Skip to main content

மாய ராஜ்ஜியம் 19

2. அப்படியென்றால் அப்பகுதியானது எவ்வாறு வெவ்வேறு நேரங்களில் கால மாற்றம் அடையக்கூடியதாக மாற்றம் பெறுகின்றது? இதற்கான உங்கள் விளக்கம் என்ன?


நான் ஏற்கனவே குறிப்ப்பிட்டுள்ளதன் படி அண்ட வெளியில் பல்வேறு இடங்கள் இவ்வாறு காணப்படுகின்றன. அவை அவ்வாறு அங்கே ஏன் தோற்றம் பெறுகின்றன என்று இதுவலை எமது விஞ்ஞான வளர்ச்சிகளால் அறியப்படவில்லை. ஆனாலும் இவ்வாறு தோற்றம் பெறுவதற்கான சூழல் காரணிகள் அங்கே அமைந்து விடுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. இது போன்ற சூழல் அமைவது தான் எனது ஆய்வுக்களத்தில் இவ்வாறான நிலமை தோன்றுவதற்கான காரணமாகும். அவ்விடத்தை சூழ ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களின் செல்வாக்கு காரணமாக அச்சூழ்நிலைகள் அவ்விடத்தில் உருவாகாத போது அவ்விடத்திலுள்ள கால மாற்றம் மீண்டும் வழமைக்கு திரும்புகிறது. மீண்டும் சூழ்நிலைகள் பொருத்தமாக அமைகின்ற போது அங்கே காலமாற்றம் ஏற்படும். இதன்விளைவாக கருந்துளை தோற்றமும் நடைபெறும். மறைவுகளும் தொடரும்.



3.பெர்முடா மர்மங்களிற்கு கருந்துளை உருவாக்கம் தான் காரணம் என்று கூறினீர்கள். உங்கள் ஆய்வின் முற்பகுதியில் நீங்கள் விவரித்திருந்த FLIGHT 19 என்கின்ற சம்பவம் உள்ளிட்ட சில சம்பவங்களில் காணாமல் போவதற்கு முன் குறிப்பிட்ட விமானம் மற்றும் கப்பலிலிருந்த சிலர் தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். பின்னர் அவர்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது எவ்வாறு நடந்தது?

அங்கே தோற்றம் பெறுகின்ற கருந்துளையினுடைய நிகழ்வெல்லை மற்றும் அதற்கு வெளியே இருந்த போது தொடர்பு கொள்ள முடிந்திருக்கிறது. நிகழ்வெல்லை மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் அவர்கள் கருந்துளை உருவாக்கத்தின் விளைவாக ஏற்பட்ட காலநிலை மாற்றங்களை அனுபவித்திருக்க கூடியதாக உள்ளது. இதை அவர்களின் உரையாடல்களிலிருந்துபுரிந்து கொள்ளமுடியும். அவ்வெல்லையின் உள்ளே நுழைந்த போது ஏற்பட்ட அதியுயர் சுழற்சி வேகம் கொண்ட மிகை சுழற்சியின் கரணமாக மின்காந்த அலைகளின் தொடர்பினை பெறமுடியாது. அதையும் விட அவ்வுயர் வேகம் காரணமாக அவர்கள் உயிரிழந்திருப்பார்கள். உயிரோடிருந்தாலும் செயலாற்றுவதற்கு அவ்வுயர் வேகம் அனுமதித்திருக்காது.



4. சில சந்தர்ப்பங்களில் கப்பல்கள் மாத்திரம் இருக்கமனிதர்கள்ள் மட்டும் மறைந்து போனது எவ்வாறு?

நான் ஏற்களவே கருந்துளை பற்றிய முன் விளக்கத்தில் கூறியுள்ளதன் படி சில கருந்துளைகளானவை தமது நிகழ்வெல்லைக்கு வெளியே உள்ள நட்சத்திரங்களில் இருந்து வாயுக்கள் மற்றும் சில சடப்பொருட்களை ஈர்க்க்க்கூடிய திறன் வாய்ந்தவை. அதே போன்று இங்கேயும் அதன் நிகழ்வெல்லை அப்பிரதேசத்திலிருந்து தள்ளியதாக இருந்த்தன் காரணமாக கப்பலை விடுத்து மனிதர்களை மட்டும் ஈர்க்க்க்கூடிய அளவு ஈர்ப்பு சக்தியை அவ்விடத்தில் கொண்டிருக்கலாம் அல்லவா?



5. மீண்டும் எப்போது இவ்வாறான கருந்துளைகள் அவ்விடத்தில் தோற்றம் பெறும் என்று எதிர்வு கூறமுடியுமா?

நான் ஏற்கனவே கூறியது போலவே கருந்துளைகளின் தோற்றத்திற்கு காரணம் அங்கு உராகும் காலமாற்றமே. எனினும் அண்டவெளியில் ஆங்காங்கே உண்டாகும் இது போன்ற காலமாற்றத்திற்கு ஏதுவான சூழல்காரணிகள் தொடர்பான ஆராய்ச்சியில் இன்னும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையவில்லை. அவை பற்றிய நிறைவான தெளிவான ஆராய்ச்சி முடிவுகள் எமக்கு கிடைக்கின்ற போது தான் பெர்முடா முக்கோணப்பகுதியில் அவை மீளவருகின்ற காலத்தை எதிர்வுகூறமுடியும். அதுவரை சாத்தியமில்லை. ஒருவேளை இதுவரை நடந்த சம்பவங்களின் கால இடைவெளிகளில் உள்ள தொடர்பைக் கண்டறிந்து அதன்மூலம் எதிர்வுகூற முயற்சிக்கலாம். ஆனால் அவ்விதமாக ஒரு சரியான முடிவைப்பெறுவதென்பது கூடுதலான சாத்தியமற்றது.

நன்றி உரை

மாய ராஜ்ஜியம் எனும் தலைப்பின் கீழ் வெற்றிகரமாக எனது ஆய்வை நிறைவு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாய்வை வெளியிடுவதில் நான் அடைந்த பல்வேறு இடர்பாடுகளையும் என்னுடன் இணைந்து பகிர்ந்து கொண்ட எனது சகோதரன் ரவிகரன் ரணேந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

உதவிகள்

ஆய்வில் பெர்முடா முக்கோணப்பகுதி தொடர்பான சம்பவங்களைப்பற்றிய தரவுகளை பெற்றுக்கொண்ட இடங்கள்

இணையத்தளம்: www.wikipedia.com

நூல் : ஆழ்கடலில் ஆவி ராஜ்ஜியம்

இம்மூலகங்களை குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பான தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே பயன்படுத்தினேன். ஆய்வினை நான் கொண்டு சென்றவிதம் ஆய்வின் முடிவு பற்றிய எண்ணக்கருக்கள் உட்பட அனைத்துவிதமான ஏனைய அம்சங்களும் எனது சொந்த முயற்சியை அடிப்படையாக கொண்டவை.

முற்றும்

Comments

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...