறந்தது உண்மைதான் என்று தகவல் வெளியானது. இங்கு பெறப்பட்ட அவ்வுலோகமானது மிகவும் நிறைகுறைந்ததாகவும் ஆனால் மிகவும் உறுதி கூடியதாகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வுலோக இயல்பு பூமியில் உள்ள உலோகங்களின் இயல்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டது. ஆனாலும் உடனடியாக ஏற்பட்ட பரபரப்பையும் பதற்றத்தையும் தணிப்பதாக அரசு கூறிய கருத்து “ விமானப்படையினர் தட்பவெப்பநிலை மாற்றங்களை அறிய அனுப்பிய வானிலை ஆய்வு பலூன் தான் தரையில் வீழ்ந்து நொருங்கியது ’’ மேற்கூறப்பட்ட அனைத்து சாத்தியப்பாடுகளு...