Skip to main content

பனாமா கால்வாய் 01



இன்றைய காலகட்டத்தில் உலகவர்த்தகமானது தரைமார்க்கம், கடல்மார்க்கம், ஆகாயமார்க்கம் என்ற மூன்று பகுதிகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொருளாதார விருத்தியிலான வர்த்தக செயற்பாடுகளை நோக்கும் போது கடல் மார்க்கத்திலான செயற்பாடுகளே அதிகமுக்கியத்துவம் வாய்ந்தவையாக காணப்படுகின்றன.

அதிலும் கடல் மார்க்கத்து இயந்திரங்களாக கருதப்படக்கூடியவையான கப்பல்களும், கப்பல்களின் வேகங்களும் கடல்மார்க்க வர்த்தக நிலைகளில் பாரிய செல்வாக்கினை வகிக்கின்றன என்றால் அது மிகையாகாது. கப்பல்கள் கடலில் பயணிக்கும் நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க கப்பலினை பராமரிப்பதற்கான செலவுகள் அதிகரிக்கின்றன. இவ்வாறு செலவுகள் அதிகரிக்க,அதிகரிக்கப்படும் செலவுகள் கப்பலின் மீது ஏற்றிச் செல்லப்படும் பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணமாகிறது. இது உலகளாவிய ரீதியில் பொருட்களின் விலைகளைத் தீர்மானிக்கும் காரணிகளாக அமைகின்றன.

இவ்வாறான செயற்பாடுகளைக் குறைக்கும் பொருட்டு கப்பல் கப்டன்கள் தாமதமின்றி கப்பலை செலுத்துதல் மற்றும் மிகவும் குறுகியதான பாதைகளை வரைந்து அதன் வழியே கப்பல்களை செலுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் இவ்வாறான பொருட்களின் விலையேற்றத்தை குறைத்துக்கொள்கின்றனர்.

மற்றைய விடயம் கப்பல்பயணத்தின் போது வரையப்படுகின்ற பாதைகள் குறுகியதாய் இருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் கப்பலின் கப்டன்களால் வரையப்படும் பாதையின் வீச்சினுள் கடற்கொள்ளையர்கள் உலவும் பிரதேசங்கள் இல்லாமையும் சர்வதேச கடல்சார் நிறுவகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதையாகவும் இருத்தல் அவசியம்.



இது ஒருபுறம் இருக்க முன்னரே குறிப்பிடுள்ளதைப்போன்றே பயணகாலத்தை குறைப்பதன் பொருட்டு பல்வேறு உத்திகளை பல்வேறு நாடுகள் கையாண்டு ஆரோக்கியமான கடல்மார்க்க வர்த்தகத்தை மேற்கொள்கின்றன. இதன் அடிப்படையில் அமெரிக்க வல்லுனர்களின் சிந்தையை ஆட்கொண்ட சவாலே பனாமாக்கால்வாயின் தோற்றத்திற்கு காரணமாகியது.

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...