Skip to main content

Posts

Showing posts from May, 2010

வேற்றுக்கிரக வாசிகளின் வருகை ஆக்கிரமிப்பிற்கா? ஆராய்ச்சியிற்கா? யார் ? இவர்கள் - 06

வேற்றுக்கிரகவாசிகளின் எமது கிரகத்திற்கான வருகைக்குரிய காரணம் 1.ஆராய்ச்சி நாம் ஏனைய கிரகங்களைப்பற்றி அறிய முயற்சிப்பது போல் வேற்றுக்கிரகங்களில் நிலவும் பௌதிக அம்சம், உயிர்வாழ்வதற்கான சாதக நிலைகள் ஆகியவற்றை ஆராய்வதற்கான நோக்கத்தை எம்மிடம் தாராளமாக கொண்டுள்ளது போன்று ஏனைய கிரகங்களில் வாழும் வேற்றுக்கிரகவாசிகள் எதிர்பார்ப்பதுவும் இயல்பானதே. ஆகவே ஆராய்ச்சி என்பதை அடிப்படையாகக்கொண்டு அவர்கள் எமது கிரகத்திற்கு வருகைதருகின்றனர் என்பது மிகவும் முதன்மையான காரணமாக அமைகின்றது. ஆனால் ஆக்கிரமிப்பு தவிர்ந்த ஆராய்ச்சி நோக்கமாக இருப்பின் அவர்கள் ஆரம்பத்திலேயே எம்முடன் ( பூமியிலுள்ளோருடன் ) தமது உறவுகளை ஆரம்பித்திருக்க வேண்டும். பல சந்தர்ப்பங்களிலும் அவர்கள் எம்முடைய உறவுகளை விரும்பவில்லை என்பதை இவ்வாய்வின் முன்னைய பகுதிகளில் குறிப்பிடப்பட்ட உதாரணங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஆகவே இதுவரை பூமியில் அவர்களால் உயிரிழப்புகள் பெருமளவில் இடம்பெறாமைக்கு அவர்கள் நோக்கத்தில் காணப்படும் எம்மீதான சாதகத்தன்மையே காரணம் என்று எண்ணுவது முட்டாள்தனமானது. எனவே அவர்கள் நட்புறவுடன் கூடிய ஆராய்ச்சி நோக்கைக் கொண்டிருக்கவில

பேய் என்று யார் சொன்னது? (மாய இராஜ்ஜியம் - 21)

இந்தப்பதிப்பும் வாசகர்களின் சந்தேகங்களுக்கான எனது கருத்துகளாக வெளிவருகிறது..... நிச்சயமாக கருந்துளையானது தனது நிகழ்வெல்லைக்குட்பட்ட ஒளியின் வேகத்திலும் பார்க்க விடுதலை வேகம் குறைந்த துணிக்கைகளை உள்ளெடுக்கும். மேலும் பெர்முடா முக்கோணத்தில் கருந்துளைகளின் உருவாக்கம் ஒன்றோ பலவோ நிகழ்கின்றபோது அது அல்லது அவை தமது நிகழ்வெல்லைக்குட்பட்ட பகுதியில் காணப்படுகின்ற நீர் உள்ளிட்ட பதார்த்தங்களை நிச்சயமாக உள்ளெடுக்கும். இவ் உள்ளெடுக்கும் நிகழ்வானது கருந்துளையினுடைய ஆயுள் நீடிப்பு வரை நிகழும். பூமியில் நீரின் இராட்சத அளவு நீங்கள் அறிந்ததே. பெர்முடா முக்கோணத்தில் கருந்துளை உருவாக்கம் அல்லது உருவாக்கங்கள் மிகச்சிறிய பரப்பளவுள்ள பகுதியில் தோன்றுகின்ற போது, அங்கே உள்ளிழுக்கப்படுகின்ற நீரின் அளவானது ஒட்டுமொத்த உலகின் நீருடன் ஒப்பிடுகையில் மிகக்குறைவானதே. நீரானது பாய்ம இயல்பை தாராளமாகவே கொண்டிருக்கின்ற ஒரு திரவம். அங்கே குறைவாக்கம் ஏற்படுகின்ற நீரின் அளவானது மிக விரைவாக மீள்நிரப்பாக்கம் செய்யப்பட்டுவிடும். இன்னும் சொல்லப்போனால் ஒரு ஏரியில் நாம் ஒரு குவளை நீரை அள்ளுவதால் அவ்வேரிக்கு ஏற்படுகின்ற நீரிழப்பின

