Skip to main content

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய,

"டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர்.
அங்கு கணேசன்,

"ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண".
என விழி அருவி சொரிய மொழிந்தான்.

"இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!!
நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...."
என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்டு சென்றான்.

நேரம் ஒன்றரையைத்தாண்டியது. பாடசாலை சென்ற கண்ணம்மாவும் குமரேசனும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். வீட்டினை நெருங்கியதும் இருவருக்கும் ஒரே திகைப்பு. குழப்பம்  வீட்டில் ஒரே அழுகுரல்கள் கேட்டவண்ணம் இருந்தன. வீட்டில் இருந்த கூட்டத்தை ஒவ்வொன்றாக விலக்கி உள்ளே சென்றனர்.........!!!!

"ஐயோ!!!! அம்ம்ம்ம்ம்மா.............அப்ப்ப்ப்பபா..........எங்கள விட்டுட்டு போயிட்டீங்களே. அப்பா அம்மா வாங்க எங்கள விட்டுட்டுப் போயிடாதீங்க..... நாங்க என்னண்டு தனியா இருக்கிறது....... வாங்கப்பா.............ஐயோ!!! கடவுளே!!!! " என்று விண்தனில் இடிகள் முழங்கியது போல இரு சின்னஞ்சிறு பிஞ்சுகளும் விழி அருவி பாய கதறினர். 'என்ன பயன்!!! எவ்வளவுதான் கதறினாலும் இந்த உயிரினும் மேலான இன்னுயிர்களை மீண்டும் மீட்கவா முடியும் இல்லையே .. பிரிவுத்துன்பத்தின் நிழலைக்கூட அறியாத அந்த சின்னஞ்சிறு வண்ணப்பிஞசுகள் எங்ஙனம் தான் வேதனைப்பட்டிருக்குமோ? தாய்தந்தையற்று அநாதைகளாகிய இவர்கள் எனிவரும் காலங்களில் எப்படித்தான் வாழப்போகிறார்களோ' என்ற கேள்வியே கூடி நின்றவர்களின் உள்ளங்களில் தோன்றி இருக்கும்.

கிரியைகள் அனைத்தும் முடிவடைந்தன. வீட்டினில் ஒரே நிசப்தம். ஒரு மூலையில் குமரேசனும் மறுமூலையில் கண்ணம்மாவும் எதையோ தீவிரமாக யோசித்தவண்ணம் இருந்தனர். நேரமும் கடந்து கொண்டிருந்தது. கண்களில் இருந்து கண்ணீரும் நின்ற பாடில்லை. ஈற்றில் கண்ணம்மா பெருமூச்சு விட்டபடி கண்களில் கண்ணீர் குளம் எனத் தேங்கி நிற்க, தளதளத்த குரலில்,

"தம்பி! அப்பாவும், அம்மாவும் எங்கள விட்டுட்டு கடவுளிட்ட போயிட்டினம். எங்களுக்கு சொந்த பந்தம் எண்டு எனி வேற யாரும் இல்ல.  அதால.....
அதால....??? என வினாவெழுப்பிய குமரேசனுக்கு 
அதால நீ எனிப்படி நான் வேலைக்குப்போறன், நீ உன்ர அக்கா மேல நெசமா பாசம் வெச்சிருந்தா இதுக்கு இல்ல எண்டு சொல்லாத" 
எனக் கூற முதலில் மறுப்பு தெரிவித்தாலும் பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் ஈற்றில் தனது அக்காவின் வற்புறுத்தலால் சம்மதித்தான்.

மறுநாள் காலை அக்காவும் தம்பியும் நித்திரையில் இருந்து எழுந்து காலைக்கடன்களை முடித்தனர்.கண்ணம்மா தேநீர் தயாரித்து குமரேசனிடம் கொடுத்து தானும் அருந்தியபின்னர் தான் அறிந்த சமையல்கலை வல்லமையால் உணவுசமைத்து தம்பியை உண்ணவைத்து அவனை பாடசாலைக்கு அனுப்பிய பின்னர் தானும் வேலைக்கு செல்லலானாள்

தொடரும்.........

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...