Skip to main content

யார் ? இவர்கள் 03

வேற்றுக்கிரகவாசிகளை கைது செய்ய முடியாமல் போனது ஏன்? பறக்கும் தட்டுக்களை கைப்பற்றமுடியாமல் போனது ஏன்?


     1. உயர் தொழில்நுட்பவிருத்தி

          உயர்வேகம்

ஏற்கனவே ஆய்வின் முற்பகுதியில் குறிப்பிட்டபடி பல அவதானிப்புகளிலும் பறக்கும் தட்டுகள் உயர்வேகம் கொண்டவை என்று குறிப்பிடப்பட்டது. வேகம் தொடர்பான அறிக்கைகள் அவதானிப்புகளை மேற்கொண்ட அனைத்து தரப்பானோர்களிடம் இருந்தும் பெறப்பட்டுள்ளமையானது பூமியில் உள்ள சாதனங்களின் வேகத்தை விட மேம்பட்டவை என்பது தெரிகிறது.

பறக்கும் தட்டுக்கள் மட்டுமல்லாது வேற்றுக்கிரக வாசிகளும் மிகவும் வேகம் கூடியவர்கள் என்பது மக்களின் கருத்துக்களிலிருந்து புலப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1963ம் ஆண்டும் 1965ம் ஆண்டும் “வர்கர்“ மற்றும் “ஜெமினி“ ஆகிய விண்கலங்கள் ஊடாக விண்வெளிக்குச் சென்று வந்த “கோர்டன் குபர்“ தான் ஜேர்மனிய இராணுவத்தில் பணியாற்றியபோது ஏற்பட்ட அனுபவத்தை விபரிக்கிறார்.

“ நான் அது ஒரு மிக் ரக வாகனம் என்று கருதி அதைப்பின்தொடர்ந்து சென்றபோதும் அது 45000 அடி உயரத்தில் பறந்து கண்ணில் படாமல் மறைந்து விட்டது. பூமியில் தயாரிக்கப்படுகின்ற எத்தகைய நவீன கருவிகளாலும் அது போன்ற வேகத்தில் பறக்க ( இயங்க ) முடியாது என்று எண்ணுகிறேன். அது எனக்கு ஓர் வித்தியாசமான அனுபவமாக இருந்தது”


பெயர்          :- மார்கிரட்டர் புல்

தொழில்    :- விஞ்ஞானி கானக ஆய்வு நிலையம், வொஷிங்டன்

கருத்து      :-பீடா என்ற கோளில் உயிரினங்கள் வாழமுடியும் என எனது ஆய்வுகள் கூறுகின்றன. அங்கு ஏதேனும் கலாசாரங்கள் நிலவக்கூடும் என்பது எனது கருத்து.

இவரின் கூற்றிலுள்ள ஆச்சரியம் என்னவென்றால் இவரால் கூறப்பட்ட பீடா வானது பூமியிலிருந்து 26 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் பறக்கும் தட்டுகள் வருகின்றனவெனின் அவற்றின் வேகத்தை நினைக்கவே தலை சுற்றுகிறதே…….



     2.அறிவு வளர்ச்சி கூடியவர்களாக இருத்தல்

எமது பூமியை எடுத்துக்கொண்டால் இப்பூமியில் வாழ்கின்ற மனிதர்கள் பகுத்தறிவு என்னும் ஆறாவது அறிவை ஏனைய விலங்குகளை விட வித்தியாசமாக கொண்டிருக்கின்றனர். மனிதர்களை விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்திக்காட்டும் இந்த ஆறாவது அறிவைக்கொண்டு மனிதர்கள் அடைந்திருக்கும் வளர்ச்சி மிகப்பெரியது.

இதேபோன்று வேற்றுக்கிரகவாசிகள் பூமியிலுள்ள மனிதர்கள் கொண்டிருக்கின்ற அறிவை விட மேலதிகமாக ஏதாவது அறிவைக்கொண்டிருக்கக்கூடும். இதன் காரணமாக பூமியிலுள்ளோர் கூறுகின்ற மந்திரம் மாயம் போன்றவற்றை தமது இயல்பால் இலகுவாக அரங்கேற்றக்கூடியவர்களாக அந்த வேற்றுக்கிரகவாசிகள் இருக்கமுடியும்.



உதாரண சம்பவம் :-

அமெரிக்காவில் ஒரு பெண் திடீரென கர்ப்பமுற்றிருந்தாள். வேடிக்கை என்னவென்றால் இதற்கான காரணம் அவளுக்கே புரியவில்லை. விடயம் முற்றிப்போய் வைத்தியர்களிடம் சென்றது. உண்மையை அறிவதற்கு அப்பெண் ஆழ்நிலை உறக்கத்திற்கு உட்படுத்தப்பட்டாள். அப்போது அவள்,

"குறிப்பிட்ட நாளில் நான் வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது வானிலிருந்து கோளவடிவான ஒரு வாகனம் எம் வீட்டுத்தோட்டத்தில் வந்திறங்கியது. நான் பயத்தில் அறைக்குச்சென்று கதவை தாழிட்டுக்கொண்டேன். ஆனால் கதவு மூடியிருக்கும் போதே சிலர் அறைக்குள் மாயாவி போல உள்நுளைந்தார்கள். அவர்களை உற்றுப்பார்க்கையில் நான் மயக்கமுற்றிருந்தேன்" என்றாள்.



