Skip to main content

மனிதனும் வெற்றியும் (விம்பம் 02)


சமூகமும் மனிதனும்

ஆறறிவு கொண்டு அற்புத படைப்பான பூமி தனில் வலம் வரும் மனிதன் தனது ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு மூலம் அதனை பயன்படுத்தும் தன்மையைப்பொறுத்து அவன் சமூகத்தில் இடம்பிடிக்கம் நிலையானது மாற்றமடைந்து செல்கிறது.
ஒரு மனிதனின் உன்னத நிலையானது கோபம் பொறாமை விரோதம் துரோகம்சந்தேகம் அலட்சியப்போக்கு தற்பெருமை புரிந்துணர்வின்மை சகிப்புத்தன்மை அற்ற நிலை போன்ற காரணிகளால் தகர்க்கப்பட்டு மிகவும் கீழ்த்தரமான நிலையை அடைகிறான். அவன் பல்வேறு பிரச்சினைகளுள் சிக்குவது மட்டுமல்லாது பல்வேறு பிரச்சினைகளின் தோற்றத்திற்கும் விதையாகிறான்.
இவ்வாறான நிலையில் மேற்குறிப்பிட்ட பண்புகளை கொண்ட மனிதன் ஒருவன் தன் கல்வி மூலம் உயர்ந்த நிலையினை அடையும் போது அவன் வாழும் சமூகத்தின் சமநிலை கெடுகிறது. அநீதிகள் அரங்கேற காரணமாகிறது. இதுவே பல்வேறு பிரச்சினைகளின் ஆணிவேராக அமைகிறது.
ஆரம்பத்தில் சமூக பிரச்சினையாக தோற்றம் பெறுவது இவ்வாறான பல்வேறு மனிதர்களின் பிரவேசத்தால் தீவளாவிய பிரச்சினையாகவோ அல்லது சர்வதேச பிரச்சினையாகவோ உருவெடுக்கின்றன. அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் நீர்ப்பிரச்சினையில் இருந்து உலகை உலுக்கும் தீவிரவாதம் வரை இவற்றின் அடிப்படையில் இருந்து தான் தோற்றம் பெற்றவை என்பது கசப்பான உண்மையே…
காயம் என்ற சொல்லைப்பயன்படுத்துவதால் தான் மருந்து என்ற சொல்லிற்கு முக்கித்துவம் வருவது போல விரோதம் என்ற சொல்லை பயன்படுத்துவதால் தான் அங்கு சமாதானம் என்ற சொல் முக்கித்துவம் பெறுகிறது.
இவ்வாறு சமூகத்தின் மீதான பார்வையை மனிதன் தன்மீது செலுத்தும் போது அங்கு தான் அவன் தன் நிலையை உணர்ந்து கொள்கிறான்.

மன அழுத்தமும் மனிதனின் நிலையும்

ஒரு மனிதன் தனது வாழ்வில் எதிர்நோக்கும் சவால்களை எவ்வாறு முகங்கொடுக்கிறான் என்பதைப்பொறுத்து தான் மனிதனின் மன அழுத்தமும் மாற்றமடைகிறது. குறித்த ஒரு மனிதனால் சவால்களை தோற்றுவிக்க முடிகிறதெனில் அதனை வெற்றிகரமாக கையாளக்கூடிய வல்லமையும் மனிதனிடத்தே உள்ளது. இவ்வாறு தான் எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்பவன் தனக்கு ஏற்படும் மனஅழுத்தத்தையும் தன் கட்டுப்பாட்டிலே வைத்திருக்கக்கூடியவனாக இருக்கிறான்.

வாழ்வினை சுவாரசியமாக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கான படிகள்

  1. தனது ஆளுமையை அறிந்து கொள்ளல்
  2. தன்னம்பிக்கையை பேணல்
  3. முறையான திட்டமிடலும் இயலுமான முயற்சியும்
  4. முன்னைய சவால்களிலிருந்தான அனுபவங்களை பயன்படுத்தல்
  5. சுதந்திரமாக செயற்படல்.

இவ்வாறான படிகளை கடந்து வருபவன் ஆரோக்கியமான சமூகத்தின் ஒரு அங்கம் ஆகிறான். ஒரு கல்லானது பல்வேறுபட்டதாக உளியின் முற்றுகையால் அழகிய சிலையின் வடிவமைப்பை பெறுவது போல மனிதனானவனும் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி அவற்றில் தோல்வி கண்டாலும் விடாமுயற்சி மூலம் இறுதியில் நிறைவான வெற்றியை காண்கிறான். நிறைவான மனிதற்குரிய வெற்றியை காண்கிறான். நிறைவான மனிதற்குரிய பண்புகளையும் பெற்றுக்கொள்கிறான்.
குறுக்குவழியில் வெற்றியை பறிக்கும் எண்ணம் கொண்ட மனிதன் நியாயமற்ற முறையில் உன்னத மனிதன் எனும் நிலையில் இருந்து விலகி பல்வேறு பிரச்சினைகள் தோன்றுவதற்கு காரணமாகிறான். ஒரு சவாலை எதிர்கொண்டு அதில் வெற்றியடையவேண்டும் என்று எண்ணி பல்வேறு சவால்களை வரவழைத்த கொள்கிறான். இதுவே அவனது மன அழுத்தத்தின் தன்மை பெருகுவதற்கு ஏதுவாகிறது.

வெற்றிகரமான மனிதன்

வெற்றி தொடர்பான சில எண்ணக்கருக்கள்
  1. வெற்றி என்பது தெரிவு செய்யப்பட்ட சில வழிகளில் மாத்திரம் கிடைப்பது அல்ல.
  2. வாழ்வில் மிகவும் மெச்சக்கத்தக்கதான செயற்கரிய செயல்களை செய்வதால் கிடைக்கும் பேறு அல்ல.
  3. சிறந்த வழிகளில் நாம் செய்யும் ஒவ்வொரு எளிய செயன்முறையும் வெற்றியை முத்தமிடுகிறது.
  4. வாழ்வின் பெரும்பகுதியில் வியாபித்திருக்கும் வெற்றியானது நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு எளிய செயன்முறைகளையும் வெற்றியாக்குவதால் பெறப்படுகிறது.

வெற்றி என்பது முடிவிலியைப்போன்றது. வாழ்வினில்  ஒரு வெற்றியினை சுவைப்பதன் மூலம் வெற்றி என்ற எண்ணக்கருவிற்கு நிறைவான புள்ளி ஒன்றை இட்டுவிட முடியாது. வாழ்வினில் சுவைக்கும் ஒவ்வொரு வெற்றியும் வாழ்வின் வெற்றி என்ற முடிவிலி எண்ணக்கருவை அணுகிய வண்ணம் இருக்கும். குறித்த ஒரு வெற்றியானது வாழ்வின் வெற்றி என்ற முடிவிலி எண்ணக்கருவினை நிறைவுப்புள்ளி இட்டு நிறைவாக்கி விடாது. ஒவ்வொரு சவாலையும் திடமாக எதிர்கொண்டு எமது ஆளுமையின் பலத்தை பிரயோகித்தவர்களாக இருப்பதன் மூலம் வாழ்வின் வெற்றி என்ற எண்ணக்கருவை இயன்ற அளவிற்கு அணுகிக்கொண்டே செல்லலாம்.

மீண்டும் சந்திப்போம்……

Comments

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...