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் பால்வீதிகள், அவை கொண்டுள்ள நட்சத்திரக்கூட்டங்களின

யார் ? இவர்கள் 05

பறக்கும் தட்டை மக்கள் பார்த்து சில மணிநேரம் கழித்து இன்னோர் தகவலும் வெளியானது. நியூ மெக்சிகோ அருகே உள்ள ரோஸ்வேல் என்ற இடத்தில் வட்டவடிவமான (பறக்கும் தட்டு) பெரிய பொருள் ஒன்று நொறுங்கிக்கிடப்பதாக கூறப்பட்டது. நிறைகுறைந்த அதேநேரத்தில் உறுதியான உலோகத்தில் அந்த பறக்கும் தட்டு தயாரிக்கப்பட்டு இருந்தது. எனினும் அரசு தரப்பில் ஆரம்பத்தில் இச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டது. அதேநேரம் அமெரிக்க விமானப்படை இது தொடர்பாக இரகசிய விசாரணை ஒன்றையும் உடனடியாக நடாத்தியது. அப்போது பறக்கும் தட்டுகள் வானில் பறந்தது உண்மைதான் என்று தகவல் வெளியானது. இங்கு பெறப்பட்ட அவ்வுலோகமானது மிகவும் நிறைகுறைந்ததாகவும் ஆனால் மிகவும் உறுதி கூடியதாகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வுலோக இயல்பு பூமியில் உள்ள உலோகங்களின் இயல்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டது. ஆனாலும் உடனடியாக ஏற்பட்ட பரபரப்பையும் பதற்றத்தையும் தணிப்பதாக அரசு கூறிய கருத்து “ விமானப்படையினர் தட்பவெப்பநிலை மாற்றங்களை அறிய அனுப்பிய வானிலை ஆய்வு பலூன் தான் தரையில் வீழ்ந்து நொருங்கியது ’’ மேற்கூறப்பட்ட அனைத்து சாத்தியப்பாடுகளு

யார் ? இவர்கள் 04

3.குறிப்பிட்ட வேற்றுக்கிரகவாசிகளின் கிரகங்கள் வேறுபட்ட பௌதிக இயல்புகளை கொண்டிருத்தல். எமது பூமியிலுள்ள கருவிகள், உலோகங்கள் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வகையிலான கருவிகளை அவர்களுடைய விஞ்ஞானிகள் பயன்படுத்துவதன் மூலம் அவை எமது அவதானிப்பு சாதனங்களை தோற்கடிக்கக்கூடிய சாத்தியம் உண்டு என்று அமெரிக்காவின் பிரபல ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளார்கள். இதுவரை எமது விஞ்ஞானிகளால் மேற்படி வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான பாரிய தடயங்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாமை இச்சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. அவ் ஆய்வாளர்களின் கருத்திலிருந்து ஆராய்ந்து பார்க்கையில் சில விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாமென எண்ணுகிறேன். 1. அவர்களின் கிரகத்தில் உள்ள உலோகங்கள் உள்ளடங்கலான மூலகங்கள் உறுதி, அடர்த்தி, உருகுநிலை, கொதிநிலை ஆகியவற்றை இயல்பாக மாற்றி அமைக்கக்கூடியதாக இருக்குமிடத்து அவர்களின் ஏனைய கிரகங்கள் மீதான பிரவேசம் சவால்கள், பிரச்சினைகளை குறைவாகவே உள்ளடக்கியிருக்கும். 2. சூழலுக்கேற்ப ( பௌதிக நிலை மாற்றங்களுக்கு ஏற்ப ) உடலமைப்பை மாற்றக்கூடிய பரிமாண வளர்ச்சியை வேற்றுக்கிரகவாசிகள் தங்களுடைய கிரகத்தின் பௌதி

