Skip to main content

காலத்துடனான ஓர் பயணம் 03 ( யார் ? இவர்கள் 10 )

நாம் இயங்குவதால் இறந்தகாலத்தை அடைவோமா?

ஒருவர் ஏதாவது இயக்கத்தில் இருக்கும் போதே அவர் மற்றவர்களை விட காலத்தால் மெதுவாகிறார். ஆனால் இந்தக்கால வித்தியாசம் மிக மிக குறைந்ததாக இருக்கும். அதாவது எம்மால் உணர்ந்து கொள்வது கடினமானது. காரணம் அவரின் வேகம் ஒளியின் வேகத்துடன் ஒப்பிடுகையில் மிக மிகக்குறைவானதாகும்.

உதாரணமாக

நாம் ஒரு சைக்கிளில் இயங்கினால் கூட எமக்கு நேரம் மெதுவாகவே இருக்கும். ஆனால் அந்த நேரம் மிகவும் குறைவானது. எனவே அதைப்பரீட்சித்துப்பார்க்கவேண்டும் எனில்

  • மிக மிக மிக ............................... குறைந்த நேரங்களையும் அளவிடக்கூடிய கடிகாரம் வேண்டும்.

             அல்லாது விடில்

  • நாம் இயங்கும் வாகனங்களின் கதியை மிகவும் அதிகரித்தால் அந்த நேரவித்தியாசத்தை உணரமுடியும்.

அதாவது ஒருவர் அவ்வாறு உயர்வேகத்தில் இயங்கினால் அவ்வாறு இயங்குபவர் மற்றவர் கண்களுக்கு புலப்படாமல் போவார். ஏனெனில் அவர் மற்றவர்களை விட காலத்தால் மெதுவானவர்.

நாம் ஒளியின் வேகத்துடன் ஒப்பிடக்கூடிய வகையிலான வேகமுடைய வாகனங்களில் இயங்குவோமாயின் இந்த மாற்றத்தை உணரமுடியும். அதாவது இயங்குகின்ற எமக்கு காலத்தில் ஏற்படும் மாற்றம் வழமையானது போல தென்படினும் அது உண்மையில் வழமையானது அல்ல. எம்மை விட முன்னோக்கிய காலத்தை அனுபவித்தவர்களாக வாகனத்திற்கு வெளியே இருப்பவர்கள் காணப்படுவார்கள்.



கவனிக்கவேண்டியது

நான் கூறுகின்ற வேகமானது ஒளியின் வேகத்துடன் ஒப்பிடக்கூடியதாயினும் ஒளியின் வேகத்தை விட குறைவானது.

சரி, இப்போது ஒரு கேள்வி எழக்கூடும்.

அதாவது மற்றவர்கள் எம்மை விட முந்திச்செல்கின்ற காலத்தில் இருப்பார்கள் எனின் எமது நிலை என்ன?

அவர்களுடன் ஒப்பிடும் போது குறைவான காலத்தில் உள்ள நாம் ஒரு குறிப்பிட்ட நேரத்தின் பின் அவர்களது இயல்பான காலத்தின் இறந்தகாலமாகி விடுவோம். அதாவது நாம் சிறிது நேரத்தின் பின் வாகனத்தில் இருந்து இறங்க நேரிடின் அப்போதும் எம்மால் மற்றவர்களை கணமுடியும். ஆனால் அது தற்போது எமது இயல்பான காலத்தில் இருக்கவேண்டியவர்களின் எதிர்காலத்தோற்றமாகும்.



உதாரணமாக இதனை இரு நபர்களை வைத்து விளக்கலாம் என எண்ணுகிறேன்.

.... கோபு, கோகுல் என்ற இரு சகோதரர்களை கருதுக.

கோகுல் ஆனவர் உயர்வேகத்தில் இயங்கும் வாகனத்தில் இயங்குகிறார் எனின் அவர் சிறிது நேரத்தில் கோபுவிற்கு புலப்படாது போவார். பல மணித்தியாலயங்களின் பின் கோகுல் தனது இயக்கத்தை முடித்து விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு வருவாராயின் அவரால் கோபுவைக்காணமுடியும். ஆனால் எக்காலத்தில் இருந்து அவர் வந்தாரோ அக்காலத்தில் இருந்த கோபுவினுடைய இயல்பான காலத்திற்குரிய கோகுலை கோபுவால் காணமுடியாது.

ஆனால்ஒளியின் வேகத்தை விட குறைந்த வேகத்தில் இயங்கும் வரை அவர் இயங்கத்தொடங்கிய நிலையின் பின்னரான நிகழ்வுகளையே அவரால் அனுபவிக்க முடியும்.
அதாவது நாம் வாகனத்தில் இயங்க தொடங்கிய பின்னர் வரும் நிகழ்வுகளில் ஏதோ ஒரு நிலையை அனுபவிக்கலாம்.

