Skip to main content

MAAYA RAJJYAM - 15

எனது ஆய்வின் முடிவை நோக்கிய பாதை

ஆய்வின் முடிவிற்கான சாத்தியம்


உலகில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவங்களுக்கும் மிகச்சிறிய துணிக்கைகள் தொட்டு பெரிய உயிரினங்கள் வரையானவற்றின் சிறு சிறு அசைவுகளுக்கும் என்று அனைத்து விதமான நிகழ்வுகளுக்கும் விஞ்ஞான அடிப்படையிலான விளக்கத்தை வழங்கிட முடியும். இது வரை காலமும் பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் தத்துவவியலாளர்கள் என்று பலரும் வகுத்துச்சென்ற கொள்கைகள் சூழலின் நடைமுறைப்போக்கை தெளிவாக ஆராயவும் துல்லியமாக எதிர்வுகூறவும் எளிதான பல வழிகளை எமக்கு வழங்கிச் சென்றிருக்கின்றன.  அவர்கள் எமக்கு காலத்திற்கு காலம் வழங்கிச் சென்றிருக்கின்ற பல விதிகள் காரணமாக கடந்த காலத்தில் விஞ்ஞானத்தின் பல துறைகளிலும் ஆராய்ச்சியில் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம். பல தெளிவுகளை கண்டிருக்கிறோம். ஆச்சரியமாக தெரிந்த விடயங்கள் கால ஓட்டத்தில் அடங்கியிருப்பதை அனுபவ வாயிலாக அறிந்திருக்கிறோம்.


ஆகவே எந்தவொரு விடயமாக இருந்தாலும் அதற்குரிய அடிப்படை கட்டமைப்பும் அது சமூகத்தில் உண்டு பண்ணும் விளைவும் விஞ்ஞானத்தின் அம்சங்களில் சார்ந்திருக்கவேண்டும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

  • நடைமுறைவாழ்வில் நாம் அவதானிக்கும் எந்தவொரு சம்பவத்தின் பின்னணியும் விஞ்ஞானத்தைசார்ந்திருக்க முடியுமாயின் இப் பெர்முடா முக்கோணத்தின் மர்மங்களையும் ஏன் விஞ்ஞானத்தின் கொள்கைகளைக் கொண்டு ஆராயமுடியாது?

  • பெருமளவான மக்களை சிக்கல்களிலும் மர்மங்களிலும் சிக்கவைத்த இப்பகுதியின் பின்னணி ஏன் விஞ்ஞானத்தின் விதிகளில் சிக்கியிருக்கமுடியாது? 
இது போன்ற கேள்விகள் மனதில் ஏற்படுத்திய உற்சாகத்தின் விளைவாக நான் ஆராய்ந்து அறிந்த முடிவை உங்களுக்கு தெரிவிப்பதன் முன்னர் அவ்வாய்வின் முடிவை நீங்கள் முற்று முழுதாக ஏற்றுக்கொள்வதற்காக கருந்துளை தொடர்பாக உங்களுக்கு சிறு விளக்கத்தை அளிக்கலாம் என எண்ணுகிறேன்.
மேலும் கருந்துளை ஓர் கண்ணோட்டம் என நான் எனது பதிவில் குறிப்பிட்ட பகுதிகளை வாசிப்பதன் மூலம் கருந்துளை பற்றிய மேலதிக அறிவினைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

கருந்துளை


கருந்துளையானது அண்டவெளியில் மிகப்பெரிய அளவை ஆக்கிரமித்தனவாக அமைந்துள்ளது. பாரிய நட்சத்திரங்களின் தேய்வுகளின் விளைவாக இக்கருந்துளைகளின் தோற்றம் பெறுகின்றன.  குறிப்பிட்ட ஓர் எல்லைக்குள் செல்லும் அனைத்து விதமான துணிக்கைகளையும் தமது ஈர்ப்பினால் உறிஞ்சிவிடக்கூடிய ஆற்றல் கொண்டனவாக காணப்படுகின்றது. ஒவ்வொரு கருந்துளைக்கும் வேறுபடுகின்ற இவ் வெல்லையானது கருந்துளையின் நிகழ்வெல்லை எனப்படுகின்றது.

கட்புலனாகும் ஒளி உள்ளிட்ட அனைத்து மின் காந்த அலை வடிவங்களையும் கூட தன்னகத்தே உள்ளீர்த்து விடக்கூடியவையாக உள்ளது. மின்காந்த அலைகள் கூட தப்பி வெளிவரமுடியாத நிலை காணப்படுவதால் உள்ளே நடப்பது எதுவும் வெளியிலிருந்து அவதானிக்கப்படமுடியாது.
தொடரும்......

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...