Skip to main content

மனிதனும் வெற்றியும் (விம்பம் 02)


சமூகமும் மனிதனும்

ஆறறிவு கொண்டு அற்புத படைப்பான பூமி தனில் வலம் வரும் மனிதன் தனது ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு மூலம் அதனை பயன்படுத்தும் தன்மையைப்பொறுத்து அவன் சமூகத்தில் இடம்பிடிக்கம் நிலையானது மாற்றமடைந்து செல்கிறது.
ஒரு மனிதனின் உன்னத நிலையானது கோபம் பொறாமை விரோதம் துரோகம்சந்தேகம் அலட்சியப்போக்கு தற்பெருமை புரிந்துணர்வின்மை சகிப்புத்தன்மை அற்ற நிலை போன்ற காரணிகளால் தகர்க்கப்பட்டு மிகவும் கீழ்த்தரமான நிலையை அடைகிறான். அவன் பல்வேறு பிரச்சினைகளுள் சிக்குவது மட்டுமல்லாது பல்வேறு பிரச்சினைகளின் தோற்றத்திற்கும் விதையாகிறான்.
இவ்வாறான நிலையில் மேற்குறிப்பிட்ட பண்புகளை கொண்ட மனிதன் ஒருவன் தன் கல்வி மூலம் உயர்ந்த நிலையினை அடையும் போது அவன் வாழும் சமூகத்தின் சமநிலை கெடுகிறது. அநீதிகள் அரங்கேற காரணமாகிறது. இதுவே பல்வேறு பிரச்சினைகளின் ஆணிவேராக அமைகிறது.
ஆரம்பத்தில் சமூக பிரச்சினையாக தோற்றம் பெறுவது இவ்வாறான பல்வேறு மனிதர்களின் பிரவேசத்தால் தீவளாவிய பிரச்சினையாகவோ அல்லது சர்வதேச பிரச்சினையாகவோ உருவெடுக்கின்றன. அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் நீர்ப்பிரச்சினையில் இருந்து உலகை உலுக்கும் தீவிரவாதம் வரை இவற்றின் அடிப்படையில் இருந்து தான் தோற்றம் பெற்றவை என்பது கசப்பான உண்மையே…
காயம் என்ற சொல்லைப்பயன்படுத்துவதால் தான் மருந்து என்ற சொல்லிற்கு முக்கித்துவம் வருவது போல விரோதம் என்ற சொல்லை பயன்படுத்துவதால் தான் அங்கு சமாதானம் என்ற சொல் முக்கித்துவம் பெறுகிறது.
இவ்வாறு சமூகத்தின் மீதான பார்வையை மனிதன் தன்மீது செலுத்தும் போது அங்கு தான் அவன் தன் நிலையை உணர்ந்து கொள்கிறான்.

மன அழுத்தமும் மனிதனின் நிலையும்

ஒரு மனிதன் தனது வாழ்வில் எதிர்நோக்கும் சவால்களை எவ்வாறு முகங்கொடுக்கிறான் என்பதைப்பொறுத்து தான் மனிதனின் மன அழுத்தமும் மாற்றமடைகிறது. குறித்த ஒரு மனிதனால் சவால்களை தோற்றுவிக்க முடிகிறதெனில் அதனை வெற்றிகரமாக கையாளக்கூடிய வல்லமையும் மனிதனிடத்தே உள்ளது. இவ்வாறு தான் எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்பவன் தனக்கு ஏற்படும் மனஅழுத்தத்தையும் தன் கட்டுப்பாட்டிலே வைத்திருக்கக்கூடியவனாக இருக்கிறான்.

வாழ்வினை சுவாரசியமாக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கான படிகள்

  1. தனது ஆளுமையை அறிந்து கொள்ளல்
  2. தன்னம்பிக்கையை பேணல்
  3. முறையான திட்டமிடலும் இயலுமான முயற்சியும்
  4. முன்னைய சவால்களிலிருந்தான அனுபவங்களை பயன்படுத்தல்
  5. சுதந்திரமாக செயற்படல்.

