Skip to main content

கண்ணம்மா 02

கண்ணம்மா 02


அதிகாலையில் நீராடி சீருடை அணிந்த சிறுவர்களை சாப்பிட அழைத்த செல்லம்மா திண்ணையின் பக்கம் சென்று,

“என்னங்கோ!!! பிள்ளயள் வெளிக்கிட்டிட்டினம், வாருங்கோவன் அத்தான் சாப்பிடுவம்“
என தனது கணவனை அழைத்தாள்.

திண்ணையில் அமர்ந்து ஆயிரம் கனவுகளில் மூழ்கியிருந்த கணேசனுக்கு செல்லம்மாவின் வரிகள், கனவுகளிலிருந்து அவனை மீட்டன. சோகம் குன்றாத ஒடுங்கிய முகம் தனது உதடுகள் அசைத்து  

” நீ போய் சாப்புடு புள்ள நான் இப்ப வந்துர்றன்”
என்று கூறி வெறுப்பின் கண் மனம் வைத்து ஆமை வேகத்தில் வீட்டினுள் நுழைந்தான்.

கணேசன் -  கட்டையான பருத்த உடல் கொண்டு,  சுருள் தலைமயிர் கொண்டு, குறுந்தாடி கொண்டு, நெற்றியில் அடிமட்டம் வைத்து வரைந்தது போல மூன்று தடித்த கோடுகளை உடையதும்- பசும்பாலின் வெண்மையை உடையதுமான திருநீற்றை அணிந்து கொண்டு, அதன் நடுவே மஞ்சள் சந்தனத்தால் வட்ட வடிவமான பொட்டுடனும், சற்று அழுக்கான வேஷ்டியையும் அணிந்த உருவம் செல்லம்மாவை கண்டதும் ஒரு வரண்ட புன்முறுவல். செல்லம்மாவும் சிறிய புன்னகையால் மறுமொழி கூறி சமையலறைக்கு சென்று, உணவை கோப்பைகளில் இட்டு வெளியே கொண்டு வர அனைவரும் வட்ட மேசை மாநாட்டில் போல வட்டமாக அமர்ந்திருக்கிறார்கள். அப்போது குட்டிக்குமரேசன்

“ அப்பா எங்களுக்கெண்டா வாற கிழமயோட லீவு. இந்தமுற நாங்க எங்கப்பா போறது?“

“இல்லப்பா இந்த முற போறதுக்கு அப்பாகிட் நிறைய காசில்லப்பா. அடுத்த தடவ பாப்பம்!''
என்றான் கணேசன். “ச்ச பிள்ளயளின்ர விருப்பத்தக்கூட நிறவேற்றாம..'' என்று  முணுமுணுக்க கண்களில் தேங்கிய கண்ணீர், இடம் காணாது இரு மூலைகளின் வழியாக வந்து நிலத்தை பதம் பார்த்தன.

“ சரி, சரி சாப்பிடுவம்”  கணேசனின் கவனத்தை திசை திருப்பினாள் செல்லம்மா. உணவு உண்டபின் பிள்ளைகள் இருவரும் தமது கண்கண்ட தெய்வங்களாகிய தாய் - தந்தையரின் பாதங்களில் வீ்ழ்ந்து வணங்கி நல்லாசிகளைப் பெற்று கையசைத்தபடி பாடசாலை சென்றனர்.

தொடரும்..................

Comments

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...