Skip to main content

யார் ? இவர்கள் 04

3.குறிப்பிட்ட வேற்றுக்கிரகவாசிகளின் கிரகங்கள் வேறுபட்ட பௌதிக இயல்புகளை கொண்டிருத்தல்.


எமது பூமியிலுள்ள கருவிகள், உலோகங்கள் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வகையிலான கருவிகளை அவர்களுடைய விஞ்ஞானிகள் பயன்படுத்துவதன் மூலம் அவை எமது அவதானிப்பு சாதனங்களை தோற்கடிக்கக்கூடிய சாத்தியம் உண்டு என்று அமெரிக்காவின் பிரபல ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளார்கள்.
இதுவரை எமது விஞ்ஞானிகளால் மேற்படி வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான பாரிய தடயங்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாமை இச்சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
அவ் ஆய்வாளர்களின் கருத்திலிருந்து ஆராய்ந்து பார்க்கையில் சில விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாமென எண்ணுகிறேன்.


1. அவர்களின் கிரகத்தில் உள்ள உலோகங்கள் உள்ளடங்கலான மூலகங்கள் உறுதி, அடர்த்தி, உருகுநிலை, கொதிநிலை ஆகியவற்றை இயல்பாக மாற்றி அமைக்கக்கூடியதாக இருக்குமிடத்து அவர்களின் ஏனைய கிரகங்கள் மீதான பிரவேசம் சவால்கள், பிரச்சினைகளை குறைவாகவே உள்ளடக்கியிருக்கும்.

2. சூழலுக்கேற்ப ( பௌதிக நிலை மாற்றங்களுக்கு ஏற்ப ) உடலமைப்பை மாற்றக்கூடிய பரிமாண வளர்ச்சியை வேற்றுக்கிரகவாசிகள் தங்களுடைய கிரகத்தின் பௌதிக நிலையில் காணப்படும் வித்தியாசமான தன்மை காரணமாக கொண்டிருக்கலாம். எமது பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் எமது மக்களுக்கு திடீர் திடீரென தோற்றமளிப்பதும் அதேவேகத்தில் மறைந்து போவதும் இக்கருத்தை மேலும் வலியுறுத்துகின்றன.

3. எமது பூமியில் நாம் மூன்றுவகைப்பரிமாணங்களை மாத்திரமே கொண்டு இயங்குகிறோம். ஆனால் பூமியில் வசிப்பவர்களுக்கு புலப்படாத பல பரிமாணங்களை உள்ளடக்கியதாக வேற்றுக்கிரகவாசிகள் தமது இயக்கத்தை மேற்கொள்ளக்கூடிய திறனை கொண்டிருக்கக்கூடும். இவ்வாறான நிலை இருப்பதுவும் இவர்கள் எமது கண்களுக்கு திடீரென தோற்றமளித்தல், மறைதல் ஆகியவற்றிற்குரிய விளக்கமாக இருக்கும்.

4. பூமியலுள்ள எமக்கு

புலன்கள் :- கேட்டல், பார்த்தல், சுவைத்தல், உணர்தல், மணத்தல்

பொறிகள் :- காது, மூக்கு, கண், நாக்கு, தோல்



ஆனால் அவ்வேற்றுக்கிரக வாசிகள் இவற்றில் மேலும் பலவற்றைக்கொண்டிருந்தால் எம்மால் அவற்றைக்கண்டுபிடிக்க முடியுமா? அவை எவை என்று ஊகிக்கவே முடியவில்லையே? எவ்வாறு தான் கண்டுபிடிப்பது?

அவர்களின் இனப்பெருக்க முறையானது மேற்குறிப்பிட்ட ஏனைய புலன்களின் ஒன்றை அடிப்படையாக்க்கொண்டு கூட அமையலாம்.


பறக்கும் தட்டுக்களை ஆக்கப்பயன்படும் உலோகங்களின் வேறுபட்ட இயல்புகளின் சாத்தியம்

1947ம் ஆண்டு தொழில் அதிபரும் விஞ்ஞானியுமான கென்னத் ஆர்னல்ட் என்பவர் தனது சொந்தவிமானத்தில் பறந்து சென்றார். வொஷிங்டன் அருகே ''காஸ்கட்'' மலைப்பகுதியில் அவர்விமானத்தை ஓட்டிச்சென்ற போது பறக்கும் தட்டு போன்ற பொருளை அவர் கண்டார். அது மணிக்கு சுமார் 1700 மைல் வேகத்தில் பறந்துசென்றதாகவும் குறிப்பிட்டார். விமானி கென்னத் மட்டுமன்றி தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தினரும் இதை ரேடார் கருவி மூலம் பார்த்தனர். இது தவிர பொதுமக்கள் பலரும் பறக்கும் தட்டைப்பார்த்தனர்.

இச்சம்பவம் சார்ந்த படங்களே இப்பதிவில் இடப்பட்டுள்ளன.

தொடரும்..........

Comments

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...