Skip to main content

Visual Basic - ஒரு பார்வை (1)



வாசகப்பெருமக்களுடன் ஏறத்தாழ இரு வருடங்கள் பயணித்துக்கொண்டிருக்கும் உண்மையின் பக்கத்தின் மூலமாக அடுத்த சில மாதங்களுக்கு விஷுவல் பேசிக் (Visual Basic) என்னும் நிரலாக்க மொழி பற்றி நான் அறிந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.

பொதுவாக இந்த நிரலாக்க மொழியில் பயன்படுத்தப்படும் முக்கிய சொற்களுக்கு (Key Words) தமிழ் அர்த்தம் கண்டு அவற்றை வழங்குவது பொருத்தமில்லாத செயன்முறை அல்லாததால் நிரலாக்கத்திற்கு அவசியமான சொற்களை ஆங்கிலத்தில் வழங்கலாம் என எண்ணுகிறேன்.
நேரடியாக Visual Basic கற்கைகளினுள் செல்வதற்கு முன்பாக கணினி வரலாற்றில் நிரலாக்கம் பற்றிய சிறிய அறிமுகத்துடன் உட்செல்லலாம் என எண்ணுகிறேன்.
பொதுவாக கணினி மொழிகள் என்பவை சில விதிமுறைகளுக்கு வரையறுக்கப்பட்டு சில நியமச்சொற்களுடன் உருவாக்கப்படுகிறது. இதுவும் ஒரு வகையில் மென்பொருள் தான். ஆனால் பல்வேறுபட்ட அறிவுறுத்தல்களுக்கேற்றவாறு செயற்பட வேண்டும் என்பதைக்குறித்து நிற்கக்கூடிய மென்பொருள் என்று கூறலாம்.
1957 ம் ஆண்டில் COBOL நிரலாக்க மொழி உருவாக்கப்பட்டதில் இருந்து காலத்திற்கு காலம் பல்வேறுபட்ட வளர்ச்சிகளுடன் ஒவ்வொரு மொழிகளும் உதயமாகத்தொடங்கின. அந்த வகையில் VisualBasic , 1991 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.
இதில் Basic  என்ற சொற்பதம் மொழி அபிவிருத்தியை மையமாகக்கொண்டு 1960களிலேயே தோற்றம் பெற்றது. உயர்நிலை நிரலாக்க மொழிகளை கொண்ட குடும்பமாக இதனை கூறலாம். அதற்கான விரிவாக்கம்
B – Beginner’s
A – All-Purpose
S – Symbolic
I – Instruction
C – Code
இதன் அடிப்படையில் ஆரம்பகாலகட்டத்தில் உருவாக்கப்பட்ட மொழிகள் விஞ்ஞானிகளாலும் கணித அறிவில் மேம்பட்டவர்களாலும் மாத்திரம் பயன்படுத்தப்படக்கூடிய நிலை Micro Computers இன் வருகை மூலம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்காணப்பட்டது.
Micro Computer இற்கான முதலாவது Basic Language, Bill Gates மற்றும் Paul Allen என்பவர்களால் எழுதப்பட்டது. இவற்றிலும் காலப்போக்கில் பல்வேறுபட்ட மாற்றங்கள் மூலம் 1991ம் ஆண்டளவில் Visual Basic அறிமுகப்படுத்தப்பட்டது.
அத்துடன் Visual Basic இல் GUI அமைப்பு காணப்படுவதால் மற்றைய நிரலாக்க மொழிகளை விட இதனை கையாளுவது மிகவும் இலகுவாக இருக்கும்.
அறிமுகத்திற்கு இவ்வளவு தகவல்களும் போதும் என எண்ணுகிறேன். அத்துடன் இவை சார்ந்ததான மேலதிகமாக தகவல் அல்லது தெளிவின்மைகள் காணப்படுமிடத்து அவற்றை  விமர்சனம் மூலமாக கேட்கலாம்.

இப்போது கற்கைகளினுள் செல்ல்லாம் என எண்ணுகிறேன்.

Visual Basic இனை நீங்கள் Start  à All Programs à Microsoft Visual Basic 6.0 என சென்று குறித்த மென்பொருளினை திறக்கும் பொழுது

மேற்கண்டவாறு ஒரு Window வில் Standard EXE என்பதை தெரிவுசெய்து அதனை Open செய்யவும்
Open பண்ணியவுடன் மேற்கண்டது போன்ற ஒரு Window வினை நீங்கள் காணலாம்.
பொதுவாக Visual Basic இல் நாம் குறித்த Coding களை எழுதி வடிவமைத்தவுடன் அவை எவ்வாறு வேலை செய்கிறது என்பதை அறிய கீழ்க்கண்டவாறு செல்லலாம்.

மேலே காட்டப்பட்டுள்ள படத்தில் சிவப்பு மையினால் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ள Start Button இனை அழுத்தும் போது 
இன்னொரு பகுதிக்கு தாங்கள் அழைத்து செல்லப்பட்டு மேற்கண்ட அமைப்புள்ள ஒரு window வினை அவதானிக்கக்கூடியதாக இருக்கும். 
பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு 
Stop Button இனை அழுத்துவதன் மூலம் திரும்பிடலாம். 
இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் Start Button இனை அழுத்தும் போது நாம் எழுதிய Coding களில் ஏதேனும் பிழை காணப்படின் மேற்படி Programme வெற்றிகரமாக செயல் படுத்தப்படாது. (Compile ஆகாது)

இவை சம்பந்தமாக தெளிவின்மைகள் காணப்படுமிடத்து விமர்சனங்கள் வாயிலாக வினாவலாம்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன். மீண்டும் சந்திப்போம்.

பார்வைகள் தொடரும்.....



Comments

  1. பகிர்விற்கு நன்றி...வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  2. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் நண்பரே...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...