Skip to main content

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய,

"டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர்.
அங்கு கணேசன்,

"ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண".
என விழி அருவி சொரிய மொழிந்தான்.

"இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!!
நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...."
என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்டு சென்றான்.

நேரம் ஒன்றரையைத்தாண்டியது. பாடசாலை சென்ற கண்ணம்மாவும் குமரேசனும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். வீட்டினை நெருங்கியதும் இருவருக்கும் ஒரே திகைப்பு. குழப்பம்  வீட்டில் ஒரே அழுகுரல்கள் கேட்டவண்ணம் இருந்தன. வீட்டில் இருந்த கூட்டத்தை ஒவ்வொன்றாக விலக்கி உள்ளே சென்றனர்.........!!!!

"ஐயோ!!!! அம்ம்ம்ம்ம்மா.............அப்ப்ப்ப்பபா..........எங்கள விட்டுட்டு போயிட்டீங்களே. அப்பா அம்மா வாங்க எங்கள விட்டுட்டுப் போயிடாதீங்க..... நாங்க என்னண்டு தனியா இருக்கிறது....... வாங்கப்பா.............ஐயோ!!! கடவுளே!!!! " என்று விண்தனில் இடிகள் முழங்கியது போல இரு சின்னஞ்சிறு பிஞ்சுகளும் விழி அருவி பாய கதறினர். 'என்ன பயன்!!! எவ்வளவுதான் கதறினாலும் இந்த உயிரினும் மேலான இன்னுயிர்களை மீண்டும் மீட்கவா முடியும் இல்லையே .. பிரிவுத்துன்பத்தின் நிழலைக்கூட அறியாத அந்த சின்னஞ்சிறு வண்ணப்பிஞசுகள் எங்ஙனம் தான் வேதனைப்பட்டிருக்குமோ? தாய்தந்தையற்று அநாதைகளாகிய இவர்கள் எனிவரும் காலங்களில் எப்படித்தான் வாழப்போகிறார்களோ' என்ற கேள்வியே கூடி நின்றவர்களின் உள்ளங்களில் தோன்றி இருக்கும்.

கிரியைகள் அனைத்தும் முடிவடைந்தன. வீட்டினில் ஒரே நிசப்தம். ஒரு மூலையில் குமரேசனும் மறுமூலையில் கண்ணம்மாவும் எதையோ தீவிரமாக யோசித்தவண்ணம் இருந்தனர். நேரமும் கடந்து கொண்டிருந்தது. கண்களில் இருந்து கண்ணீரும் நின்ற பாடில்லை. ஈற்றில் கண்ணம்மா பெருமூச்சு விட்டபடி கண்களில் கண்ணீர் குளம் எனத் தேங்கி நிற்க, தளதளத்த குரலில்,

"தம்பி! அப்பாவும், அம்மாவும் எங்கள விட்டுட்டு கடவுளிட்ட போயிட்டினம். எங்களுக்கு சொந்த பந்தம் எண்டு எனி வேற யாரும் இல்ல.  அதால.....
அதால....??? என வினாவெழுப்பிய குமரேசனுக்கு 
அதால நீ எனிப்படி நான் வேலைக்குப்போறன், நீ உன்ர அக்கா மேல நெசமா பாசம் வெச்சிருந்தா இதுக்கு இல்ல எண்டு சொல்லாத" 
எனக் கூற முதலில் மறுப்பு தெரிவித்தாலும் பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் ஈற்றில் தனது அக்காவின் வற்புறுத்தலால் சம்மதித்தான்.

மறுநாள் காலை அக்காவும் தம்பியும் நித்திரையில் இருந்து எழுந்து காலைக்கடன்களை முடித்தனர்.கண்ணம்மா தேநீர் தயாரித்து குமரேசனிடம் கொடுத்து தானும் அருந்தியபின்னர் தான் அறிந்த சமையல்கலை வல்லமையால் உணவுசமைத்து தம்பியை உண்ணவைத்து அவனை பாடசாலைக்கு அனுப்பிய பின்னர் தானும் வேலைக்கு செல்லலானாள்

தொடரும்.........

Comments

Popular posts from this blog

Visual Basic - Hello World (பார்வை - 2)

