Skip to main content

பனாமா கால்வாய் 03

இவ்வாறு பனாமா செயற்கைக்கால்வாய் தோற்றத்திற்கான பல்வேறு ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 16ம் நூற்றாண்டில் இருந்து மேற்படி கால்வாய் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்படுவதும் பின்னர் தவிர்க்கமுடியாத காரணங்களால் அவை தடைப்பட்டுப்போவதும் வழமையான பல்லவியாகவே இருந்துவந்தது. 1876ம் ஆண்டும் ஓர் சர்வதேச நிறுவனம் உருவாக்கப்பட்டும் அதன் மூலமாக செயற்கை கால்வாய் அமைப்பது தொடர்பான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதுவும் ஈற்றில் நீர்மேல் எழுத்தானது தான் மிச்சம்.


அத்திலாந்திக் சமுத்திரத்தில் இருந்து பசுபிக் சமுத்திரத்திற்கு கரிபியன் கடலினூடாக பயணத்தினை மேற்கொள்ளும் போது நேரமும் பயணதூரமும் பெருமளவில் மிச்சப்படுகிறது என்பது உண்மை. உதாரணமாக சன்பிரான்சிஸ்கோ இலிருந்து நியூயோர்க் இற்கு செல்லும் போது கரிபியன் கடலினூடாக செல்வோமேயானால் சுமார் 18000 மைல் தூரம் மிச்சப்படுத்தப்படும்.

.இவ்வாறான காரணங்களினால் பனாமா கால்வாய் உருவாக்கம் பல்வேறு இடர்பாடுகளைக் கொண்டிருந்தாலும் அவை உருவாக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பினை பல்வேறு நாடுகளும் கொண்டிருந்தன.

அண்ணளவாக 1880ம் ஆண்டளவில் பிரான்ஸ் மேற்படி செயற்பாட்டில் ஈடுபடத்தொடங்கியது. ஆனால் இந்த நாட்டினது முன்னெடுப்புகள் மக்களிடத்திலும் சரி பல்வேறு இராஜ்ஜியங்களிலும் சரி ஒரு குறிப்பிட்டளவு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. காரணம் எகிப்தில் சுயேஸ் கால்வாய் கட்டமைப்பினை வெற்றிகரமாக்குவதற்கு முக்கிய காரணியாக அமைந்த Ferdinand Marie de Lesseps என்பவர் பிரான்ஸின் பனாமா கால்வாய் உருவாக்கத்திற்கு உள்வாங்கப்பட்டமை ஆகும். பத்து ஆண்டுகளின் முன்னர் உலகத்திலேயே மிக நீண்ட கால்வாயான சுயேஸ் கால்வாயினை வெற்றிகரமாக அமைத்தமையால் பனாமாவின் பௌதிக தோற்றப்பாடுகளை அடிப்படையாக கொண்டு கடல் மட்டத்திலான பனாமாக்கால்வாய் உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டிருந்தார். 74 வயதினை எட்டியிருந்தாலும் அவரது செயல்களோ அல்லது முயற்சிகளோ முதுமை அடையவில்லை. 1880ம் ஆண்டளவில் அவர் தனது இளைய மகனுடன் பனாமா கால்வாய் அமையவேண்டிய பிரதேசத்தை பார்வையிட்டு மேற்படி செயற்திட்டம் முடிவடைய எட்டு வருடங்களுக்கு மேல் செல்லும் எனவும் 658 மில்லியன் பிராங்க் செலவாகும் எனவும் தகவல்களை முன்வைத்து செயல்களில் இறங்கினார்.
அமெரிக்க அரசு கால்வாய் கட்டுவதற்கான ஆர்வத்தினையும் பல்வேறு வளங்களையும் கொண்டிருந்த காரணத்தினால் தாம் மேற்படி கால்வாய் கட்டுவதற்காக வரையப்பட்ட வரைபடங்கள் உள்ளிட்ட பல்வேறு வளங்களையும் அமெரிக்க அரசுக்கு சுமார் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பதற்கு பிரான்ஸ் அரசு முன்வந்தது. காரணம் மிகப்பாரியளவு பட்ஜெட்டை உள்ளடக்கியதான ஒரு செயற்திட்டமாக இது இருந்தது மட்டுமல்லாது ஆளணிப்பற்றாக்குறை, வேலையாட்களுக்கு ஏற்பட்ட நோய்கள், வேலையாட்கள் பலரினது இறப்பு மற்றும் கட்டுமானப்பணியில் ஏற்பட்ட பொருளாதார இறக்கம், வெற்றிகரமாக செயற்படுவதற்கு போதியளவு பணம் பெறப்படமுடியாமை என்று கூறிக்காண்டே போகலாம். இவ்வாறு பல்வேறு இன்னல்களுக்கு அப்பால் Ferdinand Marie de Lesseps இனால் முடியாது போகவே அமெரிக்க அரசிடம் கையளித்துவிடலாம் என்று எண்ணி கட்டுமானப்பணிகளை நிறுத்திகொண்டது பிரான்ஸ் அரசு.

பின்னர் அமெரிக்க அரசாங்கம் பனாமாவுடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டு பனாமா கால்வாய் செயற்திட்டத்தை ஆரம்பித்தனர். பனாமாவின் சுதந்திரம் மற்றும் 100 ஆண்டுகளுக்கு பனாமா கால்வாய் அரங்க (CANALZONE) வாடகை போன்றவற்றை மையமாகக்கொண்டு அந்த ஒப்பந்தம் அமைந்திருந்த்து. ஆரம்பகட்ட பணமாக சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர் அத்துடன் 250,000 அமெரிக்க டொலர் பணம் வருடாந்த வாடகைப்பணமாக அமைந்தது.

பனாமா கால்வாய் அமைப்பதில் பல்வேறு நாடுகள் முயன்று அதில் பல்வேறு இன்னல்கள் ஏற்படவே அவர்களது செயற்பாடுகள் கைவிடப்பட்டமை தொடர்பான ஒரு வரலாற்றை 3 பாகங்களில் வெளியிட முடிந்தது. அடுத்த பாகத்தில் இருந்து பனாமாய் கால்வாய் கட்டுமானப்பணிகள் பற்றிய சுவாரசியமான தொகுப்பை காணலாம்……….

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...