Skip to main content

மாய ராஜ்ஜியம் 19

2. அப்படியென்றால் அப்பகுதியானது எவ்வாறு வெவ்வேறு நேரங்களில் கால மாற்றம் அடையக்கூடியதாக மாற்றம் பெறுகின்றது? இதற்கான உங்கள் விளக்கம் என்ன?


நான் ஏற்கனவே குறிப்ப்பிட்டுள்ளதன் படி அண்ட வெளியில் பல்வேறு இடங்கள் இவ்வாறு காணப்படுகின்றன. அவை அவ்வாறு அங்கே ஏன் தோற்றம் பெறுகின்றன என்று இதுவலை எமது விஞ்ஞான வளர்ச்சிகளால் அறியப்படவில்லை. ஆனாலும் இவ்வாறு தோற்றம் பெறுவதற்கான சூழல் காரணிகள் அங்கே அமைந்து விடுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. இது போன்ற சூழல் அமைவது தான் எனது ஆய்வுக்களத்தில் இவ்வாறான நிலமை தோன்றுவதற்கான காரணமாகும். அவ்விடத்தை சூழ ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களின் செல்வாக்கு காரணமாக அச்சூழ்நிலைகள் அவ்விடத்தில் உருவாகாத போது அவ்விடத்திலுள்ள கால மாற்றம் மீண்டும் வழமைக்கு திரும்புகிறது. மீண்டும் சூழ்நிலைகள் பொருத்தமாக அமைகின்ற போது அங்கே காலமாற்றம் ஏற்படும். இதன்விளைவாக கருந்துளை தோற்றமும் நடைபெறும். மறைவுகளும் தொடரும்.



3.பெர்முடா மர்மங்களிற்கு கருந்துளை உருவாக்கம் தான் காரணம் என்று கூறினீர்கள். உங்கள் ஆய்வின் முற்பகுதியில் நீங்கள் விவரித்திருந்த FLIGHT 19 என்கின்ற சம்பவம் உள்ளிட்ட சில சம்பவங்களில் காணாமல் போவதற்கு முன் குறிப்பிட்ட விமானம் மற்றும் கப்பலிலிருந்த சிலர் தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். பின்னர் அவர்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது எவ்வாறு நடந்தது?

அங்கே தோற்றம் பெறுகின்ற கருந்துளையினுடைய நிகழ்வெல்லை மற்றும் அதற்கு வெளியே இருந்த போது தொடர்பு கொள்ள முடிந்திருக்கிறது. நிகழ்வெல்லை மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் அவர்கள் கருந்துளை உருவாக்கத்தின் விளைவாக ஏற்பட்ட காலநிலை மாற்றங்களை அனுபவித்திருக்க கூடியதாக உள்ளது. இதை அவர்களின் உரையாடல்களிலிருந்துபுரிந்து கொள்ளமுடியும். அவ்வெல்லையின் உள்ளே நுழைந்த போது ஏற்பட்ட அதியுயர் சுழற்சி வேகம் கொண்ட மிகை சுழற்சியின் கரணமாக மின்காந்த அலைகளின் தொடர்பினை பெறமுடியாது. அதையும் விட அவ்வுயர் வேகம் காரணமாக அவர்கள் உயிரிழந்திருப்பார்கள். உயிரோடிருந்தாலும் செயலாற்றுவதற்கு அவ்வுயர் வேகம் அனுமதித்திருக்காது.



4. சில சந்தர்ப்பங்களில் கப்பல்கள் மாத்திரம் இருக்கமனிதர்கள்ள் மட்டும் மறைந்து போனது எவ்வாறு?

நான் ஏற்களவே கருந்துளை பற்றிய முன் விளக்கத்தில் கூறியுள்ளதன் படி சில கருந்துளைகளானவை தமது நிகழ்வெல்லைக்கு வெளியே உள்ள நட்சத்திரங்களில் இருந்து வாயுக்கள் மற்றும் சில சடப்பொருட்களை ஈர்க்க்க்கூடிய திறன் வாய்ந்தவை. அதே போன்று இங்கேயும் அதன் நிகழ்வெல்லை அப்பிரதேசத்திலிருந்து தள்ளியதாக இருந்த்தன் காரணமாக கப்பலை விடுத்து மனிதர்களை மட்டும் ஈர்க்க்க்கூடிய அளவு ஈர்ப்பு சக்தியை அவ்விடத்தில் கொண்டிருக்கலாம் அல்லவா?



5. மீண்டும் எப்போது இவ்வாறான கருந்துளைகள் அவ்விடத்தில் தோற்றம் பெறும் என்று எதிர்வு கூறமுடியுமா?

நான் ஏற்கனவே கூறியது போலவே கருந்துளைகளின் தோற்றத்திற்கு காரணம் அங்கு உராகும் காலமாற்றமே. எனினும் அண்டவெளியில் ஆங்காங்கே உண்டாகும் இது போன்ற காலமாற்றத்திற்கு ஏதுவான சூழல்காரணிகள் தொடர்பான ஆராய்ச்சியில் இன்னும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையவில்லை. அவை பற்றிய நிறைவான தெளிவான ஆராய்ச்சி முடிவுகள் எமக்கு கிடைக்கின்ற போது தான் பெர்முடா முக்கோணப்பகுதியில் அவை மீளவருகின்ற காலத்தை எதிர்வுகூறமுடியும். அதுவரை சாத்தியமில்லை. ஒருவேளை இதுவரை நடந்த சம்பவங்களின் கால இடைவெளிகளில் உள்ள தொடர்பைக் கண்டறிந்து அதன்மூலம் எதிர்வுகூற முயற்சிக்கலாம். ஆனால் அவ்விதமாக ஒரு சரியான முடிவைப்பெறுவதென்பது கூடுதலான சாத்தியமற்றது.

நன்றி உரை

மாய ராஜ்ஜியம் எனும் தலைப்பின் கீழ் வெற்றிகரமாக எனது ஆய்வை நிறைவு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாய்வை வெளியிடுவதில் நான் அடைந்த பல்வேறு இடர்பாடுகளையும் என்னுடன் இணைந்து பகிர்ந்து கொண்ட எனது சகோதரன் ரவிகரன் ரணேந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

உதவிகள்

ஆய்வில் பெர்முடா முக்கோணப்பகுதி தொடர்பான சம்பவங்களைப்பற்றிய தரவுகளை பெற்றுக்கொண்ட இடங்கள்

இணையத்தளம்: www.wikipedia.com

நூல் : ஆழ்கடலில் ஆவி ராஜ்ஜியம்

இம்மூலகங்களை குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பான தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே பயன்படுத்தினேன். ஆய்வினை நான் கொண்டு சென்றவிதம் ஆய்வின் முடிவு பற்றிய எண்ணக்கருக்கள் உட்பட அனைத்துவிதமான ஏனைய அம்சங்களும் எனது சொந்த முயற்சியை அடிப்படையாக கொண்டவை.

முற்றும்

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...