அனைவருக்கும் வணக்கம்…. சென்ற பதிப்பில் Visual Basic இல் நிரலாக்க குறியீடுகள் (Programming Codings) எழுதும் பகுதியில் இருந்து இயங்குநிலைக்கு எப்படி கொண்டு செல்வது என்று பார்த்தோம். இன்றைய பதிப்பில் அவசரமாக எப்படி நிரலாக்க குறியீடுகள் எழுதுவது என்று பார்க்க முன்னர் சில பகுதிகளை குறிப்புகளாக நோக்கிவிட்டு Programme எழுத போகலாம். பொதுவாக எல்லா மொழிகளுக்கும் பலதரப்பட்ட வரையறைகள் இருக்கின்றன. உதாரணமாக…. நாம் நாளை பாடசாலை சென்றேன். இந்த வசனத்தில் ஏகப்பட்ட பிழைகள். இப்படி ஒருவர் கூறும் பட்சத்தில் அவர் என்ன கூறவருகிறார் என்று எங்களால் இனங்காணமுடியாத சூழ்நிலைகள் காணப்படுகின்றன. இதே பிரச்சினை தான் இந்த நிரலாக்க மொழி சூழலிலும் காணப்படுகின்றது. கணினி என்று நோக்கும் போது அங்கும் அதனால் விளங்க கூடிய வகையில் நாம் கூறுபவை தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மொழி பயிலும் போதும் ஆரம்பத்தில் பல இடர்பாடுகள் இருப்பது போன்று காணப்படும் மாயை காலம் செல்ல செல்ல இடர்பாடுகள் குறைந்து செல்வது போன்ற தோற்றப்பாட்டை கொண்டு காணப்படும். இங்கும் நாம் கணினியால் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அதனுடன் வரையறைகளுக்கு உட்பட்ட...

யார் ? இவர்கள் 05

பறக்கும் தட்டை மக்கள் பார்த்து சில மணிநேரம் கழித்து இன்னோர் தகவலும் வெளியானது. நியூ மெக்சிகோ அருகே உள்ள ரோஸ்வேல் என்ற இடத்தில் வட்டவடிவமான (பறக்கும் தட்டு) பெரிய பொருள் ஒன்று நொறுங்கிக்கிடப்பதாக கூறப்பட்டது. நிறைகுறைந்த அதேநேரத்தில் உறுதியான உலோகத்தில் அந்த பறக்கும் தட்டு தயாரிக்கப்பட்டு இருந்தது. எனினும் அரசு தரப்பில் ஆரம்பத்தில் இச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டது. அதேநேரம் அமெரிக்க விமானப்படை இது தொடர்பாக இரகசிய விசாரணை ஒன்றையும் உடனடியாக நடாத்தியது. அப்போது பறக்கும் தட்டுகள் வானில் பறந்தது உண்மைதான் என்று தகவல் வெளியானது. இங்கு பெறப்பட்ட அவ்வுலோகமானது மிகவும் நிறைகுறைந்ததாகவும் ஆனால் மிகவும் உறுதி கூடியதாகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வுலோக இயல்பு பூமியில் உள்ள உலோகங்களின் இயல்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டது. ஆனாலும் உடனடியாக ஏற்பட்ட பரபரப்பையும் பதற்றத்தையும் தணிப்பதாக அரசு கூறிய கருத்து “ விமானப்படையினர் தட்பவெப்பநிலை மாற்றங்களை அறிய அனுப்பிய வானிலை ஆய்வு பலூன் தான் தரையில் வீழ்ந்து நொருங்கியது ’’ மேற்கூறப்பட்ட அனைத்து சாத்தியப்பாடுகளு...

இறந்த காலத்தை அடைவோமா? ( யார் ? இவர்கள் 11 )

இறந்த காலத்தை அடைவது எப்படி? இங்கு நாம் பயன்படுத்தும் வேகம், ஒளியின் வேகத்தை அணுகும் போது எம்முடைய காலமானது மெதுவாக செல்லும். ஒளியின் வேகம் என்பதை தொடும் போது எமது காலமாற்றம் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 0 எனலாம். பெரும்பாலும் எனது கருத்துப்படி இது எக்காலத்திலும் சாத்தியமற்றது எனலாம். ஆயினும் அவ்வாறு எமது வேகம் ஒளியின் வேகத்திற்குச் சமனாயின் அவ்வாறு ஒரு வாகனத்தை இயக்குபவர் காலத்தையே வென்றவராவார். அதாவது அவர் தனது வாழ்வை வாகனத்திற்கு வெளியில் உள்ளோரின் இயல்பான காலத்தின் படி வேண்டுமானவரை அவ்வாகனத்தில் கழிக்கலாம். சரி அடுத்ததாக எமது வாகனம் ஒளியின் வேகத்தை மீறும் போதே நாம் எமது இறந்த காலத்திற்குச் செல்வோம். அதாவது நாம் கடந்து வந்த காலத்திற்கு மீண்டும் செல்லலாம். எமக்கு வேண்டுமான காலத்தில் தரையிறங்கி அங்குள்ள எமது சிறு வயதுத்தோற்றங்களை கூட சந்திக்கலாம். ஆனால் அவர்கள் ( இறந்தகாலத்திலுள்ளோர் ) தமது காலமே இயல்பான போக்குடையது என உணர்வர். எனவே அவர்களைப்பொறுத்தவரைக்கும் அங்கு செல்லும் நாம் அவர்களின் எதிர்காலத்தோர் ஆவோம். இவ்வாறு செயற்படக்கூடிய இயலுமையை எமது மனித குலம் பெறுமாயின் இதன் விளைவா...