Skip to main content

கண்ணம்மா 09

........அக்கா என கதறி அரவணைப்பான் என எண்ணி, ஏங்கிக்கொண்டிருந்த அவள் இதைச்சற்றும் எதிர்பாராது கதறினாள். இவ்வாறு இவள் அழ மனம் சஞ்சலப்பட்டு குமரேசன் ஒருமுறை மீண்டும் திரும்பிப்பார்த்து அவ்விடத்தில் சிறிது நேரம் செய்வதறியாது நின்றான். அப்போது அவனருகே வந்த யுவதி ஒருவர்,

”அண்ணே, இது ஒரு பைத்தியம்! அஞ்சாறு மாசமா இங்கதான் கிடக்குது! எப்ப பாத்தாலும் ஒரே அழும்! நீங்க உட்டுட்டு உங்கட வேலயப்பாருங்கோ “. குமரேசனும் இவ் யுவதி கூறியதைக் கேட்டும் தன் அக்காவைக் காணவேண்டும் என்ற அவா காரணமாகவும் அவ்விடத்தை விட்டு நீங்கினான்.

தன் தம்பியே தன்னைப் பிச்சைக்காரி என்று எண்ணிவிட்டானே ! என எண்ணி நெஞ்சம் வருந்தினாள்.

”சாமி ! நான் என்ன தான் குத்தம் செஞ்சன்? ஏன் எனக்கு மட்டும் இப்புடி ஒரே தும்பங்கள் வரூது? நான் உசிர் வாழுற காரணமே என் தம்பி தான! அவனே என்னப்பிச்சக்காரி எண்டு சொல்லுற அளவுக்கு என்ர நிலை வர்றதுக்கு காரணந்தான் என்ன? சாமி ! நான் எனியும் இந்த உலகில வாழ்ந்து என்னதான் பயன்?” என்று கல்நெஞ்சும் கனிய கதறினாள்.

இவ்வேளை குமரேசன் தான் குடியிருந்த வீட்டை அடைகிறான். வீட்டுக்கதவு மூடப்பட்டு இருக்கிறது. கதவைத் தட்டுகிறான். அக்காதான் கதவைத்திறப்பார் என எண்ணுகிற வேளையில் கதவு திறக்கப்படுகிறது. இனந்தெரியாத முகத்தைக் கண்டவுடன் நெற்றிப்புருவங்கள் ஒன்றையொன்று நெருங்கி சுருக்கங்கள் அதிகரிக்க தன் அக்காவைப்பற்றி வினவுகிறான். அவர்கள் கூறியதன் விளைவாக அந்தத்தெருவோரத்தினில் தன் கையைப்பற்றியது, “ஐயா, தம்பி” என பாசத்துடன் அழைத்தது அனைத்தும் அக்காதான் என உணர்ந்து கண்களில் கண்ணீர் அருவியென பாய தன் அக்காவை நோக்கி விரைந்தான்.

அவ்விடத்தை நெருங்க அங்கு காணப்பட்ட சனத்திரளை கண்டு திகைப்படைந்து அக்கூட்டத்தை மெல்ல மெல்ல நகர்ந்து அடைகிறான். யாரோ? எவரோ? என பல்வேறு கேள்விகள் மனத்தினிடத்தே கரைபுரண்டு ஓட, உள்ளே நுழைகிறான். அங்கே…..!!!

இரத்தவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த அந்த, அலங்கார உருவத்தைக் கொண்டிருக்கவேண்டிய அலங்கோல, தனது அன்புச்சகோதரியை கண்டு பதறினான். தான் செய்த கருமத்தை எண்ணி கதறினான். வீதியில் வீழ்ந்து தனது அன்புத் தெய்வத்தின் புண்பட்ட கையைத்தொட்டு முகத்தில் முட்டி முட்டி அழுதான்.

திடீரென கண்ணம்மாவின் கைமணிக்கட்டை தன் கையில் எடுத்து இரு விரல்களால் அழுத்தி….. சந்தோசத்துடன் கூடிய ஆச்சரியத்தோடு “ஷி இஸ் எலைவ் (She is alive)” எனக்கதறியபடி தன் இருகைகளாலும் தன் சகோதரியை சுமந்தபடி சென்று ஆட்டோ ஒன்றினுள் ஏறி தான் கற்ற முதலுதவிகளை கண்ணம்மாவில் பிரயோகம் செய்தவண்ணம் வைத்தியசாலை நோக்கி புறப்படலானான்.

