Skip to main content

மாய இராஜ்ஜியம் 16

பொதுவாக அனைத்து பொருட்களுக்கும் காணப்படுகின்ற கனவளவு ஆனது கருந்துளைக்கு மிகவும் சிறியதாகும். இங்கு அதன் கனவளவனது பூச்சியத்தை அணுகுவதாகவே காணப்படுகின்றது. ஆனால் கருந்துளையானது பிரமாண்டமான திணிவைக்கொண்டது. இதன் காரணமாக உயர் அடர்த்தியைக் கொண்டு விளங்குகின்றது. அதாவது அடர்த்தியானது முடிவிலியை அணுகுகின்றது. ஆகவே கருந்துளைக்கு மேற்பரப்பு என்று இருப்பதில்லை.


இது சம்பந்தமான ஆய்வுகள் பாரியளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கருந்துளை மின் காந்த அலைகளையும் உறிஞ்சி விடுவதால் கட்புலனாகாத நிலையிலும் மேற்பரப்பு மற்றும் கனவளவு இல்லாமையாலும் இது தொடர்பான ஆய்வுகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது பலருக்கும் புரிவதில்லை. ஆகவே அது சம்பந்தமாகவும் விளக்கமளிப்பது எனது ஆய்வின் முடிவை நீங்கள் உறுதியாக ஏற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்.



கருந்துளை பற்றிய ஆய்வுகள்

ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் முறைகள்

கருந்துளையானது தனது நிகழ்வெல்லைக்கு வெளியே உள்ள பொருட்கள் மீதும் ஈர்ப்பைக்கொண்டு காணப்படுகின்றது. இதன் விளைவாக சில இடங்களில் குறிப்பிட்ட அளவான நட்சத்திரங்கள் கருந்துளையை மையமாக கொண்டு சுற்றுகையை ஆற்றுகின்றன. எனவே அச்சுற்றுகையை ஆழமாக ஆராய்வதன் மூலம் கருந்துளையின் அமைவிடம் மற்றும் பற்றி அறியப்படுகின்றது.

இன்னும் சில இடங்களை எடுத்து நோக்குவோமாயின் கருந்துளைகள் தமது நிகழ்வெல்லைக்கு வெளியே உள்ள நட்சத்திரங்களை ஈர்க்காது விடினும் நட்சத்திரங்களில் இருந்து பலவிதமான வாயுக்களை ஈர்க்கின்றன. இவ்வாறு ஈர்க்கப்படுகின்ற வாயுக்கள் கருந்துளையை வேகமாக சுற்றியபடியே உட்செல்லும் போது வெப்பநிலை அதிகரிப்பதன் காரணத்தால் கதிர்ப்புக்களை வெளிவிடுகின்றன. இக்கதிர்வீச்சுக்களை பூமியிலுள்ள விண்வெளி தொலைநோக்கிகள் மூலம் உணரமுடியும். அக்கதிர்வீச்சுகளை ஆராய்வதன் மூலமும் கருந்துளையின் அமைவிடம் அதன் தன்மை பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கருந்துளையிலிருந்து வெவ்வேறு தூரத்தில் பொருளொன்றின் பாதைகளின் சாத்தியமான போக்கை கீழே காணலாம்.


தொடரும்...........

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...