Skip to main content

கண்ணம்மா 07

நாட்கள் கடந்தோடின. அங்கு குமரேசன் நடந்த பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவனாக தெரிவு செய்யப்பட்டு பட்டம் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாது அதிக மதிப்பெண்கள் பெற்றதனால் தங்கப்பதக்கம் ஒன்றும் வழங்கப்படுகிறது. பல்வேறு தனியார் அமைப்புகளும் பொது அமைப்புகளும் பாராட்டி பரிசில் பல வழங்கி கௌரவித்தன.இவ்வாறு கௌரவித்தவர்களில் ஒரு தொழிலதிபர் எழுந்து “மிஸ்டர் குமரேசன் உங்க முயற்சி இன்றைக்கு பலராலும் வரவேற்கப்படும் ஒரு உன்னத நிகழ்வாக காணப்படுகிறது. பல மாணவர்களுக்கு நீங்கள் ஒரு முன் உதாரண மாணவனாக இந்நாட்டில் வலம் வருகிறீர்கள். உங்கள் சூழல் எப்படிப்பட்டது? உங்களின் இந்த நிலைக்கு யாராவது உதவியதுண்டா?..... ப்ளீஸ் ரெல்...”




குமரேசன் மெல்ல இருக்கையில் இருந்து எழுந்து மேடை தனில் ஏறி மைக் முன்னால் நின்று முதலில் எந்தப்போட்டியாயினும் அதில் வெற்றிகொள்ள எவ்வாறு எம்மை நாம் தயார்ப்படுத்த வேண்டும் எனக் கூறி அடுத்ததாக தன் வாழ்க்கை ஒளிமயமாக காரணமாகிய தன் அன்புத் தெய்வம் தாய் தந்தை அண்ணா அக்கா தம்பி தங்கை நண்பி என பல்வேறு வடிவங்களிலும் இருந்து தன் துயரங்கள் அனைத்தையம் அவளே தாங்கி தன்னை ஒரு குறையம் இல்லாமல் இவ்வளவு காலமாய் வளர்த்து ஆளாக்கி விட்ட கண்ணம்மாவைப்பற்றி கூறலானாள்.



”அடுத்ததா என்னுடைய இந்நிலைக்கு ”யாராவது உதவியதுண்டா?” எனக் கேட்டிருந்தீர்கள். ஆம் சிறு வயதிலேய நான் என் தாய் தந்தையரை இழந்துவிட்டேன். அவ்வயதில் இருந்து இன்று வரை எனக்கு தாய் தந்தை அக்கா.......... இவ்வாறு பல்வேறு வடிவமாக விளங்கும் என் அக்கா கண்ணம்மா தான் என்னுடைய இந்நிலைக்கு காரணம். நான் சோர்வுறும் நேரங்களிலெல்லாம் என்னை உற்சாகப்படுத்தி இன்று இந்த கற்றறிந்த சபை தனில் நானும் ஒருவனாக இருக்கிறேன் என்றால் அதற்கு அவர் தான் காரணம்”. இவ்வாறு கூறி விடைபெற்று தான் பெற்ற அத்தனை பரிசில்களுடனும் மறுநாட்காலை தனது ஊர் நோக்கிய பயணத்தை தொடர்ந்தான்.



பஸ் ஊர் நோக்கி சென்று கொண்டிருக்க குமரேசன் தன் அக்கா பற்றிய நினைவு

Comments

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...