Skip to main content

MAAYA RAJJYAM - 14

சமூகத்தில் நிலவும் சில உண்மைக்குப்புறம்பான தகவல்கள்


திகில்களும் , மர்மங்களும் தாராளமாக கொட்டிக்கிடக்கும் இந்த பெர்முடா முக்கோணம் நோக்கிய ஆய்வில் குறிப்பிடத்தக்க உறுதியான தீர்வு முன்வைக்கப்படாத காரணத்தினால் மக்கள் மத்தியில் இயல்பாக ஏற்படுகின்ற பதற்றமான சூழ்நிலை காரணமாக பல வதந்திகள் உருவெடுக்கத்தொடங்கியுள்ளன.
இவ்வாறான வதந்திகள் அவை தொடர்பான எண்ணங்களை மிகவும் வித்தியாசமான முறையில் ஏற்படுத்திவிடுவதால் அவர்கள் தங்களுக்குள்ளேயே பல புதிய கேள்விகளை ஏற்படுத்திக்கொண்டு மர்மங்களின் அளவையும் அதிகரித்து விடுவது தான் வேடிக்கையாக உள்ளது.

பெர்முடா முக்கோணத்தின் இரகசியம் தான் என்ன?


கேள்விப்படும் அனைத்து சம்பவங்களையும் திகில் மர்மம் மற்றும் அமானுஷ்ய விடயங்களின் கலவையாக எமது மனங்களில் எண்ணத்தை தோற்றுவிக்கும் இந்த புரியாத புதிரின் விடை தான் என்ன?

பொதுவாக மக்களால் அறியப்பட்ட மனித அறிவியல் அம்சங்களின் அனைத்து சாத்தியப்பாடுகளையும் பொய்யாக்கும் வகையில் மக்களின் மனதில் மாபெரும் அதிர்வலைகளின் தோற்றத்திற்கு காரணமாக திகழும் இப் பெர்முடா முக்கோணம் தொடப்போகும் கரை தான் என்ன?

தொழில்நுட்ப வசதிகள் பலவற்றைக்கொண்ட பல கப்பல்களையும் பல விமானங்களையும் திடீரென மறையச் செய்த இம்முக்கோணம் தொடர்பான எனது முடிவை உங்களுக்குத்தெரிவிப்பதன் மூலம் கருந்துளை மற்றும் பிரபஞ்சத்தில் நிலையற்ற காலத்தன்மை பற்றிய விளக்கத்தினை உங்களுக்கு வழங்கலாமென எண்ணுகிறேன்.

தொடரும்.....

Comments

  1. NICE.....

    T.KIRUBA

    ReplyDelete
  2. நன்றாகவுள்ளது.
    உங்களது ஆராச்சி முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...