அப்படியாயின் எமது இறந்தகாலத்தை நாம் அடைவது எப்படி?


அடுத்த பதிவில் காணலாம்....... காத்திருங்கள்......

Comments

  1. நண்பரே,

    நல்ல பதிவு. நீங்கள் வேகமாகச் செல்பவர்கள் இறந்த காலத்திற்குச் செல்கிறார்கள் என எழுதியிருக்கின்றீர்கள். அதாவது, வேகமாகச் செல்பவர் பிறரின் பார்வையிலிருந்து மறைவர் எனக் கூறுகிறீர்கள். அப்படியாயின் மிக அதிக வேகத்தில் பயணிக்கும் ஒளியினை எவ்வாறு நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது? நீங்கள் கூறுவதுபடி பார்க்கப்போனால் உதாரணமாக, நீங்கள் ஒரு டார்ச் லைட்டை இயக்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அக்கணத்தில் டார்ச்சிலிருந்து வெளியாகும் ஒளி, உடனே கடந்தகாலத்துக்குப் போய்விடும். (அதாவது உங்களால் அதனைக் காண முடியாது) உங்கள் வாழ்க்கையில் சில வருடங்கள் கழித்து அந்த ஒளியை உங்கள் மறைந்த பாட்டனார் காணக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அப்படியாயின் நாங்கள் எவ்வாறு ஒளியைக் காண்கிறோம்?

    வேகமாகச் செல்லும் ஒரு பொருளுக்கு நேரம் மெதுவாகச் செல்லுமே தவிர அப்பொருள் கடந்த காலத்துக்குச் செல்லாது! அதாவது, கோகுல் உயர்வேகத்தில் இயங்குகிறாராயின், கோபுவுக்கு ஐந்து நிமிடங்களாகத் தோன்றுவது, கோகுலுக்கு பத்துநிமிடங்களாகத் தோன்றும். அதாவது ஐந்து நிமிடங்களில் செய்யவேண்டிய வேலையை கோகுல் பத்து நிமிடங்களில் மெதுவாகச் செய்வதாக கோபுவுக்குத் தோன்றும். ஆனால் கோகுலுக்கு தான் சரியான வேகத்தில் இயங்குவதாகவே தோன்றும். அதாவது கோபு, கோகுலின் கைக்கடிகாரம் மிக மெதுவாக ஓடுவதாக நினைப்பார். ஆனால் கோகுலுக்கு இந்த மாற்றம் தெரியாது. அவரோ, கோபுவின் கைக்கடிகாரம்தான் வேகமாக ஓடுகின்றது என எண்ணுவார். இதுதான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வேக கால நிறைத் தொடர்பினை விளக்க எடுத்துக்கொண்டதாகும். எனவே வேகமாகச் செல்லும் ஒரு பொருளுக்கு நேரம் மெதுவாகச் செல்லுமே தவிர அப்பொருள் கடந்த காலத்துக்குச் செல்லாது!

    Proof: http://www.costellospaceart.com/html/time_and_the_speed_of_light.html

    என் கருத்துக்களில் மாற்றுக் கருத்துகள் ஏதும் இருந்தால் தயவுசெய்து ஆதாரத்துடன் குறிப்பிடவும்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  2. அப்புறம் நண்பரே, நீங்கள் நினைவின் வேகத்தைப் பற்றி யாதும் கூறவில்லையே?

    ReplyDelete
  3. நண்பரே,

    மீண்டும் உங்கள் வருகைக்கு நன்றிகள்!!!

    உங்களது விமர்சனங்கள் இத்தொடருக்கான கருத்துப்பரம்பலை அதிகரிக்கப்போவதையிட்டு மகிழ்ச்சி அடைகிறோம்.

    நாம் உங்களுக்கு ஏற்கனவே கூறியது போல சகல விமர்சனங்களுக்குமான எதிர்ப்பதிவு “யார் ? இவர்கள்“ தொடரின் இறுதிப்பகுதியில் தனி்ப்பதிவாக வெளிவரும்.

    அதுவரை தயவுசெய்து பொறுமையுடன் காத்திருக்கவும்.

    நன்றி.

    ReplyDelete
  4. நன்றி நண்பரே, விளக்கங்களை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  5. Boss
    ENAKU ORU UNMA THERINYAGANUM
    என்னது என்டா இறந்தகாலத்தை பார்க்க அதி-வேகத்தில் தான் போகனும் என்டு விதி முறை எதும் உண்டா?
    I WILL SAY NO
    because it not depended on speed.its depended on his/her view

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...