Skip to main content

போதைப்பொருள் துஸ்பிரயோகமும் அதன் பாதிப்புகளும்-05

                   மதுபானம் இயற்கையில் உண்டாகும் ஒரு திரவம் அன்று. அது பதார்த்தங்கள் கெடுவதால் உண்டாவதாகும். கோதுமை, சோளம், ஒட்ஸ், பார்லி, அரிசி, திராட்சை போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இவை மற்றைய பதார்த்தங்கள் போலன்றி உடலில் காணப்படும் வெண்குருதிசிறுதுணிக்கைகளை அழிக்கிறது. மேலும் நுகரும் மதுபானத்தில் 20 சதவீதம் இரத்தத்தில் நேரடியாக கலந்து உடல் உறுப்பு பலவற்றையும் பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றது. ஈரல், மூளை நரம்புகள், பாலின உறுப்புகள், சிறுநீரகங்கள், நுரையீரல்கள், இரப்பை, இரத்தக்குழாய்கள் ஆகியவற்றின் உட்புறத்தை பாதிக்கவைத்து உடல் உறுப்புகளை பழுதாக்குகின்றது. பார்வை நரம்புகள், கை கால் நரம்புகள் பாதிப்பிற்குள்ளாகி குடற்புண் ஏற்பட்டு ஈற்றில் இரப்பைஅழற்சியும் ஏற்படும். நாம் சாப்பிடுகின்ற எந்த உணவும் ஜீரணமடைந்த பிறகு சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு இரத்தத்தோடு கலந்து விடும். இச்சத்துக்கள் கல்லீரலுக்கு சென்று அங்கு பல்வேறு மாற்றங்களையும் பெறும். உடலின் தேவைக்குப்போக மீதமுள்ள பல்வேறு சத்துக்களும் கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும். அதேபோல் மது அருந்தும் போதும்  அது சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு கல்லீரலை சென்றடையும். இங்கு மதுவின் வளர்ச்சி மாற்றங்களில் கல்லீரல் பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வாறு மதுவும் அதிலுள்ள நச்சுப்பொருட்களும் கல்லீரலைப் பாதிக்கும். மதுவைத் தொடர்ந்து அதிகமாக அருந்தும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிப்பாகும். கல்லீரலில் கொழுப்பமிலங்கள் அதிகமாகத்தங்குதல், கொழுப்புப்பொருட்கள் அதிகமாக மிதந்து கல்லீரல் வீங்குதல், கல்லீரல் அழற்சியால் கல்லீரல் செல்கள் பாதிக்கப்பட்டு நலிவடைதல், ஃகெயலின் என்ற பொருட்கள் தோன்றுவதால் கல்லீரல் செல்கள் வீங்கி பெரஜதாதல் போன்றவை தோன்றி இறுதியில் நோயாக மாறுகிறது.

                       இலங்கையில் கூட கடந்த ஆண்டு தை மாதம் 14 பேர் மரணிக்கவும் 70க்கு மேற்பட்டோர் நோய்வாய்ப்படவும் காரணமாக கசிப்பு என்னும் போதைப்பொருள் காரணமாகியது. இதில் வியக்கத்தகு விடயம் என்னவென்றால் இலங்கை மது வரித்திணைக்கள அதிகாரியும் போதைப்பொருளாகிய கசிப்பை நுகர்ந்து மரணித்த 14 பேரில் ஒருவராவார்.


                                         தொடரும்................................ 
 

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...