Skip to main content

MAAYA RAJJYAM - 15

எனது ஆய்வின் முடிவை நோக்கிய பாதை

ஆய்வின் முடிவிற்கான சாத்தியம்


உலகில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவங்களுக்கும் மிகச்சிறிய துணிக்கைகள் தொட்டு பெரிய உயிரினங்கள் வரையானவற்றின் சிறு சிறு அசைவுகளுக்கும் என்று அனைத்து விதமான நிகழ்வுகளுக்கும் விஞ்ஞான அடிப்படையிலான விளக்கத்தை வழங்கிட முடியும். இது வரை காலமும் பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் தத்துவவியலாளர்கள் என்று பலரும் வகுத்துச்சென்ற கொள்கைகள் சூழலின் நடைமுறைப்போக்கை தெளிவாக ஆராயவும் துல்லியமாக எதிர்வுகூறவும் எளிதான பல வழிகளை எமக்கு வழங்கிச் சென்றிருக்கின்றன.  அவர்கள் எமக்கு காலத்திற்கு காலம் வழங்கிச் சென்றிருக்கின்ற பல விதிகள் காரணமாக கடந்த காலத்தில் விஞ்ஞானத்தின் பல துறைகளிலும் ஆராய்ச்சியில் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம். பல தெளிவுகளை கண்டிருக்கிறோம். ஆச்சரியமாக தெரிந்த விடயங்கள் கால ஓட்டத்தில் அடங்கியிருப்பதை அனுபவ வாயிலாக அறிந்திருக்கிறோம்.


ஆகவே எந்தவொரு விடயமாக இருந்தாலும் அதற்குரிய அடிப்படை கட்டமைப்பும் அது சமூகத்தில் உண்டு பண்ணும் விளைவும் விஞ்ஞானத்தின் அம்சங்களில் சார்ந்திருக்கவேண்டும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

  • நடைமுறைவாழ்வில் நாம் அவதானிக்கும் எந்தவொரு சம்பவத்தின் பின்னணியும் விஞ்ஞானத்தைசார்ந்திருக்க முடியுமாயின் இப் பெர்முடா முக்கோணத்தின் மர்மங்களையும் ஏன் விஞ்ஞானத்தின் கொள்கைகளைக் கொண்டு ஆராயமுடியாது?

  • பெருமளவான மக்களை சிக்கல்களிலும் மர்மங்களிலும் சிக்கவைத்த இப்பகுதியின் பின்னணி ஏன் விஞ்ஞானத்தின் விதிகளில் சிக்கியிருக்கமுடியாது? 
இது போன்ற கேள்விகள் மனதில் ஏற்படுத்திய உற்சாகத்தின் விளைவாக நான் ஆராய்ந்து அறிந்த முடிவை உங்களுக்கு தெரிவிப்பதன் முன்னர் அவ்வாய்வின் முடிவை நீங்கள் முற்று முழுதாக ஏற்றுக்கொள்வதற்காக கருந்துளை தொடர்பாக உங்களுக்கு சிறு விளக்கத்தை அளிக்கலாம் என எண்ணுகிறேன்.
மேலும் கருந்துளை ஓர் கண்ணோட்டம் என நான் எனது பதிவில் குறிப்பிட்ட பகுதிகளை வாசிப்பதன் மூலம் கருந்துளை பற்றிய மேலதிக அறிவினைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

கருந்துளை


கருந்துளையானது அண்டவெளியில் மிகப்பெரிய அளவை ஆக்கிரமித்தனவாக அமைந்துள்ளது. பாரிய நட்சத்திரங்களின் தேய்வுகளின் விளைவாக இக்கருந்துளைகளின் தோற்றம் பெறுகின்றன.  குறிப்பிட்ட ஓர் எல்லைக்குள் செல்லும் அனைத்து விதமான துணிக்கைகளையும் தமது ஈர்ப்பினால் உறிஞ்சிவிடக்கூடிய ஆற்றல் கொண்டனவாக காணப்படுகின்றது. ஒவ்வொரு கருந்துளைக்கும் வேறுபடுகின்ற இவ் வெல்லையானது கருந்துளையின் நிகழ்வெல்லை எனப்படுகின்றது.

கட்புலனாகும் ஒளி உள்ளிட்ட அனைத்து மின் காந்த அலை வடிவங்களையும் கூட தன்னகத்தே உள்ளீர்த்து விடக்கூடியவையாக உள்ளது. மின்காந்த அலைகள் கூட தப்பி வெளிவரமுடியாத நிலை காணப்படுவதால் உள்ளே நடப்பது எதுவும் வெளியிலிருந்து அவதானிக்கப்படமுடியாது.
தொடரும்......

Comments

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...