யார் ? இவர்கள் 03

வேற்றுக்கிரகவாசிகளை கைது செய்ய முடியாமல் போனது ஏன்? பறக்கும் தட்டுக்களை கைப்பற்றமுடியாமல் போனது ஏன்?      1. உயர் தொழில்நுட்பவிருத்தி           உயர்வேகம் ஏற்கனவே ஆய்வின் முற்பகுதியில் குறிப்பிட்டபடி பல அவதானிப்புகளிலும் பறக்கும் தட்டுகள் உயர்வேகம் கொண்டவை என்று குறிப்பிடப்பட்டது. வேகம் தொடர்பான அறிக்கைகள் அவதானிப்புகளை மேற்கொண்ட அனைத்து தரப்பானோர்களிடம் இருந்தும் பெறப்பட்டுள்ளமையானது பூமியில் உள்ள சாதனங்களின் வேகத்தை விட மேம்பட்டவை என்பது தெரிகிறது. பறக்கும் தட்டுக்கள் மட்டுமல்லாது வேற்றுக்கிரக வாசிகளும் மிகவும் வேகம் கூடியவர்கள் என்பது மக்களின் கருத்துக்களிலிருந்து புலப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 1963ம் ஆண்டும் 1965ம் ஆண்டும் “வர்கர்“ மற்றும் “ஜெமினி“ ஆகிய விண்கலங்கள் ஊடாக விண்வெளிக்குச் சென்று வந்த “கோர்டன் குபர்“ தான் ஜேர்மனிய இராணுவத்தில் பணியாற்றியபோது ஏற்பட்ட அனுபவத்தை விபரிக்கிறார். “ நான் அது ஒரு மிக் ரக வாகனம் என்று கருதி அதைப்பின்தொடர்ந்து சென்றபோதும் அது 45000 அடி உயரத்தில் பறந்து கண்ணில் படாமல் மறைந்து விட்டது. பூமியில் தயாரிக்கப்படுகின்ற எத்தகைய நவீன கருவிகளாலும

யார் ? இவர்கள் 02

சமீபத்தில் நிகழ்ந்த ஒரு பறக்கும் தட்டு சம்பவம் மேற்கத்தைய நாடுகளை கதிகலங்கச் செய்துள்ளது. கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை விமானிகளால் படம் பிடிக்கப்பட்டு தொலைக்காட்சி வாயிலாக செய்திகளாக உலகெங்கும் காண்பிக்கப்பட்டது. இச்சம்பவமானது 2004/03/05 இல் இடம்பெற்றது. வழக்கமாக விமானப்படை விமானங்கள் மூலம் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு வினோதமான பதினொரு ஒளிரும் பொருட்கள் வானில் தென்படுவதை பார்த்தவுடன் கண்காணிப்பு சாதனத்தில் பதிவு செய்யப்பட்டது. இதை அந்நாட்டு பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பு அதிகாரி ஒருவர் உறுதிசெய்தார். மே 10ம் திகதி செய்தி நிறுவனங்களுக்காக இந்த பறக்கும் தட்டு பற்றிய வீடியோக்கள் வெளியிடப்பட்டது. வினோதமான ஒளிரும் பொருட்களாக தென்பட்டவற்றில் சில கூரிய ஒளிரும் விளக்குகள் போலவும் இருந்தன. பொழுது சாயும் வேளையில் ஆகாயத்தில் தென்பட்ட இந்த பறக்கும் தட்டின் வேகம் திகைப்பூட்டும் விதமாக அதிவிரைவாக சென்று மறைந்தன. குறிப்பிட்ட நாளில் விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தல் காரர்களை பிடிப்பதற்காக கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது விமானப்படை விமானிகளால்

