Skip to main content

MAAYA RAJJYAM 04

தொலைந்த விமானங்கள்


ஆண்டு  :- 1945
மாதம் :- டிசம்பர்
திகதி :- 5

அதுவரை பெர்முடாமுக்கோணம் என்று அழைக்கப்பட்டதை பேய்முக்கோணமாக மாற்றிய பெருமை இந்த விமானத்திற்கே சாரும்.

அமெரிக்க விமானிகளின் குறிப்பிடத்தக்க 2500 மணித்தியாலய வான் பயண அனுபவம் மிக்க தேர்ச்சி பெற்ற லெப்டினண்ட் சாள்ஸ் கரொல் ரெய்லர். இவருடன் 14 விமானப்பயிற்சி மாணவர்களை உள்ளடக்கியதாக சுமார் 5 விமானங்களுடன் கூடிய Flight 19 என்கிற பிரிவினுடைய பயிற்சித்திட்டம்  LAUDERDALE என்கிற இராணுவ தளத்தில் இருந்து ஆரம்பமானது. குறித்த ஒரு பயிற்சித்திட்டம் ஆரம்பிக்கப்படும் போது குறித்த நாளின் வானிலை தொடர்பாக விரிவாக ஆராய்ந்த பின்னரே அது செயற்படுத்தப்படுவது வழமையாகும். அவ்வாறே ஆராய்ந்தபோது அன்றைய வானிலை மிகவும் நன்றாகவே காணப்பட்டது. வெற்றிகரமான முறையில் பயிற்சித்திட்டம் முடிந்து திரும்புவதற்கு சுமார் சில நிமிடங்கள் இருக்கின்ற நிலையிலேயே உலகையே உலுக்கிய அச்சம்பவங்கள் அரங்கேறின.

எப்போதும் விமான பயிற்சித்தி்டத்தில் விமானங்கள் ஈடுபட்டிருக்கின்ற நிலையில் விமானங்களுடன் தரை வானொலிக்கட்டுப்பாட்டு நிலைய தொடர்புகள் பேணப்படுவது வழமையான நடவடிக்கையாகும்.

அவ்வாறே இப்பயிற்சிதிட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தின் போதும் தலைமை விமானி ரெய்லரால் உடனுக்குடன் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு கொண்டிருந்தன. பிற்பகல் 3.15 அளவிலும் செய்தியை எதிர்பார்திருந்த வேளையில் ரெய்லர் தொடர்பை ஏற்படுத்தினார்.

ரெய்லர் :- எங்களால் எதையும் பார்க் முடியவில்லை. நிச்சயமாக எங்களுக்கு   எதுவும் தெரியவில்லை


கட்டுப்பாட்டு நிலையம் :- நீங்கள் இப்போது எவ்விடத்தில் உள்ளீர்கள்?


ரெய்லர்:- எதையும் என்னால் கூறமுடியாது உள்ளது. நாம் எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை!!!


கட்டுப்பாட்டு நிலையம் :- விமானத்தை மேற்குத்திசையில் திருப்புங்கள்


ரெய்லர் :- எங்களுக்கு மேற்குத்திசையை இனங்காண முடியவில்லை. இந்கு எல்லாமே விசித்திரமாக உள்ளது. கடலின் நிறமும் மாறிவிட்டது.

பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

பிற்பகல் 3.30 அளவில் தொடர்பை ஏற்படுத்திய ரெய்லர் விமானத்தின் திசைகாட்டி முள் தாறுமாறாக சுற்றுகின்றது. தற்போது எங்குள்ளோம் என்று தெரியவில்லை.அறிவதற்கு முயற்சிக்கின்றோம். என்றார் சிறிது நேரத்தில் தொடர்பை ஏற்படுத்திய ரெய்லர்  "நாம் எங்கிருக்கிறோம் என்று தெரியவில்லை. வெள்ளை நீரினுள் சென்று கொண்டிருக்கிறோம்" என்றார் அதன் பின்பு அவ்விமானத்திலிருந்து செய்திகள் எதுவும்  வரவில்லை.