வைத்தியசாலையில் கண்ணம்மா அவசரசிகிச்சைப்பிரிவில் (I.C.U) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. வைத்தியரின் முடிவை அறிய அவசர சிகிச்சைப்பிரிவிற்கு வெளியே வைத்தியர் வரும் வழி மீது விழிதனை வைத்த படி காத்திருந்தான்.

              தொடரும்.......

Comments

  1. கோகுல் உங்கள் பதிவுகள் அருமை

    தமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.

    இப்படிக்கு
    டென்த் ரிசெல்டுக்கு வெயிட் பண்ணும் மாணவன்

    கணேஷ் பாபு

    ReplyDelete
  2. நன்றிகள் நண்பரே.... இப்படியான விமர்சனங்கள் உண்மையின் பக்கத்தின் வளர்ச்சிக்குரிய உரங்களாகட்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Visual Basic - Hello World (பார்வை - 2)

அனைவருக்கும் வணக்கம்…. சென்ற பதிப்பில் Visual Basic இல் நிரலாக்க குறியீடுகள் (Programming Codings) எழுதும் பகுதியில் இருந்து இயங்குநிலைக்கு எப்படி கொண்டு செல்வது என்று பார்த்தோம். இன்றைய பதிப்பில் அவசரமாக எப்படி நிரலாக்க குறியீடுகள் எழுதுவது என்று பார்க்க முன்னர் சில பகுதிகளை குறிப்புகளாக நோக்கிவிட்டு Programme எழுத போகலாம். பொதுவாக எல்லா மொழிகளுக்கும் பலதரப்பட்ட வரையறைகள் இருக்கின்றன. உதாரணமாக…. நாம் நாளை பாடசாலை சென்றேன். இந்த வசனத்தில் ஏகப்பட்ட பிழைகள். இப்படி ஒருவர் கூறும் பட்சத்தில் அவர் என்ன கூறவருகிறார் என்று எங்களால் இனங்காணமுடியாத சூழ்நிலைகள் காணப்படுகின்றன. இதே பிரச்சினை தான் இந்த நிரலாக்க மொழி சூழலிலும் காணப்படுகின்றது. கணினி என்று நோக்கும் போது அங்கும் அதனால் விளங்க கூடிய வகையில் நாம் கூறுபவை தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மொழி பயிலும் போதும் ஆரம்பத்தில் பல இடர்பாடுகள் இருப்பது போன்று காணப்படும் மாயை காலம் செல்ல செல்ல இடர்பாடுகள் குறைந்து செல்வது போன்ற தோற்றப்பாட்டை கொண்டு காணப்படும். இங்கும் நாம் கணினியால் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அதனுடன் வரையறைகளுக்கு உட்பட்ட...

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

யார் ? இவர்கள் 05

பறக்கும் தட்டை மக்கள் பார்த்து சில மணிநேரம் கழித்து இன்னோர் தகவலும் வெளியானது. நியூ மெக்சிகோ அருகே உள்ள ரோஸ்வேல் என்ற இடத்தில் வட்டவடிவமான (பறக்கும் தட்டு) பெரிய பொருள் ஒன்று நொறுங்கிக்கிடப்பதாக கூறப்பட்டது. நிறைகுறைந்த அதேநேரத்தில் உறுதியான உலோகத்தில் அந்த பறக்கும் தட்டு தயாரிக்கப்பட்டு இருந்தது. எனினும் அரசு தரப்பில் ஆரம்பத்தில் இச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டது. அதேநேரம் அமெரிக்க விமானப்படை இது தொடர்பாக இரகசிய விசாரணை ஒன்றையும் உடனடியாக நடாத்தியது. அப்போது பறக்கும் தட்டுகள் வானில் பறந்தது உண்மைதான் என்று தகவல் வெளியானது. இங்கு பெறப்பட்ட அவ்வுலோகமானது மிகவும் நிறைகுறைந்ததாகவும் ஆனால் மிகவும் உறுதி கூடியதாகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வுலோக இயல்பு பூமியில் உள்ள உலோகங்களின் இயல்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டது. ஆனாலும் உடனடியாக ஏற்பட்ட பரபரப்பையும் பதற்றத்தையும் தணிப்பதாக அரசு கூறிய கருத்து “ விமானப்படையினர் தட்பவெப்பநிலை மாற்றங்களை அறிய அனுப்பிய வானிலை ஆய்வு பலூன் தான் தரையில் வீழ்ந்து நொருங்கியது ’’ மேற்கூறப்பட்ட அனைத்து சாத்தியப்பாடுகளு...