Skip to main content

காலத்துடனான ஓர் பயணம்.. ( யார் ? இவர்கள் 08 )

எனது ஆய்வின் இரண்டாம் பகுதி


இவ் ஆய்வின் ஆரம்பக்கட்டத்தில் நான் “Unidentified Flying Object” ( பறக்கும் தட்டுக்கள்) வேறு கிரகத்தில் இருந்து வருகின்றது எனும் அடிப்படையில் ஆராய்ந்தேன். அத்துடன் நம்மால் ( பூமியிலுள்ளோரால் ) அவதானிக்கப்பட்ட சில விசித்திர தோற்றம் கொண்ட அடிப்படையில் மனித உருவத்தை ஒத்திருந்த சிலர் வேறு கிரகத்தில் இருந்து வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் அலசி ஆராய்ந்தேன். அக்கருத்துகளை உறுதிப்படுத்தும் வகையில் பெற்றுக்கொண்ட சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்கள் அவை பற்றிய மக்களின் கருத்துகள் என்பவற்றை உலகளாவிய ரீதியில் அலசி ஆராய்ந்த போது குறிப்பிட்ட விசித்திரமானவர்கள் சம காலத்தில் வேற்றுக்கிரகங்களில் இருந்து வருகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

ஆனாலும் மேற்குறிப்பிட்ட ஆய்வை இன்னோர் அடிப்படையில் தொடரலாம் என எண்ணுகின்றேன். எனினும் இவ் ஆய்வை தொடர்வதற்கு முன் சில விளக்கங்களை அளிக்க வேண்டிய தேவை ஒன்று காணப்படுகின்றது.

அவையாவன,

1. காலத்துடனான இயக்கம்

2. கூர்ப்பு பற்றிய கொள்ளைகள் ஆகும்.



காலம் என்பது என்ன?

இதுவரை எம்மால் அறியப்பட்ட வரைக்கும் காலம் என்பது வாழ்வில் நாம் கடக்கும் பாதையின் அளவுகோல் எனலாம். காலமாற்றத்தை இலகுவாக அளந்துகொள்வதற்கும் அதனை தெளிவாக உணர்ந்து புரிந்துகொள்வதற்குமாக நாம் அந்தப்பாதையில் சில கற்களை நாட்டியுள்ளோம். அவை பல வகைப்படும்.

வருடம்...... நிமிடம்....செக்கன்..

ஆனால் இந்தப்பாதையில் மனிதர்கள் பயணிப்பது பற்றி நோக்கின் இந்தப்பாதையில் ஓரிடத்தில் மனிதர்கள் இணைந்து கொள்வதும் இன்னோரிடத்தில் பிரிவதுமாக (இறப்பதுமாக) நிகழ்கிறது. இந்தப்பாதையில் இணைகின்ற அந்த உயிரினங்கள் அந்தப்பாதையைப்பற்றி உணர்வதில்லை. உணர முயற்சிப்பினும் அது பாதையின் நீண்ட தூரத்தை கடந்தபின்னரே நிகழ்கிறது. இங்கு நீண்ட தூரம் என நான் குறிப்பிடுவது அவர்களின் வாழ்க்கையின் காலத்துடன் ஒப்பிட்டதாகும். எனினும் அந்தப்பாதையின் நீளம் எவ்வளவு? அந்தப்பாதை எங்கே ஆரம்பிக்கப்பட்டது? என்பவற்றிற்கு யாராலும் பதில் கூறமுடியவில்லை.

இது பற்றி எழுந்த சில கொள்கைககள் நமது விஞ்ஞானத்தை திருப்திப்படுத்த முனைகிறதா என்பதை அடுத்து நோக்குவோம்.

விஞ்ஞான வளர்ச்சியைப்பொறுத்த வரைக்கும் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட (இன்று வரைக்கும்) கொள்கையாக விளங்குவது “Big Bang Theory” ஆகும். இதில் நாம் இருக்கும் பூமி உள்ளிட்ட கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய பிரபஞ்சம் ஆனது ஆரம்பத்தில் ஒரு சிறிய புள்ளித்திணிவிலிருந்து தோன்றியதாக கூறப்பட்டுள்ளது. அதாவது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அச்சிறிய புள்ளித்திணிவானது விரிய ஆரம்பிக்கப்பட்டதாகவும் அதன் தற்போதைய விளைவே நாம் வாழும் இப்பிரபஞ்சம் எனவும் எதிர்காலத்தில் இந்த விரிவு தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



காலம் எனும் பாதையில் மற்றவர்களை விட நாம் விரைவாக பயணிக்க முடியுமா? பாதையில் தவறவிட்டவற்றை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியுமா?



அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Comments

  1. நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

    ReplyDelete
  2. நன்றிகள் நண்பரே. விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...