Skip to main content

விழிநிலை விம்பங்கள்...


இருண்ட பூமி ஒவ்வொருநாளும் பிறக்கிறது. கதிரவன் கதிர்கள் ஒவ்வொரு நாளையும் பசுமையாக்குகின்றன. சுட்டெரிக்கவும் தவறுவதில்லை. வேற்றுலகில் பயணிக்கும் ஒவ்வொரு மனிதனும் கனவெனும் வாகனம் விட்டு இறங்கி பூவுலகை பார்க்கும் கோணங்கள் எத்தனை.

ஒருவனுக்கு வெறுப்பாக இருக்கின்ற உலகம் இன்னொருவனுக்கு இனிமையாக இருக்கிறது. இன்னொருவனுக்கு விளையாட்டாக இருக்கிறது. மற்றொருவனுக்கு சூனியமாக இருக்கிறது

ஒவ்வொரு மனிதனும் இறைநிலைக்குரிய சக்திகளை அடையக்கூடிய உள்ளார்ந்த ஆற்றல் கொண்டவன் என்று ஆன்மீகவாதி  கூறுகிறான். ஆனால் ஒவ்வொரு நாளையும் கடக்கும் சராசரி மனிதன் எத்தனை சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த நாளின் சவாலை முறியடிக்கத்தவறும் உள்ளங்கள் எத்தனை.

சங்கடங்கள், சந்தேகங்கள், வெறுப்புகள், துரோகங்கள், விரோதங்கள் என்று எத்தனை பரிமாணங்களில் ஒரு உள்ளம் பயணிக்கவேண்டி இருக்கிறது. இத்தனைக்கும் கையில் கிடைக்கும் 1000 ருபாய் தாளினை இரண்டு நாட்களுக்கு மேல் பயன்படுத்த முடியாதது இன்றைய காலகட்டத்தின் துர்ப்பாக்கியநிலை தான். நாளுக்கு நாள் ஓய்விற்கும் சராசரி மனிதனிற்குமான தொடர்பும் அற்றவண்ணமே காலம் செல்கிறது

ஒரு பக்கம் வாங்கும் பொருள் மீதான விலையேற்றம் மறுபுறம் சம்பள உயர்வில்லாத வேலைகள். ஆசைகளை வைத்து வைத்து வாழ்வில் தேவைகளை அதிகரித்த உள்ளம் இன்று மறுபடியே தனது தேவைகளை குறைக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது. குறைத்து குறைத்து இயலாத கட்டம் ஒன்று வர பணவரவிற்கான வேறு வழிகளை நாடவேண்டிய நிர்பந்தம் குடும்பத்தலைவனின் பெரிய சுமையாகவே மாறுகிறது.

ஐந்து வருடங்களின் முன்னர் ஒரு மாதத்திற்கென வாங்கிய வீட்டுச்சாமான்களுக்கான பெறுமதியை கொண்டு இன்று ஒரு கிழமைக்கான தேவைகளையே பூர்த்தி செய்ய முடிகிறதா என்பது கேள்விக்குறி தான். கடந்த கால குழந்தைகள் கையில் இருந்த விளையாட்டுப்பொருட்கள் எல்லாம் இன்றைய குழந்தைகளுக்கு தெருவோரத்தில் இருந்து கண்ணாடி வழியே பார்க்கும் விழி நிலை விம்பங்கள் தான்

ஓரளவேனும் தப்பிப்பிழைக்கும் நடுத்தர வர்க்கம் ஒன்றையும் நாம் அவதானித்தேயாகவேண்டும். வெளிநாட்டு பணவரவுகளை நம்பியிருக்கும் நம்மவர்கள். நாட்டின் மேல்வர்க்கத்திலிருந்து கீழ்வர்க்கம் வரை இன்று ஓரளவேனும் தாக்குப்பிடிக்கிறதென்றால் கைகொடுப்பவன் வெளிநாட்டவனாக ஏதோ ஒரு நிலையில் இருக்கத்தான் செய்கிறான். 70களில் இருந்த நிலைக்கும் இன்றைய நிலைக்கும் எவ்வளவோ மாற்றங்கள். ஆச்சரிய நிலை தான்

