Skip to main content

மாய ராஜ்ஜியம் 18

அறிவித்தல் … இது உங்களின் கவனத்திற்கு

இந்தப்பகுதியினை வாசிக்கும் முன்னர் இதற்கு முன்னைய பகுதிகளை வாசிப்பதன் ஊடாக இதனை அணுகுவதன் மூலம் இப்பதிவில் குறிப்பிட்டு இருப்பவை தெளிவாக விளங்குவது திண்ணம்……….

ம்ம்ம்…. எனி வாசியுங்கோ………

எனது ஆய்வின் முடிவு

பல்லாயிரக்கணக்கான மக்கள், பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் இழப்பு, பல கப்பல்கள் மற்றும் விமானிகளின் மறைவு, சில இடங்களில் கப்பல்கள் இருக்க பயணகள் மட்டும் மறைவு என்று ஏராளமான பல மர்மங்களை பத்திரிகைகளின் பேனாக்களிற்கும் அறிவிப்பாளர்களின் சொற்களுக்கும் என்று வழங்கிவிட்டு சென்றிருக்கின்ற இந்த பெர்முடா முக்கோணத்தின் மர்மத்திற்கான ( நான் ஆராய்ந்து அறிந்த ) முடிவினை பலம் வாய்ந்த விஞ்ஞான பின்னணிகளின் துணையுடன் இங்கே வழங்கலாம் என எண்ணுகிறேன்.

ஏற்கனவே அண்டத்தில் நிலவும் நிலையற்ற காலத்தன்மை பற்றி தெளிவாக தெரிவித்திருக்கின்றேன். அண்டவெளியில் பல்வேறு இடங்களில் நேரம் வேறுபட்டதாக இருப்பது பற்றி குறிப்பிட்டிருந்தேன். அப்படிப்பட்ட நேரத்தில் வேறுபட்ட ஒரு இடம் பூமியின் உள்ளே குறிப்பிட்ட ஓரிடத்தில் மாத்திரம் அமைந்திருப்பது அறிவியல் உண்மைகளின் படி, அறிவியலாளர்களின் கருத்துக்களின் படி சாத்தியமானது தானே?

கருந்துளை ஒன்றிற்கு அருகாமையில் நேரம் அடையும் சாய்வு பற்றி விவரித்திருந்தேன். கருந்துளை ஒன்றின் நிகழ்வெல்லைக்கு அருகாமையிலும் அதனிலிருந்து மிகவும் தூரமான இடத்திற்கும் இடையில் நேரம் பாரிய அளவில் வேறுபடும் என்பதையும் தெளிவாக்கியிருந்தேன். கருந்துளை என்பது மிகக்குறுகிய பிரதேசத்திலேயே தோற்றம் பெறுகின்றது என்பதை விவரமாக அறியத்தந்திருக்கிறேன். கருந்துளை அதன் நிகழ்வெல்லையுடன் சேர்ந்து அடையக்கூடிய இடம் மிகவும் சிறியது என்பது அறிவியல் ஆராய்ச்சிகளின் படி உண்மையாக இருக்கின்ற போது காலத்தில் வேறுபட்ட ஒரு குறுகிய இடம் தோன்றுகிற சமயத்தில் அங்கே ஒரு கருந்துளை ஏன் தோன்றக்கூடாது? அவ்வாறு தோன்றுகின்ற கருந்துளையானது தனது நிகழ்வெல்லைக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள துணிக்கைகளினை தனது மையத்தினை நோக்கி ஈர்த்து கட்புலனாகாத படி செய்வதும் சாத்தியம் தானே?

ஆகவே எனது ஆய்வின் முடிவாக நான் தெரிவிப்பது என்னவென்றால் குறிப்பிட்ட பெர்முடா முக்கோணப்பகுதியானது வெவ்வேறு சூழ்நிலைகளின் போது பிரபஞ்சத்தின் மற்றைய ஏராளமான பகுதிகளில் நடைபெறுவது போன்று காலத்தால் மாற்றமடைகின்றது. இது ஒரு குறுகிய பிரதேசமாக இருப்பதாலும் நேரத்தில் சாய்வு ஏற்படுவதாலும் அங்கே கருந்துளை ஒன்றோ அல்லது பலவோ தோற்றம் பெறுகின்றது, பெறுகின்றன. இதன் விளைவாக அதன் நிகழ்வெல்லைக்குள் அகப்படும் துணிக்கைகள் கருந்துளைகளின் மையத்தினுள் சென்று மறைந்து விடுகின்றன.



இம்முடிவில் உங்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களும் அதற்கான எனது பதில்களும்.

1.கருந்துளைகளின் தோற்றம் தான் பெர்முடா முக்கோணத்தின் மர்மங்களிற்கான காரணம் என்று கூறியிருக்கின்றீர்கள். அதேவேளை உங்களுடைய முன்னைய பகுதியில் பெர்முடா முக்கோணம் எல்லாவேளையிலும் ஆபத்தான பகுதியல்ல என்றும் தெரிவித்துள்ளீர்கள். ஆகவே கருந்துளை உருவாக்கம் என்பது இங்கு எவ்வாறு சாத்தியம்?

நான் இங்கே கருந்துளை உருவாக்கத்திற்கான அடிப்படைக்காரணமாக அப்பகுதியானது காலத்தினில் மாற்றம் அடைவதே என்று தெரிவித்துள்ளேன். ஆகவே எனது கருத்தின் படி அப்பகுதி காலத்தால் எப்போதெல்லாம் மாற்றம் அடைகின்றதோ அப்போதெல்லாம் கருந்துளை உருவாக்கம் அங்கே நிகழும். எனவே அங்கே உருவாகக்கூடிய கருந்துளை ஒன்றோ பலவோ நிரந்தரமானவையல்ல.

“மாய ராஜ்ஜியம்“ தொடரின் நிறைவுப்பகுதியின் ஊடாக இன்னும் சில விளக்கங்களுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன். கொஞ்சம் காத்திருங்கோவேன்………

வரட்டுமா………

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...