Skip to main content

பனாமா கால்வாய் 03

இவ்வாறு பனாமா செயற்கைக்கால்வாய் தோற்றத்திற்கான பல்வேறு ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 16ம் நூற்றாண்டில் இருந்து மேற்படி கால்வாய் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்படுவதும் பின்னர் தவிர்க்கமுடியாத காரணங்களால் அவை தடைப்பட்டுப்போவதும் வழமையான பல்லவியாகவே இருந்துவந்தது. 1876ம் ஆண்டும் ஓர் சர்வதேச நிறுவனம் உருவாக்கப்பட்டும் அதன் மூலமாக செயற்கை கால்வாய் அமைப்பது தொடர்பான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதுவும் ஈற்றில் நீர்மேல் எழுத்தானது தான் மிச்சம்.


அத்திலாந்திக் சமுத்திரத்தில் இருந்து பசுபிக் சமுத்திரத்திற்கு கரிபியன் கடலினூடாக பயணத்தினை மேற்கொள்ளும் போது நேரமும் பயணதூரமும் பெருமளவில் மிச்சப்படுகிறது என்பது உண்மை. உதாரணமாக சன்பிரான்சிஸ்கோ இலிருந்து நியூயோர்க் இற்கு செல்லும் போது கரிபியன் கடலினூடாக செல்வோமேயானால் சுமார் 18000 மைல் தூரம் மிச்சப்படுத்தப்படும்.

.இவ்வாறான காரணங்களினால் பனாமா கால்வாய் உருவாக்கம் பல்வேறு இடர்பாடுகளைக் கொண்டிருந்தாலும் அவை உருவாக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பினை பல்வேறு நாடுகளும் கொண்டிருந்தன.

அண்ணளவாக 1880ம் ஆண்டளவில் பிரான்ஸ் மேற்படி செயற்பாட்டில் ஈடுபடத்தொடங்கியது. ஆனால் இந்த நாட்டினது முன்னெடுப்புகள் மக்களிடத்திலும் சரி பல்வேறு இராஜ்ஜியங்களிலும் சரி ஒரு குறிப்பிட்டளவு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. காரணம் எகிப்தில் சுயேஸ் கால்வாய் கட்டமைப்பினை வெற்றிகரமாக்குவதற்கு முக்கிய காரணியாக அமைந்த Ferdinand Marie de Lesseps என்பவர் பிரான்ஸின் பனாமா கால்வாய் உருவாக்கத்திற்கு உள்வாங்கப்பட்டமை ஆகும். பத்து ஆண்டுகளின் முன்னர் உலகத்திலேயே மிக நீண்ட கால்வாயான சுயேஸ் கால்வாயினை வெற்றிகரமாக அமைத்தமையால் பனாமாவின் பௌதிக தோற்றப்பாடுகளை அடிப்படையாக கொண்டு கடல் மட்டத்திலான பனாமாக்கால்வாய் உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டிருந்தார். 74 வயதினை எட்டியிருந்தாலும் அவரது செயல்களோ அல்லது முயற்சிகளோ முதுமை அடையவில்லை. 1880ம் ஆண்டளவில் அவர் தனது இளைய மகனுடன் பனாமா கால்வாய் அமையவேண்டிய பிரதேசத்தை பார்வையிட்டு மேற்படி செயற்திட்டம் முடிவடைய எட்டு வருடங்களுக்கு மேல் செல்லும் எனவும் 658 மில்லியன் பிராங்க் செலவாகும் எனவும் தகவல்களை முன்வைத்து செயல்களில் இறங்கினார்.
அமெரிக்க அரசு கால்வாய் கட்டுவதற்கான ஆர்வத்தினையும் பல்வேறு வளங்களையும் கொண்டிருந்த காரணத்தினால் தாம் மேற்படி கால்வாய் கட்டுவதற்காக வரையப்பட்ட வரைபடங்கள் உள்ளிட்ட பல்வேறு வளங்களையும் அமெரிக்க அரசுக்கு சுமார் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பதற்கு பிரான்ஸ் அரசு முன்வந்தது. காரணம் மிகப்பாரியளவு பட்ஜெட்டை உள்ளடக்கியதான ஒரு செயற்திட்டமாக இது இருந்தது மட்டுமல்லாது ஆளணிப்பற்றாக்குறை, வேலையாட்களுக்கு ஏற்பட்ட நோய்கள், வேலையாட்கள் பலரினது இறப்பு மற்றும் கட்டுமானப்பணியில் ஏற்பட்ட பொருளாதார இறக்கம், வெற்றிகரமாக செயற்படுவதற்கு போதியளவு பணம் பெறப்படமுடியாமை என்று கூறிக்காண்டே போகலாம். இவ்வாறு பல்வேறு இன்னல்களுக்கு அப்பால் Ferdinand Marie de Lesseps இனால் முடியாது போகவே அமெரிக்க அரசிடம் கையளித்துவிடலாம் என்று எண்ணி கட்டுமானப்பணிகளை நிறுத்திகொண்டது பிரான்ஸ் அரசு.

பின்னர் அமெரிக்க அரசாங்கம் பனாமாவுடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டு பனாமா கால்வாய் செயற்திட்டத்தை ஆரம்பித்தனர். பனாமாவின் சுதந்திரம் மற்றும் 100 ஆண்டுகளுக்கு பனாமா கால்வாய் அரங்க (CANALZONE) வாடகை போன்றவற்றை மையமாகக்கொண்டு அந்த ஒப்பந்தம் அமைந்திருந்த்து. ஆரம்பகட்ட பணமாக சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர் அத்துடன் 250,000 அமெரிக்க டொலர் பணம் வருடாந்த வாடகைப்பணமாக அமைந்தது.

பனாமா கால்வாய் அமைப்பதில் பல்வேறு நாடுகள் முயன்று அதில் பல்வேறு இன்னல்கள் ஏற்படவே அவர்களது செயற்பாடுகள் கைவிடப்பட்டமை தொடர்பான ஒரு வரலாற்றை 3 பாகங்களில் வெளியிட முடிந்தது. அடுத்த பாகத்தில் இருந்து பனாமாய் கால்வாய் கட்டுமானப்பணிகள் பற்றிய சுவாரசியமான தொகுப்பை காணலாம்……….

Comments

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...