இதற்கிடையில் காணாமல் போனோரை தேடுவதற்காக எனும் Martin Mariner விமானம் அனுப்பப்பட்டது. சற்று நேரத்தில் தொடர்பு கொண்ட இவ்விமானத்தின் விமானி 6000 அடி உயரத்தில் பலத்த காற்று வீசுவதாகவும் ,விமானம் தள்ளாடுவதாகவும் தெரிவித்தார். பின்னர் அவ்விமானமும் முன்னையதைப்போலவே ராடார் திரையிலிருந்து மறைந்து போனது. இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டு நிலைய வானொலியில்  FT FT என்ற தெளிவில்லாத குரல் ஒலித்தது.  இது Flight 19 இற்குரிய சங்கேத எழுத்துக்களாகும்.


இவ்வொலி
உண்மையிலேயே
அவ்விமானதிலிருந்து வந்திருக்குமானால் .......

மாயங்கள் தொடரும்.......
உங்கள் உண்மையின் பக்கத்தில் !!!!! 

Comments

Popular posts from this blog

Visual Basic - Hello World (பார்வை - 2)

அனைவருக்கும் வணக்கம்…. சென்ற பதிப்பில் Visual Basic இல் நிரலாக்க குறியீடுகள் (Programming Codings) எழுதும் பகுதியில் இருந்து இயங்குநிலைக்கு எப்படி கொண்டு செல்வது என்று பார்த்தோம். இன்றைய பதிப்பில் அவசரமாக எப்படி நிரலாக்க குறியீடுகள் எழுதுவது என்று பார்க்க முன்னர் சில பகுதிகளை குறிப்புகளாக நோக்கிவிட்டு Programme எழுத போகலாம். பொதுவாக எல்லா மொழிகளுக்கும் பலதரப்பட்ட வரையறைகள் இருக்கின்றன. உதாரணமாக…. நாம் நாளை பாடசாலை சென்றேன். இந்த வசனத்தில் ஏகப்பட்ட பிழைகள். இப்படி ஒருவர் கூறும் பட்சத்தில் அவர் என்ன கூறவருகிறார் என்று எங்களால் இனங்காணமுடியாத சூழ்நிலைகள் காணப்படுகின்றன. இதே பிரச்சினை தான் இந்த நிரலாக்க மொழி சூழலிலும் காணப்படுகின்றது. கணினி என்று நோக்கும் போது அங்கும் அதனால் விளங்க கூடிய வகையில் நாம் கூறுபவை தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மொழி பயிலும் போதும் ஆரம்பத்தில் பல இடர்பாடுகள் இருப்பது போன்று காணப்படும் மாயை காலம் செல்ல செல்ல இடர்பாடுகள் குறைந்து செல்வது போன்ற தோற்றப்பாட்டை கொண்டு காணப்படும். இங்கும் நாம் கணினியால் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அதனுடன் வரையறைகளுக்கு உட்பட்ட...

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

யார் ? இவர்கள் 05

பறக்கும் தட்டை மக்கள் பார்த்து சில மணிநேரம் கழித்து இன்னோர் தகவலும் வெளியானது. நியூ மெக்சிகோ அருகே உள்ள ரோஸ்வேல் என்ற இடத்தில் வட்டவடிவமான (பறக்கும் தட்டு) பெரிய பொருள் ஒன்று நொறுங்கிக்கிடப்பதாக கூறப்பட்டது. நிறைகுறைந்த அதேநேரத்தில் உறுதியான உலோகத்தில் அந்த பறக்கும் தட்டு தயாரிக்கப்பட்டு இருந்தது. எனினும் அரசு தரப்பில் ஆரம்பத்தில் இச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டது. அதேநேரம் அமெரிக்க விமானப்படை இது தொடர்பாக இரகசிய விசாரணை ஒன்றையும் உடனடியாக நடாத்தியது. அப்போது பறக்கும் தட்டுகள் வானில் பறந்தது உண்மைதான் என்று தகவல் வெளியானது. இங்கு பெறப்பட்ட அவ்வுலோகமானது மிகவும் நிறைகுறைந்ததாகவும் ஆனால் மிகவும் உறுதி கூடியதாகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வுலோக இயல்பு பூமியில் உள்ள உலோகங்களின் இயல்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டது. ஆனாலும் உடனடியாக ஏற்பட்ட பரபரப்பையும் பதற்றத்தையும் தணிப்பதாக அரசு கூறிய கருத்து “ விமானப்படையினர் தட்பவெப்பநிலை மாற்றங்களை அறிய அனுப்பிய வானிலை ஆய்வு பலூன் தான் தரையில் வீழ்ந்து நொருங்கியது ’’ மேற்கூறப்பட்ட அனைத்து சாத்தியப்பாடுகளு...