Skip to main content

MAAYA RAJJYAM 04

தொலைந்த விமானங்கள்


ஆண்டு  :- 1945
மாதம் :- டிசம்பர்
திகதி :- 5

அதுவரை பெர்முடாமுக்கோணம் என்று அழைக்கப்பட்டதை பேய்முக்கோணமாக மாற்றிய பெருமை இந்த விமானத்திற்கே சாரும்.

அமெரிக்க விமானிகளின் குறிப்பிடத்தக்க 2500 மணித்தியாலய வான் பயண அனுபவம் மிக்க தேர்ச்சி பெற்ற லெப்டினண்ட் சாள்ஸ் கரொல் ரெய்லர். இவருடன் 14 விமானப்பயிற்சி மாணவர்களை உள்ளடக்கியதாக சுமார் 5 விமானங்களுடன் கூடிய Flight 19 என்கிற பிரிவினுடைய பயிற்சித்திட்டம்  LAUDERDALE என்கிற இராணுவ தளத்தில் இருந்து ஆரம்பமானது. குறித்த ஒரு பயிற்சித்திட்டம் ஆரம்பிக்கப்படும் போது குறித்த நாளின் வானிலை தொடர்பாக விரிவாக ஆராய்ந்த பின்னரே அது செயற்படுத்தப்படுவது வழமையாகும். அவ்வாறே ஆராய்ந்தபோது அன்றைய வானிலை மிகவும் நன்றாகவே காணப்பட்டது. வெற்றிகரமான முறையில் பயிற்சித்திட்டம் முடிந்து திரும்புவதற்கு சுமார் சில நிமிடங்கள் இருக்கின்ற நிலையிலேயே உலகையே உலுக்கிய அச்சம்பவங்கள் அரங்கேறின.

எப்போதும் விமான பயிற்சித்தி்டத்தில் விமானங்கள் ஈடுபட்டிருக்கின்ற நிலையில் விமானங்களுடன் தரை வானொலிக்கட்டுப்பாட்டு நிலைய தொடர்புகள் பேணப்படுவது வழமையான நடவடிக்கையாகும்.

அவ்வாறே இப்பயிற்சிதிட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தின் போதும் தலைமை விமானி ரெய்லரால் உடனுக்குடன் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு கொண்டிருந்தன. பிற்பகல் 3.15 அளவிலும் செய்தியை எதிர்பார்திருந்த வேளையில் ரெய்லர் தொடர்பை ஏற்படுத்தினார்.

ரெய்லர் :- எங்களால் எதையும் பார்க் முடியவில்லை. நிச்சயமாக எங்களுக்கு   எதுவும் தெரியவில்லை


கட்டுப்பாட்டு நிலையம் :- நீங்கள் இப்போது எவ்விடத்தில் உள்ளீர்கள்?


ரெய்லர்:- எதையும் என்னால் கூறமுடியாது உள்ளது. நாம் எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை!!!


கட்டுப்பாட்டு நிலையம் :- விமானத்தை மேற்குத்திசையில் திருப்புங்கள்


ரெய்லர் :- எங்களுக்கு மேற்குத்திசையை இனங்காண முடியவில்லை. இந்கு எல்லாமே விசித்திரமாக உள்ளது. கடலின் நிறமும் மாறிவிட்டது.

பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

பிற்பகல் 3.30 அளவில் தொடர்பை ஏற்படுத்திய ரெய்லர் விமானத்தின் திசைகாட்டி முள் தாறுமாறாக சுற்றுகின்றது. தற்போது எங்குள்ளோம் என்று தெரியவில்லை.அறிவதற்கு முயற்சிக்கின்றோம். என்றார் சிறிது நேரத்தில் தொடர்பை ஏற்படுத்திய ரெய்லர்  "நாம் எங்கிருக்கிறோம் என்று தெரியவில்லை. வெள்ளை நீரினுள் சென்று கொண்டிருக்கிறோம்" என்றார் அதன் பின்பு அவ்விமானத்திலிருந்து செய்திகள் எதுவும்  வரவில்லை.

இதற்கிடையில் காணாமல் போனோரை தேடுவதற்காக எனும் Martin Mariner விமானம் அனுப்பப்பட்டது. சற்று நேரத்தில் தொடர்பு கொண்ட இவ்விமானத்தின் விமானி 6000 அடி உயரத்தில் பலத்த காற்று வீசுவதாகவும் ,விமானம் தள்ளாடுவதாகவும் தெரிவித்தார். பின்னர் அவ்விமானமும் முன்னையதைப்போலவே ராடார் திரையிலிருந்து மறைந்து போனது. இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டு நிலைய வானொலியில்  FT FT என்ற தெளிவில்லாத குரல் ஒலித்தது.  இது Flight 19 இற்குரிய சங்கேத எழுத்துக்களாகும்.


இவ்வொலி
உண்மையிலேயே
அவ்விமானதிலிருந்து வந்திருக்குமானால் .......

மாயங்கள் தொடரும்.......
உங்கள் உண்மையின் பக்கத்தில் !!!!! 

Comments

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...