  • கதவு மூடியிருக்கும் போதே உள்நுளைவது அவர்களின் அறிவின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.

  • மேற்படி சம்பவத்தை அவளின் நினைவிலிருந்து மறக்கச்செய்தமையும் அவர்களின் வித்தியாசமான அறிவுவளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.

ஆனாலும் மனிதர்கள் எப்படியாயினும் ஆழ்நிலை உறக்கத்திற்கு உட்படுத்தி இவ்விடயத்தை தெரிந்துவிடுவார்கள் என்பதை அவர்கள் அறியவில்லையா? அல்லது தமது வருகையை இவ்வகையில் அறிவித்து விட்டனரா?



குறிப்பிட்ட காலம் கழித்து அந்தப்பெண்ணை ஒருநாள் காலை அவதானித்தபோது அவர் கர்ப்பமுற்றிருப்பதற்கான எதுவித அறிகுறிகளும் அவதானிக்கப்படவில்லை. மீண்டும் வைத்தியர்கள் அவளை ஆழ்நிலைஉறக்கத்திற்கு கொண்டு செல்ல அவள் 2வது முறையும் அந்த விசித்திரமான உருவங்கள் வந்ததாக கூறினாள்.


தொடரும்............

Comments

Post a Comment

Popular posts from this blog

Visual Basic - Hello World (பார்வை - 2)

அனைவருக்கும் வணக்கம்…. சென்ற பதிப்பில் Visual Basic இல் நிரலாக்க குறியீடுகள் (Programming Codings) எழுதும் பகுதியில் இருந்து இயங்குநிலைக்கு எப்படி கொண்டு செல்வது என்று பார்த்தோம். இன்றைய பதிப்பில் அவசரமாக எப்படி நிரலாக்க குறியீடுகள் எழுதுவது என்று பார்க்க முன்னர் சில பகுதிகளை குறிப்புகளாக நோக்கிவிட்டு Programme எழுத போகலாம். பொதுவாக எல்லா மொழிகளுக்கும் பலதரப்பட்ட வரையறைகள் இருக்கின்றன. உதாரணமாக…. நாம் நாளை பாடசாலை சென்றேன். இந்த வசனத்தில் ஏகப்பட்ட பிழைகள். இப்படி ஒருவர் கூறும் பட்சத்தில் அவர் என்ன கூறவருகிறார் என்று எங்களால் இனங்காணமுடியாத சூழ்நிலைகள் காணப்படுகின்றன. இதே பிரச்சினை தான் இந்த நிரலாக்க மொழி சூழலிலும் காணப்படுகின்றது. கணினி என்று நோக்கும் போது அங்கும் அதனால் விளங்க கூடிய வகையில் நாம் கூறுபவை தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மொழி பயிலும் போதும் ஆரம்பத்தில் பல இடர்பாடுகள் இருப்பது போன்று காணப்படும் மாயை காலம் செல்ல செல்ல இடர்பாடுகள் குறைந்து செல்வது போன்ற தோற்றப்பாட்டை கொண்டு காணப்படும். இங்கும் நாம் கணினியால் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அதனுடன் வரையறைகளுக்கு உட்பட்ட...

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

யார் ? இவர்கள் 05

பறக்கும் தட்டை மக்கள் பார்த்து சில மணிநேரம் கழித்து இன்னோர் தகவலும் வெளியானது. நியூ மெக்சிகோ அருகே உள்ள ரோஸ்வேல் என்ற இடத்தில் வட்டவடிவமான (பறக்கும் தட்டு) பெரிய பொருள் ஒன்று நொறுங்கிக்கிடப்பதாக கூறப்பட்டது. நிறைகுறைந்த அதேநேரத்தில் உறுதியான உலோகத்தில் அந்த பறக்கும் தட்டு தயாரிக்கப்பட்டு இருந்தது. எனினும் அரசு தரப்பில் ஆரம்பத்தில் இச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டது. அதேநேரம் அமெரிக்க விமானப்படை இது தொடர்பாக இரகசிய விசாரணை ஒன்றையும் உடனடியாக நடாத்தியது. அப்போது பறக்கும் தட்டுகள் வானில் பறந்தது உண்மைதான் என்று தகவல் வெளியானது. இங்கு பெறப்பட்ட அவ்வுலோகமானது மிகவும் நிறைகுறைந்ததாகவும் ஆனால் மிகவும் உறுதி கூடியதாகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வுலோக இயல்பு பூமியில் உள்ள உலோகங்களின் இயல்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டது. ஆனாலும் உடனடியாக ஏற்பட்ட பரபரப்பையும் பதற்றத்தையும் தணிப்பதாக அரசு கூறிய கருத்து “ விமானப்படையினர் தட்பவெப்பநிலை மாற்றங்களை அறிய அனுப்பிய வானிலை ஆய்வு பலூன் தான் தரையில் வீழ்ந்து நொருங்கியது ’’ மேற்கூறப்பட்ட அனைத்து சாத்தியப்பாடுகளு...