Skip to main content

கண்ணம்மா 02

கண்ணம்மா 02


அதிகாலையில் நீராடி சீருடை அணிந்த சிறுவர்களை சாப்பிட அழைத்த செல்லம்மா திண்ணையின் பக்கம் சென்று,

“என்னங்கோ!!! பிள்ளயள் வெளிக்கிட்டிட்டினம், வாருங்கோவன் அத்தான் சாப்பிடுவம்“
என தனது கணவனை அழைத்தாள்.

திண்ணையில் அமர்ந்து ஆயிரம் கனவுகளில் மூழ்கியிருந்த கணேசனுக்கு செல்லம்மாவின் வரிகள், கனவுகளிலிருந்து அவனை மீட்டன. சோகம் குன்றாத ஒடுங்கிய முகம் தனது உதடுகள் அசைத்து  

” நீ போய் சாப்புடு புள்ள நான் இப்ப வந்துர்றன்”
என்று கூறி வெறுப்பின் கண் மனம் வைத்து ஆமை வேகத்தில் வீட்டினுள் நுழைந்தான்.

கணேசன் -  கட்டையான பருத்த உடல் கொண்டு,  சுருள் தலைமயிர் கொண்டு, குறுந்தாடி கொண்டு, நெற்றியில் அடிமட்டம் வைத்து வரைந்தது போல மூன்று தடித்த கோடுகளை உடையதும்- பசும்பாலின் வெண்மையை உடையதுமான திருநீற்றை அணிந்து கொண்டு, அதன் நடுவே மஞ்சள் சந்தனத்தால் வட்ட வடிவமான பொட்டுடனும், சற்று அழுக்கான வேஷ்டியையும் அணிந்த உருவம் செல்லம்மாவை கண்டதும் ஒரு வரண்ட புன்முறுவல். செல்லம்மாவும் சிறிய புன்னகையால் மறுமொழி கூறி சமையலறைக்கு சென்று, உணவை கோப்பைகளில் இட்டு வெளியே கொண்டு வர அனைவரும் வட்ட மேசை மாநாட்டில் போல வட்டமாக அமர்ந்திருக்கிறார்கள். அப்போது குட்டிக்குமரேசன்

“ அப்பா எங்களுக்கெண்டா வாற கிழமயோட லீவு. இந்தமுற நாங்க எங்கப்பா போறது?“

“இல்லப்பா இந்த முற போறதுக்கு அப்பாகிட் நிறைய காசில்லப்பா. அடுத்த தடவ பாப்பம்!''
என்றான் கணேசன். “ச்ச பிள்ளயளின்ர விருப்பத்தக்கூட நிறவேற்றாம..'' என்று  முணுமுணுக்க கண்களில் தேங்கிய கண்ணீர், இடம் காணாது இரு மூலைகளின் வழியாக வந்து நிலத்தை பதம் பார்த்தன.

“ சரி, சரி சாப்பிடுவம்”  கணேசனின் கவனத்தை திசை திருப்பினாள் செல்லம்மா. உணவு உண்டபின் பிள்ளைகள் இருவரும் தமது கண்கண்ட தெய்வங்களாகிய தாய் - தந்தையரின் பாதங்களில் வீ்ழ்ந்து வணங்கி நல்லாசிகளைப் பெற்று கையசைத்தபடி பாடசாலை சென்றனர்.

தொடரும்..................

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...