Skip to main content

MAAYA RAJJYAM 04

தொலைந்த விமானங்கள்


ஆண்டு  :- 1945
மாதம் :- டிசம்பர்
திகதி :- 5

அதுவரை பெர்முடாமுக்கோணம் என்று அழைக்கப்பட்டதை பேய்முக்கோணமாக மாற்றிய பெருமை இந்த விமானத்திற்கே சாரும்.

அமெரிக்க விமானிகளின் குறிப்பிடத்தக்க 2500 மணித்தியாலய வான் பயண அனுபவம் மிக்க தேர்ச்சி பெற்ற லெப்டினண்ட் சாள்ஸ் கரொல் ரெய்லர். இவருடன் 14 விமானப்பயிற்சி மாணவர்களை உள்ளடக்கியதாக சுமார் 5 விமானங்களுடன் கூடிய Flight 19 என்கிற பிரிவினுடைய பயிற்சித்திட்டம்  LAUDERDALE என்கிற இராணுவ தளத்தில் இருந்து ஆரம்பமானது. குறித்த ஒரு பயிற்சித்திட்டம் ஆரம்பிக்கப்படும் போது குறித்த நாளின் வானிலை தொடர்பாக விரிவாக ஆராய்ந்த பின்னரே அது செயற்படுத்தப்படுவது வழமையாகும். அவ்வாறே ஆராய்ந்தபோது அன்றைய வானிலை மிகவும் நன்றாகவே காணப்பட்டது. வெற்றிகரமான முறையில் பயிற்சித்திட்டம் முடிந்து திரும்புவதற்கு சுமார் சில நிமிடங்கள் இருக்கின்ற நிலையிலேயே உலகையே உலுக்கிய அச்சம்பவங்கள் அரங்கேறின.

எப்போதும் விமான பயிற்சித்தி்டத்தில் விமானங்கள் ஈடுபட்டிருக்கின்ற நிலையில் விமானங்களுடன் தரை வானொலிக்கட்டுப்பாட்டு நிலைய தொடர்புகள் பேணப்படுவது வழமையான நடவடிக்கையாகும்.

அவ்வாறே இப்பயிற்சிதிட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தின் போதும் தலைமை விமானி ரெய்லரால் உடனுக்குடன் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு கொண்டிருந்தன. பிற்பகல் 3.15 அளவிலும் செய்தியை எதிர்பார்திருந்த வேளையில் ரெய்லர் தொடர்பை ஏற்படுத்தினார்.

ரெய்லர் :- எங்களால் எதையும் பார்க் முடியவில்லை. நிச்சயமாக எங்களுக்கு   எதுவும் தெரியவில்லை


கட்டுப்பாட்டு நிலையம் :- நீங்கள் இப்போது எவ்விடத்தில் உள்ளீர்கள்?


ரெய்லர்:- எதையும் என்னால் கூறமுடியாது உள்ளது. நாம் எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை!!!


கட்டுப்பாட்டு நிலையம் :- விமானத்தை மேற்குத்திசையில் திருப்புங்கள்


ரெய்லர் :- எங்களுக்கு மேற்குத்திசையை இனங்காண முடியவில்லை. இந்கு எல்லாமே விசித்திரமாக உள்ளது. கடலின் நிறமும் மாறிவிட்டது.

பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

பிற்பகல் 3.30 அளவில் தொடர்பை ஏற்படுத்திய ரெய்லர் விமானத்தின் திசைகாட்டி முள் தாறுமாறாக சுற்றுகின்றது. தற்போது எங்குள்ளோம் என்று தெரியவில்லை.அறிவதற்கு முயற்சிக்கின்றோம். என்றார் சிறிது நேரத்தில் தொடர்பை ஏற்படுத்திய ரெய்லர்  "நாம் எங்கிருக்கிறோம் என்று தெரியவில்லை. வெள்ளை நீரினுள் சென்று கொண்டிருக்கிறோம்" என்றார் அதன் பின்பு அவ்விமானத்திலிருந்து செய்திகள் எதுவும்  வரவில்லை.

இதற்கிடையில் காணாமல் போனோரை தேடுவதற்காக எனும் Martin Mariner விமானம் அனுப்பப்பட்டது. சற்று நேரத்தில் தொடர்பு கொண்ட இவ்விமானத்தின் விமானி 6000 அடி உயரத்தில் பலத்த காற்று வீசுவதாகவும் ,விமானம் தள்ளாடுவதாகவும் தெரிவித்தார். பின்னர் அவ்விமானமும் முன்னையதைப்போலவே ராடார் திரையிலிருந்து மறைந்து போனது. இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டு நிலைய வானொலியில்  FT FT என்ற தெளிவில்லாத குரல் ஒலித்தது.  இது Flight 19 இற்குரிய சங்கேத எழுத்துக்களாகும்.


இவ்வொலி
உண்மையிலேயே
அவ்விமானதிலிருந்து வந்திருக்குமானால் .......

மாயங்கள் தொடரும்.......
உங்கள் உண்மையின் பக்கத்தில் !!!!! 

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...