சுயபொருளாதார நிலை விலக்கு கொடுக்கப்பட்டு பிறநாட்டுப்பொருட்களின் இறக்குமதி மீது சாதக முடிவுகள் எடுக்கப்பட்ட நிலை அப்போது மறுமலர்ச்சி போல கருதப்பட்டாலும் அது மெல்ல மெல்ல எம்மைத்தாக்கும் புற்றுநோயாக தான் மாறி வருவது காலம் செல்ல செல்லத்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் புரிகிறது. நாட்டில் காணப்படும் பெரும்பாலான வளங்கள் இன்று வினைத்திறனாக பயன்படுத்தப்படாது அவை சார்ந்த உற்பத்திகள் இறக்குமதி செய்யப்படும் நிலை இன்று வெகுவாகவே காணப்படுகிறது. உழுந்து, பயறு, தேன் போன்றவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுதல், ஒடியல் மாவிலான உணவு வகைகள் கோதுமை மாவின் இறக்குமதியினால் சென்ற காலங்களை விட இப்போதைய காலங்களில் குறைவாக பயன்படுத்தப்படுதல் உள்ளிட்ட பல இறக்குமதி செயன்முறைகளால் உள்ளூர் உற்பத்திகள் பாரிய பின்னடைவை சந்தித்த வண்ணமே இருக்கின்றன. மெல்ல மெல்ல சுய உற்பத்தியை நலிவடையச்செய்து வெளிநாட்டு உற்பத்தியின் தூதுவர்களாகவே மாறியிருக்கிற நிலை தான் இன்று நம்முள் பலரிடமும்

இன்றைய நிலையில் ஒரு மனிதன் புதிதாக தொழிலொன்றை ஆரம்பித்தாலும் அதை நாடக்கூடிய நிலையிலுள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து செல்கிறது. காரணம் தேவைகள் குறைக்கப்பட்ட வாழ்க்கை செயன்முறை தான் இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது. சிலருக்கு மூன்று வேளை உணவு இன்று இரண்டு வேளையாக்கப்படுகிறது. இன்னும் சிலருக்கு அதுவும் கேள்விக்குறியாகிறது. வீரம் நிறைந்த தேகங்கள் எல்லாம் இன்று மெல்ல மெல்ல சுருங்கித்தான் போகின்றன.

நாட்டையும் நாட்டு மண்ணையும் நேசிக்கும் எத்தனையோ உள்ளங்கள் இன்று பொருளாதார ரீதியில் மிகவும் சிதைந்தே போய் இருக்கின்ற.  
பெரும்பாலான பாவனைப்பொருட்கள் இறக்குமதியில் தங்கியிருக்க பொருட்கள் மீதான விலையேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துச்செல்ல பாவிக்கும் சாமானியனுக்கு வழங்கப்படும் சம்பளம் மாத்திரம் மாறவில்லை என்றால் அவனது உள்ளக்குமுறலும் நியாயமாகத்தான் தோன்றுகிறது. இந்த சாமானியன் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை இருக்கத்தான் செய்கிறான். அவனது வாழ்க்கைத்தரத்தை மாறாமல் செய்ய எத்தனிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை சவால் நிறைந்ததாகத் தான் இருக்கிறது. அது கீழ்மட்டத்தொழிலாளியாக இருக்கட்டும் அல்லது மேல்நிலை தொழிலாளியாக இருக்கட்டும்.

இன்று பட்டப்படிப்பிலும் எப்போது முடியும் என்ற சந்தேகத்துடனான கல்வியையும், விரிவுரையாளர்களின் பணிநிறுத்தத்தையும் மாறி மாறி காணும் பல்கலைக்கழக மாணவனுக்கு பட்டப்படிப்பின் பின்னரான தொழில்சார் வாழ்க்கையும் கூட கேள்விக்குறி தான்.

அரசாங்க வேலைகளை நாடும் வர்க்கத்தினரை விட தனியார் வேலைகளை நாடும் வர்க்கத்தினர் மெல்ல மெல்ல கூடுகின்றனர் என்பதையும் ஏற்க வேண்டித்தான் வருகிறது. அதிலும் வெளிநாட்டு வேலை என்ற நிலையும் பல இளைஞர்களால் வெகுவாக ஏற்றுக்கொள்ளப்படும் நிலையாகவே காணப்படுகிறது. இது இன்றைய சூழலின் அத்தியாவசியம் என்றாலும் அது மறுப்பதற்கில்லை.

மனைவிற்கு ஒரு சேலை வாங்கும் கணவனின் நிலை, தாய் தந்தைக்கு உடைகள் வாங்கும் மகனின் நிலை, பிள்ளைகளை மகிழ்விக்க பிரயத்தனப்படும் தந்தையின் நிலை என எல்லாமே இன்றைய சூழலில் ஒரு தவிப்பா போராட்டமாக காணப்படும் இந்த நிலையில் நாட்டின் உள்ளார்ந்த உற்பத்திகளை அதிகரிக்கக்கூடிய வழிகளை காணாது விட்டால் னிவரும் சமுதாயத்திற்கு வாழ்வின் பெரும்பகுதியும் விழிநிலை விம்பங்களாகவே காணப்படும்.

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...