Skip to main content

பனாமா கால்வாய் 02

வட அமெரிக்கா கண்டத்தையும் தென் அமெரிக்கா கண்டத்தையும் இணைக்கும் வகையில் அதன் பௌதிக கட்டமைப்பைக் கொண்ட பனாமா நாட்டில் பெருமளவு வருமானம் வரக்கூடிய வழி இந்த பனாமா கால்வாய் மூலம் தான். இவ்வாறு கடல் சார் வர்த்தகத்தில் தவிர்க்கமுடியாத ஒரு பாதையாக விளங்கிவரும் பானாமாய் கால்வாயின் தோற்றத்தை நோக்கும் பொழுது அது பண்டைய கால வரலாற்றுச்சுவடுகளை ஆராய வைக்கிறது.

16ம் நூற்றாண்டளவில் பெரு, ஈக்குவேடார் மற்றும் ஆசிய நாடுகள் என்பவற்றில் இருந்து ஸ்பெய்ன் நாட்டுக்கான வர்த்தகத்தில் பல்வேறு பொருட்களை இடமாற்றம் செய்வது மிகவும் கடினமானதொன்றாக இருந்து வந்தது. இவ்வாறான கடினமான நீண்ட வர்த்தக பாதையினை எவ்வாறு இலகுவாக்கலாம் என்று அக்கால தொழில்நுட்ப வல்லுனர்கள் யோசித்து ஈற்றில் பனாமா நாட்டிலிந்து இருந்து ஒரு சிறிய பகுதியை அகற்றுவதன் மூலம் மேற்படி வர்த்தக செயற்பாடுகளை இலகுவாக்கலாம் என்று 1524ம் ஆண்டளவில் தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி திட்டம் முழு அங்கீகாரத்தையும் பெறவே பனாமாவின் ஊடாக செயற்கையாக ஒரு கால்வாயினை அமைக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டு அதற்கான வரைபடமும் 1529ம் ஆண்டளவில் தயாரிக்கபட்டது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு இராஜ்ஜியங்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்களால் மேற்படி செயற்திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

பின்னர் 1534ம் ஆண்டளவில் ஸ்பானிய அரசாங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ள பனாமா கால்வாயின் அமைப்பிற்கு கிட்டதான வரைபடத்தை தயார்செய்தது. காலங்கள் செல்லச்செல்ல ஆட்சிமாற்றங்களும் மாறிக்கொண்டிருந்தன. இதனால் பனாமாக்கால்வாயின் அமைப்பு பற்றி காலத்திற்று காலம் பல்வேறு வரைபடங்கள் முன்வைக்கப்பட்டவையே தவிர அவை சார்பான வேறு எந்தவொரு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. இப்படியே செல்லச்செல்ல நாளடைவில் ஸ்பானிய அரசாங்கம் பனாமா கால்வாய் அமைப்பது தொடர்பான செயற்பாடுகளில் அதிக ஆர்வத்தினை காட்டாது கைவிடும் எண்ணத்தில் இருந்தது.

பின்னர் 19ம் நூற்றாண்டின் ஆரம்பக்காலகட்டத்தில் ஜேர்மனி நாட்டு விஞ்ஞானி Alexander von Humboldt இனது புத்தகங்கள் பனாமா கால்வாய் அமைப்பது தொடர்பான ஆக்கங்களை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட பனாமா கால்வாய் உருவாக்கத்திற்கு ஒரு காற்புள்ளியை (comma) வழங்கியது. இதன் உந்துசக்தியின் அடிப்படையில் 1819ம் ஆண்டளவில் ஸ்பானிய அரசாங்கம் மீண்டும் கால்வாய் அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளில் இறங்கியது. இந்த தடவையில் வரைபடம் வரையும் செயற்பாடு மட்டுமன்றி இதற்கென தனிக்குழு ஒன்றை உருவாக்கியிருந்தது.

பின்னர் 1848ம் ஆண்டளவில் கலிபோனியாவில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்படவே அமெரிக்க அரசாங்கமும் இதில் தலையிட ஆரம்பித்தது. 1850 இலிருந்து 1875ம் ஆண்டளவு வரை பல்வேறு செயற்திட்டங்கள் தர்க்கரீதியாக மேற்கொள்ளப்பட்டு பின்னர் ஈற்றில் செயற்பாட்டு ரீதியாக பனாமா கால்வாய் அமைப்பது தொடர்பாக இரு சிறந்த வரைபடங்கள் தெரிவுசெய்யப்பட்டன. ஒன்று பனாமாவின் ஊடாகவும் மற்றையது நிக்கறகுவாவின் ஊடாகவும் கால்வாய் ஒன்று அமையத்தக்க விதத்தில் இருந்தது.

தொடரும்.........

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...