Skip to main content

கண்ணம்மா 07

நாட்கள் கடந்தோடின. அங்கு குமரேசன் நடந்த பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவனாக தெரிவு செய்யப்பட்டு பட்டம் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாது அதிக மதிப்பெண்கள் பெற்றதனால் தங்கப்பதக்கம் ஒன்றும் வழங்கப்படுகிறது. பல்வேறு தனியார் அமைப்புகளும் பொது அமைப்புகளும் பாராட்டி பரிசில் பல வழங்கி கௌரவித்தன.இவ்வாறு கௌரவித்தவர்களில் ஒரு தொழிலதிபர் எழுந்து “மிஸ்டர் குமரேசன் உங்க முயற்சி இன்றைக்கு பலராலும் வரவேற்கப்படும் ஒரு உன்னத நிகழ்வாக காணப்படுகிறது. பல மாணவர்களுக்கு நீங்கள் ஒரு முன் உதாரண மாணவனாக இந்நாட்டில் வலம் வருகிறீர்கள். உங்கள் சூழல் எப்படிப்பட்டது? உங்களின் இந்த நிலைக்கு யாராவது உதவியதுண்டா?..... ப்ளீஸ் ரெல்...”




குமரேசன் மெல்ல இருக்கையில் இருந்து எழுந்து மேடை தனில் ஏறி மைக் முன்னால் நின்று முதலில் எந்தப்போட்டியாயினும் அதில் வெற்றிகொள்ள எவ்வாறு எம்மை நாம் தயார்ப்படுத்த வேண்டும் எனக் கூறி அடுத்ததாக தன் வாழ்க்கை ஒளிமயமாக காரணமாகிய தன் அன்புத் தெய்வம் தாய் தந்தை அண்ணா அக்கா தம்பி தங்கை நண்பி என பல்வேறு வடிவங்களிலும் இருந்து தன் துயரங்கள் அனைத்தையம் அவளே தாங்கி தன்னை ஒரு குறையம் இல்லாமல் இவ்வளவு காலமாய் வளர்த்து ஆளாக்கி விட்ட கண்ணம்மாவைப்பற்றி கூறலானாள்.



”அடுத்ததா என்னுடைய இந்நிலைக்கு ”யாராவது உதவியதுண்டா?” எனக் கேட்டிருந்தீர்கள். ஆம் சிறு வயதிலேய நான் என் தாய் தந்தையரை இழந்துவிட்டேன். அவ்வயதில் இருந்து இன்று வரை எனக்கு தாய் தந்தை அக்கா.......... இவ்வாறு பல்வேறு வடிவமாக விளங்கும் என் அக்கா கண்ணம்மா தான் என்னுடைய இந்நிலைக்கு காரணம். நான் சோர்வுறும் நேரங்களிலெல்லாம் என்னை உற்சாகப்படுத்தி இன்று இந்த கற்றறிந்த சபை தனில் நானும் ஒருவனாக இருக்கிறேன் என்றால் அதற்கு அவர் தான் காரணம்”. இவ்வாறு கூறி விடைபெற்று தான் பெற்ற அத்தனை பரிசில்களுடனும் மறுநாட்காலை தனது ஊர் நோக்கிய பயணத்தை தொடர்ந்தான்.



பஸ் ஊர் நோக்கி சென்று கொண்டிருக்க குமரேசன் தன் அக்கா பற்றிய நினைவு

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...