Skip to main content

யார் ? இவர்கள் 02

சமீபத்தில் நிகழ்ந்த ஒரு பறக்கும் தட்டு சம்பவம் மேற்கத்தைய நாடுகளை கதிகலங்கச் செய்துள்ளது. கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை விமானிகளால் படம் பிடிக்கப்பட்டு தொலைக்காட்சி வாயிலாக செய்திகளாக உலகெங்கும் காண்பிக்கப்பட்டது.


இச்சம்பவமானது 2004/03/05 இல் இடம்பெற்றது. வழக்கமாக விமானப்படை விமானங்கள் மூலம் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு வினோதமான பதினொரு ஒளிரும் பொருட்கள் வானில் தென்படுவதை பார்த்தவுடன் கண்காணிப்பு சாதனத்தில் பதிவு செய்யப்பட்டது. இதை அந்நாட்டு பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பு அதிகாரி ஒருவர் உறுதிசெய்தார். மே 10ம் திகதி செய்தி நிறுவனங்களுக்காக இந்த பறக்கும் தட்டு பற்றிய வீடியோக்கள் வெளியிடப்பட்டது. வினோதமான ஒளிரும் பொருட்களாக தென்பட்டவற்றில் சில கூரிய ஒளிரும் விளக்குகள் போலவும் இருந்தன. பொழுது சாயும் வேளையில் ஆகாயத்தில் தென்பட்ட இந்த பறக்கும் தட்டின் வேகம் திகைப்பூட்டும் விதமாக அதிவிரைவாக சென்று மறைந்தன. குறிப்பிட்ட நாளில் விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தல் காரர்களை பிடிப்பதற்காக கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது விமானப்படை விமானிகளால் இந்த பறக்கும் தட்டு அகச்சிவப்பு சாதனங்கள் மூலம் படம் எடுக்கப்பட்டது.



2. வேற்றுக்கிரக வாசிகள் பற்றியவை

2006

இடம்                                :- ஃகொரண இலங்கை

அவதானித்தவர்கள் :- கிராமவாசி

கருத்து                            :-  “நான் அந்தத்தெருவால் வந்தபோது 2 குள்ள உருவமானவர்களைக்கண்டேன். அருகில் வர அவர்களின் தோற்றம் இன்னும் தெளிவாக தெரிந்தது. ஒல்லிய உடம்பும் பெரிய தலையும் உடைய அவர்களுக்கு அருகில் செல்ல முயற்சித்தேன். ஆனால் அவர்கள் காட்டுப்பகுதியினுள் ஒடி தப்பிவிட்டனர். அவர்களின் உடல் நிறம் பொன் போன்று இருந்தது.”



குறிப்பு மேற்படி கிராமவாசி குறிப்பிட்ட நேரத்திற்கு சற்றுப்பின் அத்தோற்றத்தை உடையோரை அவதானித்ததாக காட்டில் விறகு பொறுக்கச் சென்றிருந்தோர் தெரிவித்தனர்.



2006

இடம்                                :- இலங்கை (தேவேந்திர முனையை அண்டிய கிராமம்)

அவதானித்த்வர்கள் :- பிரதேசவாசிகள் சிலர்

கருத்து                             :- குள்ளமான ஒல்லிய உடம்பும் பெரிய தலையும் கொண்ட 3 பேரை அவதானித்தோம். பின் தொடர்ந்து சென்ற போது அவர்கள் எம்மை திரும்பிப்பார்த்தார்கள் நாங்கள் மயக்கமுற்றோம்.



1980களில்

இடம்                                 :- கைதடி யாழ்ப்பாணம்

அவதானித்தவர்கள் :-  பிரதேசவாசிகள் சிலர்

கருத்து                             :- ஒளிரும் பொருளிலிருந்து இறங்கிய அந்த உருவங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தார்கள். மெல்லிய உடல் உடையவர்களாகவும் பெரிய தலைகள் கொண்டவர்களாகவும் இருந்தனர்.

1954

இடம்                         :- அமெரிக்கா

அவதானித்தவர் :- கிராமவாசிகள்

கருத்து                     :- அவர்கள் 3 பேர் இருந்தனர். அருவருப்பான உடலமைப்பை கொண்டிருந்தனர். ஒல்லியாக இருந்தனர்.

பூமியில் உள்ள கருவிகளுக்கு கிடைத்த சமிக்ஞைகள்

“ஆசிசோ“ விண்ணியல் ஆய்வு மையத்தில் இருக்கும் அதிசக்தி வாய்ந்த அன்டனாவுடன் கூடிய பிரமாண்டமான தொலைநோக்கியில் ஒரு வானொலி சமிக்ஞை பதியப்பட்டது. இதே போன்று மேலும் பல தடவைகளும் சமிக்ஞைகள் பதியப்பட்டன.

இவற்றுள் ஒன்று ''SHHGGO2+149 '' எனப் பெயர்சூட்டப்பட்டுள்ளது. இந்த அலைவரிசையானது 1420 MHz வேகத்தில் பூமியை அண்மித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே மேற்கூறப்பட்ட சமிக்ஞைகளும் வேற்றுக்கிரகங்களிலும் உயிர்கள் வாழ்கின்றன என்பதை உறுதிப்படுத்துகின்றன.



பிரபஞ்சம் என்பது மிகவும் விரிந்தது. எண்ணில் அடங்காத நட்சத்திரங்களையும் அவற்றிற்குரிய கோள்கள், விண்கற்கள், வால்வெள்ளிகள் என்று வரையறுக்கப்படாத எல்லைகளைக் கொண்டும் காணப்படும் இந்தப்பிரபஞ்சத்தில் பூமியை ஒரு மிகச்சிறிய புள்ளியாக கருதலாம். இப்படிப்பட்ட ஒரு மிகச்சிறிய இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மால் நமது அறிவையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் கொண்டு அவற்றிலிருந்து வேற்றுக்கிரகவாசிகள் இருக்கமுடியாதென்று கூறுவது கிணற்றுத்தவளைகளின் மனநிலையையே நாம் கொண்டுள்ளோம் என்பதையே உறுதிப்படுத்தும். ஆகவே இவ்வாய்வின் அடுத்த கட்டங்கள் வேற்றுக்கிரகவாசி பறக்கும் தட்டுக்கள் ஆகியவை உண்மையானவை என்ற அடிப்படையிலேயே இருக்கும்.

                                                   தொடரும்................

Comments

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...