Skip to main content

காலத்துடனான ஓர் பயணம் 03 ( யார் ? இவர்கள் 10 )

நாம் இயங்குவதால் இறந்தகாலத்தை அடைவோமா?

ஒருவர் ஏதாவது இயக்கத்தில் இருக்கும் போதே அவர் மற்றவர்களை விட காலத்தால் மெதுவாகிறார். ஆனால் இந்தக்கால வித்தியாசம் மிக மிக குறைந்ததாக இருக்கும். அதாவது எம்மால் உணர்ந்து கொள்வது கடினமானது. காரணம் அவரின் வேகம் ஒளியின் வேகத்துடன் ஒப்பிடுகையில் மிக மிகக்குறைவானதாகும்.

உதாரணமாக

நாம் ஒரு சைக்கிளில் இயங்கினால் கூட எமக்கு நேரம் மெதுவாகவே இருக்கும். ஆனால் அந்த நேரம் மிகவும் குறைவானது. எனவே அதைப்பரீட்சித்துப்பார்க்கவேண்டும் எனில்

  • மிக மிக மிக ............................... குறைந்த நேரங்களையும் அளவிடக்கூடிய கடிகாரம் வேண்டும்.

             அல்லாது விடில்

  • நாம் இயங்கும் வாகனங்களின் கதியை மிகவும் அதிகரித்தால் அந்த நேரவித்தியாசத்தை உணரமுடியும்.

அதாவது ஒருவர் அவ்வாறு உயர்வேகத்தில் இயங்கினால் அவ்வாறு இயங்குபவர் மற்றவர் கண்களுக்கு புலப்படாமல் போவார். ஏனெனில் அவர் மற்றவர்களை விட காலத்தால் மெதுவானவர்.

நாம் ஒளியின் வேகத்துடன் ஒப்பிடக்கூடிய வகையிலான வேகமுடைய வாகனங்களில் இயங்குவோமாயின் இந்த மாற்றத்தை உணரமுடியும். அதாவது இயங்குகின்ற எமக்கு காலத்தில் ஏற்படும் மாற்றம் வழமையானது போல தென்படினும் அது உண்மையில் வழமையானது அல்ல. எம்மை விட முன்னோக்கிய காலத்தை அனுபவித்தவர்களாக வாகனத்திற்கு வெளியே இருப்பவர்கள் காணப்படுவார்கள்.



கவனிக்கவேண்டியது

நான் கூறுகின்ற வேகமானது ஒளியின் வேகத்துடன் ஒப்பிடக்கூடியதாயினும் ஒளியின் வேகத்தை விட குறைவானது.

சரி, இப்போது ஒரு கேள்வி எழக்கூடும்.

அதாவது மற்றவர்கள் எம்மை விட முந்திச்செல்கின்ற காலத்தில் இருப்பார்கள் எனின் எமது நிலை என்ன?

அவர்களுடன் ஒப்பிடும் போது குறைவான காலத்தில் உள்ள நாம் ஒரு குறிப்பிட்ட நேரத்தின் பின் அவர்களது இயல்பான காலத்தின் இறந்தகாலமாகி விடுவோம். அதாவது நாம் சிறிது நேரத்தின் பின் வாகனத்தில் இருந்து இறங்க நேரிடின் அப்போதும் எம்மால் மற்றவர்களை கணமுடியும். ஆனால் அது தற்போது எமது இயல்பான காலத்தில் இருக்கவேண்டியவர்களின் எதிர்காலத்தோற்றமாகும்.



உதாரணமாக இதனை இரு நபர்களை வைத்து விளக்கலாம் என எண்ணுகிறேன்.

.... கோபு, கோகுல் என்ற இரு சகோதரர்களை கருதுக.

கோகுல் ஆனவர் உயர்வேகத்தில் இயங்கும் வாகனத்தில் இயங்குகிறார் எனின் அவர் சிறிது நேரத்தில் கோபுவிற்கு புலப்படாது போவார். பல மணித்தியாலயங்களின் பின் கோகுல் தனது இயக்கத்தை முடித்து விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு வருவாராயின் அவரால் கோபுவைக்காணமுடியும். ஆனால் எக்காலத்தில் இருந்து அவர் வந்தாரோ அக்காலத்தில் இருந்த கோபுவினுடைய இயல்பான காலத்திற்குரிய கோகுலை கோபுவால் காணமுடியாது.

ஆனால்ஒளியின் வேகத்தை விட குறைந்த வேகத்தில் இயங்கும் வரை அவர் இயங்கத்தொடங்கிய நிலையின் பின்னரான நிகழ்வுகளையே அவரால் அனுபவிக்க முடியும்.
அதாவது நாம் வாகனத்தில் இயங்க தொடங்கிய பின்னர் வரும் நிகழ்வுகளில் ஏதோ ஒரு நிலையை அனுபவிக்கலாம்.

