Skip to main content

MAAYA RAJJYAM - 10

நேரடி திகில் அனுபவங்கள்


இவ்வாறு காணாமல் போனோர் பற்றிய சம்பவங்கள் நூற்றுக்கணக்கான அளவில் நடந்துள்ளன. எந்தவொரு சம்பவத்தின் போதும் எதுவித தடயமும் கிடைக்கவில்லை என்பது தான் மேலும் திகிலூட்டும் செய்தி.

அடுத்ததாக பெர்முடா முக்கோணப்பகுதியில் பயணித்து சில வித்தியாசமான அனுபவங்களைப் பெற்று உயிர் தப்பிய சிலவற்றினுடைய அனுபவங்களைப் பார்த்து விட்டு நேரடியாக எனது ஆய்வினுள் நுழைகிறேன்.


VINCENT GRADDIS

காலம் :- 1944 இன் இறுதிப்பகுதி
பதவி :- யுத்த விமானி
பயணம் :- இத்தாலியை நோக்கி

தெரிவித்தவை:-
எனது குழுவில் சுமார் 7 விமானங்கள் இருந்தன.பெர்முடாவிலிருந்து 300 கடல் மைல் தொலைவில் இருந்த போது எங்களது விமானங்கள் எதிர்பாராத ஒரு அதிர்ச்சிக்கு உள்ளாகின. ஆனால் வானிலை நன்றாகவே இருந்தது.

ஆனால் அந்த அதிர்ச்சியின் விளைவாக விமானம் தலைகீழாகவும் செங்குத்தாகவும் கீழ்நோக்கியும் பாயத் தொடங்கியது. நான் மிகவும் சிரமப்பட்டு விமானத்தின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தி தளத்திற்கு காண்டு வந்து சேர்த்தேன். என்னுடன் மேலும் ஒரு விமானமும் வந்து சேர்ந்துவிட்டது. ஆனால் மற்றைய ஐந்து விமானங்களின் கதி என்னவென்றே தெரியவில்லை. அவற்றினுடைய ரேடியோ தொடர்பு எதுவும் கிடைக்கவில்லை.

குறிப்பு

மேற்படி சம்பவம் இவ் ஆய்வின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட Flight 19 சம்பவத்திற்கு சில மாதங்கள் முன்னர் இடம்பெற்றது. அவ்வேளையில் 2ம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் என்பதால் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகவில்லை.ஆயினும் தேடுதல் முயற்சிகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது.தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

Comments

  1. தொடரட்டும்.. அடுத்த பதிவை எப்போது இடுவீர்கள்???

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...