Skip to main content

மாறிகள்( Variables) - (பார்வை -04)

அனைவருக்கும் வணக்கம் ..

நீண்ட கால இடைவெளியுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. சென்ற பதிப்பின் மூலம் Command Buttons மற்றும் Text Box என்பவற்றின் அறிமுக பயன்பாட்டினை சிறியதொரு முறைமை (System) மூலமாக பார்த்தோம். 

அதில் முதன்முறையாக Variable ஒன்றினை உருவாக்கியிருந்திருந்தேன்.

“Dim x As Integer”....

அடுத்த பகுதிகளினுள் செல்வதற்கு முன்னர் Variables பற்றிய அறிமுகத்தையும் பார்த்துவிட்டு செல்லலாம்.

பொதுவாக எங்கள் அனைவருக்கும் பெயர் உண்டு. பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஒரு பெயரினை கொண்டு காணப்படுவதால் தான் அவர் மற்றவர்களால் இலகுவாக இனங்காணப்படுகிறார். அதே போல நாம் கணினியினுள் பதிவு செய்யும் குறிப்பிட்ட தரவுகளையும் தற்காலிக அல்லது நிரந்தர தேவையினை நோக்காக கொண்டு நினைவகத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு பெயர் வைத்து அந்த பிரதேசத்தில் மேற்படி தரவுகளை சேமிப்போம். அவ்வாறு பெயர் வைக்கப்பட்ட பகுதிகள் தான் Variables. Variable என்பது நினைவகத்தில் (Memory) காணப்படக்கூடிய ஒரு சிறிய பகுதியினை வரையறுக்கலாம். (Small Section in the memory).

பொதுவாக நூலகசாலைகளில் அங்கத்தவர் அட்டைகளை சேமித்து வைப்பதற்கு பயன்படுத்தப்படும் அமைப்பு மற்றும் லாச்சிகள் போன்றவற்றை நோக்கும் போது ஒவ்வொரு கட்டத்தினுள்ளும் வேண்டிய பொருட்களை வைத்துவிட்டு எவை சம்மந்தமான பொருட்களை வைத்திருக்கிறோம் என்று ஒவ்வொரு லாச்சியின் வெளிப்பகுதியிலும் குறித்து வைத்திருப்போம். அப்படி குறித்து வைத்தால் தான் பிறிதொரு நேரத்தில் அனைத்து லாச்சிகளையும் திறந்து பார்க்காது குறிப்பிட்ட ஒரு லாச்சியினை திறந்து பார்த்து தேவைப்படும் பொருளினை எடுத்துவிடலாம். 

இதே செயன்முறை தான் Variable உருவாக்கத்திலும் உள்ளது. குறித்த பெயர் ஒன்றால் அடையாளம் காணப்பட்ட நினைவகத்தின் ஒரு பகுதியில் குறிப்பிட்ட தரவுகளை அங்கே பதிவு செய்கிறோம். தேவைப்படும் நேரத்தில் இட்ட பெயரினை அழைப்பதன் மூலம் குறித்த நினைவகப்பகுதியினுள் காணப்படும் தரவுகளை மீண்டும் செயன்முறைக்குள் ஈடுபடுத்துகிறோம். 


Variable பற்றிய அடிப்படை எண்ணக்கரு இது தான்.

பொதுவாக ஒரு Variable இற்கு பெயர் ஒன்றை வைக்கும் போது அதற்கு சில வரையறைகள் உண்டு...

1. ஆங்கில எழுத்தொன்றுடன் ஆரம்பிக்கப்படல் வேண்டும்
2. இடைவெளியினை கொண்டு காணப்படக்கூடாது.
3.ஏற்கனவே VB இல் காணப்படக்கூடிய முக்கிய வார்த்தைகளை(Key Words) பயன்படுத்தக்கூடாது.
4.மற்றும் பெரும்பாலான விசேட குறியீடுகளை இடுதல் கூடாது.. (%,&,!,#...)

இவ்வாறு குறிப்பிட்ட சில வரையறைகளுக்கு உட்பட்ட வண்ணம் Variable இற்கு பெயர் வைக்கவேண்டும்.

அடுத்ததாக Visual Basic இல் காணப்படக்கூடிய அனைத்து தரவு வகையையும்(Data Type) பார்ப்பதற்கு பதிலாக தற்போது அவசியமானவற்றை மாத்திரம் நோக்கலாம். காலப்போக்கில் ஒவ்வொரு வகையான முறைமைகளை(System) உருவாக்கும்போது மற்றையவற்றின் அறிமுகங்களை (Introduction) பார்க்கலாம். 

பொதுவாக String , Integer என்கிற இரு Data Types ம் அடிக்கடி பாவிக்க வேண்டி வரும்.

String - பொதுவாக எழுத்துக்களை அல்லது சொற்களை குறிப்பிடுவதற்கு இந்த Data Type இனை பயன்படுத்துவோம். ("a","b","Hello",....)

Integer - பொதுவாக முழு (தசமம் அல்லாத) இலக்கங்களை குறிப்பதற்கு இதனை பயன்படுத்தலாம். இங்கு அனைத்து முழு எண்களையும் பாவிக்க முடியாது. -32768 இலிருந்து 32767 வரையிலான முழு எண்களை int என்கிற Data Type மூலமாக குறிப்பிட முடியும்.

அடுத்ததாக இவ்விரு Data Type களையும் நிரலாக்க குறியீட்டுத்தொகுதியினுள் எவ்வாறு அறிமுகப்படுத்துவது என்று பார்க்கலாம். (Declaring).

இப்போது முன்னைய பதிவில் குறிப்பிடப்பட்ட “Dim x As Integer” இனை பார்க்கலாம்.

இதன் அர்த்தம் “ x எனும் பெயர்கொண்டு “Integer” Data Type இல் ஒரு Variable ஐ அறிமுகப்படுத்து” என்பதாகும். 

இதேபோல "Dim Myname As String" என்றால், “Myname என்ற பெயரினை கொண்டதாக “String” Data Type இல் ஒரு Variable ஐ  உருவாக்கு” என்பதாகும்.


அடுத்த பதிப்பின் மூலம் CheckBox மற்றும் Option Button என்பவற்றின் பிரயோகத்தை பார்க்கலாம்.

பார்வைகள் தொடரும்.....

Comments

Post a Comment

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...