இவ்வாறான படிகளை கடந்து வருபவன் ஆரோக்கியமான சமூகத்தின் ஒரு அங்கம் ஆகிறான். ஒரு கல்லானது பல்வேறுபட்டதாக உளியின் முற்றுகையால் அழகிய சிலையின் வடிவமைப்பை பெறுவது போல மனிதனானவனும் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி அவற்றில் தோல்வி கண்டாலும் விடாமுயற்சி மூலம் இறுதியில் நிறைவான வெற்றியை காண்கிறான். நிறைவான மனிதற்குரிய வெற்றியை காண்கிறான். நிறைவான மனிதற்குரிய பண்புகளையும் பெற்றுக்கொள்கிறான்.
குறுக்குவழியில் வெற்றியை பறிக்கும் எண்ணம் கொண்ட மனிதன் நியாயமற்ற முறையில் உன்னத மனிதன் எனும் நிலையில் இருந்து விலகி பல்வேறு பிரச்சினைகள் தோன்றுவதற்கு காரணமாகிறான். ஒரு சவாலை எதிர்கொண்டு அதில் வெற்றியடையவேண்டும் என்று எண்ணி பல்வேறு சவால்களை வரவழைத்த கொள்கிறான். இதுவே அவனது மன அழுத்தத்தின் தன்மை பெருகுவதற்கு ஏதுவாகிறது.

வெற்றிகரமான மனிதன்

வெற்றி தொடர்பான சில எண்ணக்கருக்கள்
  1. வெற்றி என்பது தெரிவு செய்யப்பட்ட சில வழிகளில் மாத்திரம் கிடைப்பது அல்ல.
  2. வாழ்வில் மிகவும் மெச்சக்கத்தக்கதான செயற்கரிய செயல்களை செய்வதால் கிடைக்கும் பேறு அல்ல.
  3. சிறந்த வழிகளில் நாம் செய்யும் ஒவ்வொரு எளிய செயன்முறையும் வெற்றியை முத்தமிடுகிறது.
  4. வாழ்வின் பெரும்பகுதியில் வியாபித்திருக்கும் வெற்றியானது நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு எளிய செயன்முறைகளையும் வெற்றியாக்குவதால் பெறப்படுகிறது.

வெற்றி என்பது முடிவிலியைப்போன்றது. வாழ்வினில்  ஒரு வெற்றியினை சுவைப்பதன் மூலம் வெற்றி என்ற எண்ணக்கருவிற்கு நிறைவான புள்ளி ஒன்றை இட்டுவிட முடியாது. வாழ்வினில் சுவைக்கும் ஒவ்வொரு வெற்றியும் வாழ்வின் வெற்றி என்ற முடிவிலி எண்ணக்கருவை அணுகிய வண்ணம் இருக்கும். குறித்த ஒரு வெற்றியானது வாழ்வின் வெற்றி என்ற முடிவிலி எண்ணக்கருவினை நிறைவுப்புள்ளி இட்டு நிறைவாக்கி விடாது. ஒவ்வொரு சவாலையும் திடமாக எதிர்கொண்டு எமது ஆளுமையின் பலத்தை பிரயோகித்தவர்களாக இருப்பதன் மூலம் வாழ்வின் வெற்றி என்ற எண்ணக்கருவை இயன்ற அளவிற்கு அணுகிக்கொண்டே செல்லலாம்.

மீண்டும் சந்திப்போம்……

Comments

Popular posts from this blog

Visual Basic - Hello World (பார்வை - 2)

அனைவருக்கும் வணக்கம்…. சென்ற பதிப்பில் Visual Basic இல் நிரலாக்க குறியீடுகள் (Programming Codings) எழுதும் பகுதியில் இருந்து இயங்குநிலைக்கு எப்படி கொண்டு செல்வது என்று பார்த்தோம். இன்றைய பதிப்பில் அவசரமாக எப்படி நிரலாக்க குறியீடுகள் எழுதுவது என்று பார்க்க முன்னர் சில பகுதிகளை குறிப்புகளாக நோக்கிவிட்டு Programme எழுத போகலாம். பொதுவாக எல்லா மொழிகளுக்கும் பலதரப்பட்ட வரையறைகள் இருக்கின்றன. உதாரணமாக…. நாம் நாளை பாடசாலை சென்றேன். இந்த வசனத்தில் ஏகப்பட்ட பிழைகள். இப்படி ஒருவர் கூறும் பட்சத்தில் அவர் என்ன கூறவருகிறார் என்று எங்களால் இனங்காணமுடியாத சூழ்நிலைகள் காணப்படுகின்றன. இதே பிரச்சினை தான் இந்த நிரலாக்க மொழி சூழலிலும் காணப்படுகின்றது. கணினி என்று நோக்கும் போது அங்கும் அதனால் விளங்க கூடிய வகையில் நாம் கூறுபவை தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மொழி பயிலும் போதும் ஆரம்பத்தில் பல இடர்பாடுகள் இருப்பது போன்று காணப்படும் மாயை காலம் செல்ல செல்ல இடர்பாடுகள் குறைந்து செல்வது போன்ற தோற்றப்பாட்டை கொண்டு காணப்படும். இங்கும் நாம் கணினியால் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அதனுடன் வரையறைகளுக்கு உட்பட்ட...