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக

பனாமா கால்வாய் 06

பனாமா கால்வாயின் தோற்றத்தினை நோக்கும் போது அதில் செயற்கையாக அமைக்கப்பட்ட கட்டூன் வாவியும் குறிப்பிட்டதொரு இடத்தை வகிக்கிறது. சாகிறஸ் ஆற்றிலிருந்து வரும் நீரினை மையப்படுத்தி கட்டூன் வாவி அமைக்கப்பட்டது. காலம் செல்லச்செல்ல சாகிறஸ் ஆற்றிலிருந்து வரும் நீர் கட்டூன் அணைக்கட்டு மூலமாக சேகரிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது நாளடைவில் அணைக்கட்டினை அண்டி ஆறு மூலமாக மண்ணும் அடித்து வரப்பட்டு அணைக்கட்டினை அண்டிய பிரதேசத்தில் விடப்படுவதால் ஆணைக்கட்டின் பலமும் அதிகரிக்கப்பட்டது. 1.5 மைல் தூரம் நீளமும் அடிப்பரப்பில் அண்ணளவாக 0.5 மைல் தூரம் அகலமுமாக அமைக்கப்பட்டது. நீளத்தின் வழியே இருவேறுபட்ட சுவர்களுக்கு இடையிலானதாக மேற்படி வாவி அமையும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தத்து. மேலும் மேற்படி சுவர்களின் மேற்பரப்பு ஒருவகையான கிளேயினால் உருவாக்கப்பட்டிருந்தது. காலம் செல்லச்செல்ல கிளேயும் காய்ந்து கடினமானதாக மாறி கட்டூனின் அணைக்கட்டு மென்மேலும் உறுதியாகியது. இந்த அணைக்கட்டானது அண்ணளவாக 16.9 மில்லியன் கனமீட்டர் அளவு மண்ணாலும் ( மலையின் பகுதி ) கிளேயினாலும் உருவாக்கப்பட்டதாகும். மற்றும் பனாமா கால்வாயின் மொத்த அளவுடன் ஒப

பனாமா கால்வாய் 05

பனாமா கால்வாயினை நோக்கும்போது அத்திலாந்திக் கடலோரத்தில் ஆரம்பித்து பசுபிக் கடலோரத்தில் முடிவடையும் வரை மொத்தமாக 3 பிரமாண்டமான பூட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதலாவது பூட்டு கட்டூன் பகுதியிலும் இரண்டாவது பெட்ரோ மிகுவெல் பகுதியிலும் மற்றும் மூன்றாவது மிறோபிளோர் பகுதியிலும் அமைக்கப்பட்டன. கட்டூன் பகுதியில் இரு சமாந்தரமாக அமைக்கப்பட்ட பூட்டுத்தொகுதியானது பனாமா கால்வாயினூடாக பயணத்தை மேற்கொள்ளும் கப்பல்களை அத்திலாந்திக் கடல் மட்டத்திலிருந்து உயர்த்துவது இப்பகுதி தான். கப்பல்கள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 90 அடி உயரம் அளவிற்கு உயர்த்தப்படுகிறது. இரு பூட்டுத்தொகுதிகளிலும் மொத்தம் 3 பகுதியாக கப்பல்கள் கடல் மட்டத்திலிருந்து 30 அடி வீதம் உயர்த்தப்படுகின்றன. குலேபரா மலைப்பகுதியினை பாரிய சவால்களுக்கு மத்தியில் குறிப்பிட்ட அளவு அகழ்ந்து பின்னர் அப்பகுதியில் ( கட்டூன் ) கொங்கிறீட் இனால் கட்டப்பட்டதே இந்த பிரமாண்டமான பூட்டாகும். மேற்படி பூட்டு அமைப்பதற்கு அண்ணளவாக 1.53 மில்லியன் கனமீட்டர் கொங்கிறீட் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் கட்டூன் பகுதியில் உருவாக்கப்பட்ட பூட்டுப்பகுதியின