Skip to main content

மாய ராஜ்ஜியம் 17

ஆய்வாளர்களின் கருத்துகள்

முதன் முதலாக ஒளியைக்கூடத்தப்பவிடாத அளவுக்கு வலுவான ஈர்ப்புசக்தி கொண்ட பொருள் பற்றிய எண்ணக்கருவை 1783 இல் பிரித்தானிய வானியலாளர் JOHN MITCHEL வெளியிட்டார். இதே கருத்தையொத்த முடிவை 1795 இல் பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த பௌதிகவியலாளர் PIERRE SIMON LAPLACE ம் வெளியிட்டார்.

ஆனாலும் தற்போது பலராலும் புரிந்துகொள்ளப்பட்டதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான கருந்துளை பற்றிய தெளிவான விளக்கமானது 1916 ம் ஆண்டில் ALBERT EISTEIN அவர்களால் வெளியிடப்பட்ட பொதுச்சார்புக் கோட்டில் () இருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டது.



அக்கொள்கையின் படி மிகப்பெரிய திணிவானது மிகச்சிறிய வெளியில் இருக்கும் போது சூழவுள்ள வெளியானது () உட்புறமாக மையத்தை நோக்கி வளைந்து அதனுள் இருக்கும் எந்த பொருளும் கதிர்வீச்சுகளும் வெளியே செல்லமுடியாத படி தடுத்துவிடும். இத்தத்துவமானது கரும்பொருளானது மையத்தில் புள்ளி போன்ற சிறப்பு ஒருமையுடன் () கூடிய வெறுமையான வெளியாகவும் அதன் விளிம்பில் உள்ள நிகழ்வெல்லையாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சக்திப்பொறித்தாக்கங்களின் படி கருந்துளைகளானவை தம்முள்ளே அகப்பட்டவற்றை அப்படியே வைத்திருக்காமல் ஒருவித வெப்பசக்தி வடிவில் கசியவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

இக்கெள்கையில் குறிப்பிட்டவற்றை மேலும் விரிவாக நோக்குவோமானால் நேரத்தின் சாய்வு பற்றியும் கூறப்பட்டுள்ளது. அதன் படி கருந்துளையின் மையத்தில் திணிவு குவிந்திருக்கும் பகுதிக்கும் மற்றொரு பொருளுக்கும் இடையிலான தூரம் குறைவடைந்து செல்லும் போது நேரத்தில் சாய்வு அதிகரிக்கும். அதாவது நேரத்தின் போக்கானது மாறுபட்டுக்கொண்டிருக்கும். குறிப்பிட்ட அவ்விடத்திற்கும் தூரத்திலுள்ள வேறு ஓர் இடத்திற்கும் இடையிலான நேரம் மிகவும் வித்தியாசமானதாகவும் இருக்கும்.

பிரபஞ்சத்தில் நிலவும் நிலையற்ற காலம்

நாம் வாழும் இப்பூமியை எடுத்துக்கொண்டோமானால் நாம் முப்பரிமாண அடிப்படையிலேயே இயங்கிவருகிறோம். எமது சிந்தனை, நோக்கு, செயல் என்று அனைத்துவிதமான செயற்பாடுகளும் இந்த முப்பரிமாணத்தை அடிப்படையாக்க்கொண்டே அமைகின்றன. அதைத்தாண்டி வேறு பரிமாணங்களைப்பற்றி சிந்திப்பதற்கும் நடைமுறை வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் விடயங்களை அதன் அடிப்படையில் திட்டமிடுவதற்கும் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கும் நாம் முனைவதில்லை. அதற்கு நமது உடல் மற்றும் உள்ளத்தின் இசைவாக்கம் போதாமையும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும் நாம் அறிந்த நேரம் என்கிற பரிமாணம் ஏனைய 3 பரிமாணங்களுடன் தொடர்புபடுவதை நாம் அறிந்திருக்க வேண்டும். எனது இவ்வாய்வின் முடிவினை ஏற்றுக்கொள்வதற்குரிய அளவில் இதைப்பற்றிய விளக்கத்தை அளிக்கலாம் என எண்ணுகிறேன்.



நாம் வாழ்கின்ற இப்பிரபஞ்சத்தை எடுத்துக்கொண்டோமானால் அதன் ஒவ்வொரு பகுதியிலும் காலம் சமமாக இருக்காது. நாம் இருக்கின்ற இந்த ஞாயிற்றுத்தொகுதியினை ஒரு சிறிய பகுதியாக நினைத்து மிகவும் தூரத்தில் உள்ள ஒரு பிரதேசத்தை நினைத்து கொள்வோமாயின் அப்பிரதேசமானது காலத்தின் அடிப்படையில் மிகவும் வேறுபட்ட பிரதேசமாக இருக்கலாம். இவ்வாறு நாம் வழ்கின்ற இந்த அண்டத்திற்கென்று ஒரு பொதுநேரம் இல்லை.

பிரபஞ்சத்தின் ஏராளமான வெவ்வேறு புள்ளிகளை எடுத்துக்கொண்டோமானால் அவை ஒவ்வொன்றும் நேரத்தில் வேறுபட்டவையாக இருக்கும். அதேவேளை அப்புள்ளிகளுக்கிடையிலான தூரவேறுபாடு மிக மிக அதிகமாக இருக்கும். அவை பல நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஒளியாண்டுகளாக இருக்கவல்லது. அவ்விடங்களை அடைவது என்றால் எமது நேரத்தை அவைகளுக்கு சமமான நேரமாக மாற்றுவதொன்றே உசிதமான வழியாகும். இதன்மூலமாக அதற்கான தூரம் வெகுவாக குறைக்கப்பட்டு விடும். இதன்மூலமாக இவ்விடங்களை மிகவும் எளிதாக அடைந்துவிடமுடியும்.

கருந்துளை மற்றும் நிலையற்ற காலம் தொடர்பாக தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறேன். அடுத்து எனது ஆய்விற்கான முடிவை வழங்கலாம் என எண்ணுகிறேன்.

தொடரும்.......

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...