அப்படியாயின் எமது இறந்தகாலத்தை நாம் அடைவது எப்படி?


அடுத்த பதிவில் காணலாம்....... காத்திருங்கள்......

Comments

  1. நண்பரே,

    நல்ல பதிவு. நீங்கள் வேகமாகச் செல்பவர்கள் இறந்த காலத்திற்குச் செல்கிறார்கள் என எழுதியிருக்கின்றீர்கள். அதாவது, வேகமாகச் செல்பவர் பிறரின் பார்வையிலிருந்து மறைவர் எனக் கூறுகிறீர்கள். அப்படியாயின் மிக அதிக வேகத்தில் பயணிக்கும் ஒளியினை எவ்வாறு நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது? நீங்கள் கூறுவதுபடி பார்க்கப்போனால் உதாரணமாக, நீங்கள் ஒரு டார்ச் லைட்டை இயக்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அக்கணத்தில் டார்ச்சிலிருந்து வெளியாகும் ஒளி, உடனே கடந்தகாலத்துக்குப் போய்விடும். (அதாவது உங்களால் அதனைக் காண முடியாது) உங்கள் வாழ்க்கையில் சில வருடங்கள் கழித்து அந்த ஒளியை உங்கள் மறைந்த பாட்டனார் காணக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அப்படியாயின் நாங்கள் எவ்வாறு ஒளியைக் காண்கிறோம்?

    வேகமாகச் செல்லும் ஒரு பொருளுக்கு நேரம் மெதுவாகச் செல்லுமே தவிர அப்பொருள் கடந்த காலத்துக்குச் செல்லாது! அதாவது, கோகுல் உயர்வேகத்தில் இயங்குகிறாராயின், கோபுவுக்கு ஐந்து நிமிடங்களாகத் தோன்றுவது, கோகுலுக்கு பத்துநிமிடங்களாகத் தோன்றும். அதாவது ஐந்து நிமிடங்களில் செய்யவேண்டிய வேலையை கோகுல் பத்து நிமிடங்களில் மெதுவாகச் செய்வதாக கோபுவுக்குத் தோன்றும். ஆனால் கோகுலுக்கு தான் சரியான வேகத்தில் இயங்குவதாகவே தோன்றும். அதாவது கோபு, கோகுலின் கைக்கடிகாரம் மிக மெதுவாக ஓடுவதாக நினைப்பார். ஆனால் கோகுலுக்கு இந்த மாற்றம் தெரியாது. அவரோ, கோபுவின் கைக்கடிகாரம்தான் வேகமாக ஓடுகின்றது என எண்ணுவார். இதுதான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வேக கால நிறைத் தொடர்பினை விளக்க எடுத்துக்கொண்டதாகும். எனவே வேகமாகச் செல்லும் ஒரு பொருளுக்கு நேரம் மெதுவாகச் செல்லுமே தவிர அப்பொருள் கடந்த காலத்துக்குச் செல்லாது!

    Proof: http://www.costellospaceart.com/html/time_and_the_speed_of_light.html

    என் கருத்துக்களில் மாற்றுக் கருத்துகள் ஏதும் இருந்தால் தயவுசெய்து ஆதாரத்துடன் குறிப்பிடவும்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  2. அப்புறம் நண்பரே, நீங்கள் நினைவின் வேகத்தைப் பற்றி யாதும் கூறவில்லையே?

    ReplyDelete
  3. நண்பரே,

    மீண்டும் உங்கள் வருகைக்கு நன்றிகள்!!!

    உங்களது விமர்சனங்கள் இத்தொடருக்கான கருத்துப்பரம்பலை அதிகரிக்கப்போவதையிட்டு மகிழ்ச்சி அடைகிறோம்.

    நாம் உங்களுக்கு ஏற்கனவே கூறியது போல சகல விமர்சனங்களுக்குமான எதிர்ப்பதிவு “யார் ? இவர்கள்“ தொடரின் இறுதிப்பகுதியில் தனி்ப்பதிவாக வெளிவரும்.

    அதுவரை தயவுசெய்து பொறுமையுடன் காத்திருக்கவும்.

    நன்றி.

    ReplyDelete
  4. நன்றி நண்பரே, விளக்கங்களை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  5. Boss
    ENAKU ORU UNMA THERINYAGANUM
    என்னது என்டா இறந்தகாலத்தை பார்க்க அதி-வேகத்தில் தான் போகனும் என்டு விதி முறை எதும் உண்டா?
    I WILL SAY NO
    because it not depended on speed.its depended on his/her view

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...