Skip to main content

MAAYA RAJJYAM - 10

நேரடி திகில் அனுபவங்கள்


இவ்வாறு காணாமல் போனோர் பற்றிய சம்பவங்கள் நூற்றுக்கணக்கான அளவில் நடந்துள்ளன. எந்தவொரு சம்பவத்தின் போதும் எதுவித தடயமும் கிடைக்கவில்லை என்பது தான் மேலும் திகிலூட்டும் செய்தி.

அடுத்ததாக பெர்முடா முக்கோணப்பகுதியில் பயணித்து சில வித்தியாசமான அனுபவங்களைப் பெற்று உயிர் தப்பிய சிலவற்றினுடைய அனுபவங்களைப் பார்த்து விட்டு நேரடியாக எனது ஆய்வினுள் நுழைகிறேன்.


VINCENT GRADDIS

காலம் :- 1944 இன் இறுதிப்பகுதி
பதவி :- யுத்த விமானி
பயணம் :- இத்தாலியை நோக்கி

தெரிவித்தவை:-
எனது குழுவில் சுமார் 7 விமானங்கள் இருந்தன.பெர்முடாவிலிருந்து 300 கடல் மைல் தொலைவில் இருந்த போது எங்களது விமானங்கள் எதிர்பாராத ஒரு அதிர்ச்சிக்கு உள்ளாகின. ஆனால் வானிலை நன்றாகவே இருந்தது.

ஆனால் அந்த அதிர்ச்சியின் விளைவாக விமானம் தலைகீழாகவும் செங்குத்தாகவும் கீழ்நோக்கியும் பாயத் தொடங்கியது. நான் மிகவும் சிரமப்பட்டு விமானத்தின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தி தளத்திற்கு காண்டு வந்து சேர்த்தேன். என்னுடன் மேலும் ஒரு விமானமும் வந்து சேர்ந்துவிட்டது. ஆனால் மற்றைய ஐந்து விமானங்களின் கதி என்னவென்றே தெரியவில்லை. அவற்றினுடைய ரேடியோ தொடர்பு எதுவும் கிடைக்கவில்லை.

குறிப்பு

மேற்படி சம்பவம் இவ் ஆய்வின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட Flight 19 சம்பவத்திற்கு சில மாதங்கள் முன்னர் இடம்பெற்றது. அவ்வேளையில் 2ம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் என்பதால் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகவில்லை.ஆயினும் தேடுதல் முயற்சிகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது.தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

Comments

  1. தொடரட்டும்.. அடுத்த பதிவை எப்போது இடுவீர்கள்???

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...