Skip to main content

மாய இராஜ்ஜியம் 16

பொதுவாக அனைத்து பொருட்களுக்கும் காணப்படுகின்ற கனவளவு ஆனது கருந்துளைக்கு மிகவும் சிறியதாகும். இங்கு அதன் கனவளவனது பூச்சியத்தை அணுகுவதாகவே காணப்படுகின்றது. ஆனால் கருந்துளையானது பிரமாண்டமான திணிவைக்கொண்டது. இதன் காரணமாக உயர் அடர்த்தியைக் கொண்டு விளங்குகின்றது. அதாவது அடர்த்தியானது முடிவிலியை அணுகுகின்றது. ஆகவே கருந்துளைக்கு மேற்பரப்பு என்று இருப்பதில்லை.


இது சம்பந்தமான ஆய்வுகள் பாரியளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கருந்துளை மின் காந்த அலைகளையும் உறிஞ்சி விடுவதால் கட்புலனாகாத நிலையிலும் மேற்பரப்பு மற்றும் கனவளவு இல்லாமையாலும் இது தொடர்பான ஆய்வுகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது பலருக்கும் புரிவதில்லை. ஆகவே அது சம்பந்தமாகவும் விளக்கமளிப்பது எனது ஆய்வின் முடிவை நீங்கள் உறுதியாக ஏற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்.



கருந்துளை பற்றிய ஆய்வுகள்

ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் முறைகள்

கருந்துளையானது தனது நிகழ்வெல்லைக்கு வெளியே உள்ள பொருட்கள் மீதும் ஈர்ப்பைக்கொண்டு காணப்படுகின்றது. இதன் விளைவாக சில இடங்களில் குறிப்பிட்ட அளவான நட்சத்திரங்கள் கருந்துளையை மையமாக கொண்டு சுற்றுகையை ஆற்றுகின்றன. எனவே அச்சுற்றுகையை ஆழமாக ஆராய்வதன் மூலம் கருந்துளையின் அமைவிடம் மற்றும் பற்றி அறியப்படுகின்றது.

இன்னும் சில இடங்களை எடுத்து நோக்குவோமாயின் கருந்துளைகள் தமது நிகழ்வெல்லைக்கு வெளியே உள்ள நட்சத்திரங்களை ஈர்க்காது விடினும் நட்சத்திரங்களில் இருந்து பலவிதமான வாயுக்களை ஈர்க்கின்றன. இவ்வாறு ஈர்க்கப்படுகின்ற வாயுக்கள் கருந்துளையை வேகமாக சுற்றியபடியே உட்செல்லும் போது வெப்பநிலை அதிகரிப்பதன் காரணத்தால் கதிர்ப்புக்களை வெளிவிடுகின்றன. இக்கதிர்வீச்சுக்களை பூமியிலுள்ள விண்வெளி தொலைநோக்கிகள் மூலம் உணரமுடியும். அக்கதிர்வீச்சுகளை ஆராய்வதன் மூலமும் கருந்துளையின் அமைவிடம் அதன் தன்மை பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கருந்துளையிலிருந்து வெவ்வேறு தூரத்தில் பொருளொன்றின் பாதைகளின் சாத்தியமான போக்கை கீழே காணலாம்.


தொடரும்...........

Comments

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...