யார் ? இவர்கள் 05

பறக்கும் தட்டை மக்கள் பார்த்து சில மணிநேரம் கழித்து இன்னோர் தகவலும் வெளியானது. நியூ மெக்சிகோ அருகே உள்ள ரோஸ்வேல் என்ற இடத்தில் வட்டவடிவமான (பறக்கும் தட்டு) பெரிய பொருள் ஒன்று நொறுங்கிக்கிடப்பதாக கூறப்பட்டது. நிறைகுறைந்த அதேநேரத்தில் உறுதியான உலோகத்தில் அந்த பறக்கும் தட்டு தயாரிக்கப்பட்டு இருந்தது. எனினும் அரசு தரப்பில் ஆரம்பத்தில் இச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டது. அதேநேரம் அமெரிக்க விமானப்படை இது தொடர்பாக இரகசிய விசாரணை ஒன்றையும் உடனடியாக நடாத்தியது. அப்போது பறக்கும் தட்டுகள் வானில் பறந்தது உண்மைதான் என்று தகவல் வெளியானது. இங்கு பெறப்பட்ட அவ்வுலோகமானது மிகவும் நிறைகுறைந்ததாகவும் ஆனால் மிகவும் உறுதி கூடியதாகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வுலோக இயல்பு பூமியில் உள்ள உலோகங்களின் இயல்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டது. ஆனாலும் உடனடியாக ஏற்பட்ட பரபரப்பையும் பதற்றத்தையும் தணிப்பதாக அரசு கூறிய கருத்து “ விமானப்படையினர் தட்பவெப்பநிலை மாற்றங்களை அறிய அனுப்பிய வானிலை ஆய்வு பலூன் தான் தரையில் வீழ்ந்து நொருங்கியது ’’ மேற்கூறப்பட்ட அனைத்து சாத்தியப்பாடுகளு...

இறந்த காலத்தை அடைவோமா? ( யார் ? இவர்கள் 11 )

இறந்த காலத்தை அடைவது எப்படி? இங்கு நாம் பயன்படுத்தும் வேகம், ஒளியின் வேகத்தை அணுகும் போது எம்முடைய காலமானது மெதுவாக செல்லும். ஒளியின் வேகம் என்பதை தொடும் போது எமது காலமாற்றம் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 0 எனலாம். பெரும்பாலும் எனது கருத்துப்படி இது எக்காலத்திலும் சாத்தியமற்றது எனலாம். ஆயினும் அவ்வாறு எமது வேகம் ஒளியின் வேகத்திற்குச் சமனாயின் அவ்வாறு ஒரு வாகனத்தை இயக்குபவர் காலத்தையே வென்றவராவார். அதாவது அவர் தனது வாழ்வை வாகனத்திற்கு வெளியில் உள்ளோரின் இயல்பான காலத்தின் படி வேண்டுமானவரை அவ்வாகனத்தில் கழிக்கலாம். சரி அடுத்ததாக எமது வாகனம் ஒளியின் வேகத்தை மீறும் போதே நாம் எமது இறந்த காலத்திற்குச் செல்வோம். அதாவது நாம் கடந்து வந்த காலத்திற்கு மீண்டும் செல்லலாம். எமக்கு வேண்டுமான காலத்தில் தரையிறங்கி அங்குள்ள எமது சிறு வயதுத்தோற்றங்களை கூட சந்திக்கலாம். ஆனால் அவர்கள் ( இறந்தகாலத்திலுள்ளோர் ) தமது காலமே இயல்பான போக்குடையது என உணர்வர். எனவே அவர்களைப்பொறுத்தவரைக்கும் அங்கு செல்லும் நாம் அவர்களின் எதிர்காலத்தோர் ஆவோம். இவ்வாறு செயற்படக்கூடிய இயலுமையை எமது மனித குலம் பெறுமாயின் இதன் விளைவா...