Skip to main content

மாய ராஜ்ஜியம் 17

ஆய்வாளர்களின் கருத்துகள்

முதன் முதலாக ஒளியைக்கூடத்தப்பவிடாத அளவுக்கு வலுவான ஈர்ப்புசக்தி கொண்ட பொருள் பற்றிய எண்ணக்கருவை 1783 இல் பிரித்தானிய வானியலாளர் JOHN MITCHEL வெளியிட்டார். இதே கருத்தையொத்த முடிவை 1795 இல் பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த பௌதிகவியலாளர் PIERRE SIMON LAPLACE ம் வெளியிட்டார்.

ஆனாலும் தற்போது பலராலும் புரிந்துகொள்ளப்பட்டதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான கருந்துளை பற்றிய தெளிவான விளக்கமானது 1916 ம் ஆண்டில் ALBERT EISTEIN அவர்களால் வெளியிடப்பட்ட பொதுச்சார்புக் கோட்டில் () இருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டது.



அக்கொள்கையின் படி மிகப்பெரிய திணிவானது மிகச்சிறிய வெளியில் இருக்கும் போது சூழவுள்ள வெளியானது () உட்புறமாக மையத்தை நோக்கி வளைந்து அதனுள் இருக்கும் எந்த பொருளும் கதிர்வீச்சுகளும் வெளியே செல்லமுடியாத படி தடுத்துவிடும். இத்தத்துவமானது கரும்பொருளானது மையத்தில் புள்ளி போன்ற சிறப்பு ஒருமையுடன் () கூடிய வெறுமையான வெளியாகவும் அதன் விளிம்பில் உள்ள நிகழ்வெல்லையாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சக்திப்பொறித்தாக்கங்களின் படி கருந்துளைகளானவை தம்முள்ளே அகப்பட்டவற்றை அப்படியே வைத்திருக்காமல் ஒருவித வெப்பசக்தி வடிவில் கசியவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

இக்கெள்கையில் குறிப்பிட்டவற்றை மேலும் விரிவாக நோக்குவோமானால் நேரத்தின் சாய்வு பற்றியும் கூறப்பட்டுள்ளது. அதன் படி கருந்துளையின் மையத்தில் திணிவு குவிந்திருக்கும் பகுதிக்கும் மற்றொரு பொருளுக்கும் இடையிலான தூரம் குறைவடைந்து செல்லும் போது நேரத்தில் சாய்வு அதிகரிக்கும். அதாவது நேரத்தின் போக்கானது மாறுபட்டுக்கொண்டிருக்கும். குறிப்பிட்ட அவ்விடத்திற்கும் தூரத்திலுள்ள வேறு ஓர் இடத்திற்கும் இடையிலான நேரம் மிகவும் வித்தியாசமானதாகவும் இருக்கும்.

பிரபஞ்சத்தில் நிலவும் நிலையற்ற காலம்

நாம் வாழும் இப்பூமியை எடுத்துக்கொண்டோமானால் நாம் முப்பரிமாண அடிப்படையிலேயே இயங்கிவருகிறோம். எமது சிந்தனை, நோக்கு, செயல் என்று அனைத்துவிதமான செயற்பாடுகளும் இந்த முப்பரிமாணத்தை அடிப்படையாக்க்கொண்டே அமைகின்றன. அதைத்தாண்டி வேறு பரிமாணங்களைப்பற்றி சிந்திப்பதற்கும் நடைமுறை வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் விடயங்களை அதன் அடிப்படையில் திட்டமிடுவதற்கும் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கும் நாம் முனைவதில்லை. அதற்கு நமது உடல் மற்றும் உள்ளத்தின் இசைவாக்கம் போதாமையும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும் நாம் அறிந்த நேரம் என்கிற பரிமாணம் ஏனைய 3 பரிமாணங்களுடன் தொடர்புபடுவதை நாம் அறிந்திருக்க வேண்டும். எனது இவ்வாய்வின் முடிவினை ஏற்றுக்கொள்வதற்குரிய அளவில் இதைப்பற்றிய விளக்கத்தை அளிக்கலாம் என எண்ணுகிறேன்.



நாம் வாழ்கின்ற இப்பிரபஞ்சத்தை எடுத்துக்கொண்டோமானால் அதன் ஒவ்வொரு பகுதியிலும் காலம் சமமாக இருக்காது. நாம் இருக்கின்ற இந்த ஞாயிற்றுத்தொகுதியினை ஒரு சிறிய பகுதியாக நினைத்து மிகவும் தூரத்தில் உள்ள ஒரு பிரதேசத்தை நினைத்து கொள்வோமாயின் அப்பிரதேசமானது காலத்தின் அடிப்படையில் மிகவும் வேறுபட்ட பிரதேசமாக இருக்கலாம். இவ்வாறு நாம் வழ்கின்ற இந்த அண்டத்திற்கென்று ஒரு பொதுநேரம் இல்லை.

பிரபஞ்சத்தின் ஏராளமான வெவ்வேறு புள்ளிகளை எடுத்துக்கொண்டோமானால் அவை ஒவ்வொன்றும் நேரத்தில் வேறுபட்டவையாக இருக்கும். அதேவேளை அப்புள்ளிகளுக்கிடையிலான தூரவேறுபாடு மிக மிக அதிகமாக இருக்கும். அவை பல நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஒளியாண்டுகளாக இருக்கவல்லது. அவ்விடங்களை அடைவது என்றால் எமது நேரத்தை அவைகளுக்கு சமமான நேரமாக மாற்றுவதொன்றே உசிதமான வழியாகும். இதன்மூலமாக அதற்கான தூரம் வெகுவாக குறைக்கப்பட்டு விடும். இதன்மூலமாக இவ்விடங்களை மிகவும் எளிதாக அடைந்துவிடமுடியும்.

கருந்துளை மற்றும் நிலையற்ற காலம் தொடர்பாக தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறேன். அடுத்து எனது ஆய்விற்கான முடிவை வழங்கலாம் என எண்ணுகிறேன்.

தொடரும்.......

Comments

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...