Skip to main content

போதைப்பொருள் துஸ்பிரயோகமும் அதன் பாதிப்புகளும்-05

                   மதுபானம் இயற்கையில் உண்டாகும் ஒரு திரவம் அன்று. அது பதார்த்தங்கள் கெடுவதால் உண்டாவதாகும். கோதுமை, சோளம், ஒட்ஸ், பார்லி, அரிசி, திராட்சை போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இவை மற்றைய பதார்த்தங்கள் போலன்றி உடலில் காணப்படும் வெண்குருதிசிறுதுணிக்கைகளை அழிக்கிறது. மேலும் நுகரும் மதுபானத்தில் 20 சதவீதம் இரத்தத்தில் நேரடியாக கலந்து உடல் உறுப்பு பலவற்றையும் பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றது. ஈரல், மூளை நரம்புகள், பாலின உறுப்புகள், சிறுநீரகங்கள், நுரையீரல்கள், இரப்பை, இரத்தக்குழாய்கள் ஆகியவற்றின் உட்புறத்தை பாதிக்கவைத்து உடல் உறுப்புகளை பழுதாக்குகின்றது. பார்வை நரம்புகள், கை கால் நரம்புகள் பாதிப்பிற்குள்ளாகி குடற்புண் ஏற்பட்டு ஈற்றில் இரப்பைஅழற்சியும் ஏற்படும். நாம் சாப்பிடுகின்ற எந்த உணவும் ஜீரணமடைந்த பிறகு சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு இரத்தத்தோடு கலந்து விடும். இச்சத்துக்கள் கல்லீரலுக்கு சென்று அங்கு பல்வேறு மாற்றங்களையும் பெறும். உடலின் தேவைக்குப்போக மீதமுள்ள பல்வேறு சத்துக்களும் கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும். அதேபோல் மது அருந்தும் போதும்  அது சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு கல்லீரலை சென்றடையும். இங்கு மதுவின் வளர்ச்சி மாற்றங்களில் கல்லீரல் பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வாறு மதுவும் அதிலுள்ள நச்சுப்பொருட்களும் கல்லீரலைப் பாதிக்கும். மதுவைத் தொடர்ந்து அதிகமாக அருந்தும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிப்பாகும். கல்லீரலில் கொழுப்பமிலங்கள் அதிகமாகத்தங்குதல், கொழுப்புப்பொருட்கள் அதிகமாக மிதந்து கல்லீரல் வீங்குதல், கல்லீரல் அழற்சியால் கல்லீரல் செல்கள் பாதிக்கப்பட்டு நலிவடைதல், ஃகெயலின் என்ற பொருட்கள் தோன்றுவதால் கல்லீரல் செல்கள் வீங்கி பெரஜதாதல் போன்றவை தோன்றி இறுதியில் நோயாக மாறுகிறது.

                       இலங்கையில் கூட கடந்த ஆண்டு தை மாதம் 14 பேர் மரணிக்கவும் 70க்கு மேற்பட்டோர் நோய்வாய்ப்படவும் காரணமாக கசிப்பு என்னும் போதைப்பொருள் காரணமாகியது. இதில் வியக்கத்தகு விடயம் என்னவென்றால் இலங்கை மது வரித்திணைக்கள அதிகாரியும் போதைப்பொருளாகிய கசிப்பை நுகர்ந்து மரணித்த 14 பேரில் ஒருவராவார்.


                                         தொடரும்................................ 
 

Comments

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...